Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'' கோட்டா கோ கம" குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் புதிய பிரதமர் ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'' கோட்டா கோ கம" குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் புதிய பிரதமர் ரணில்

கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம் என புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டை மேலும் இரு வாரங்களுக்கு முடக்குங்கள் - ரணில் வலியுறுத்தல் |  Virakesari.lk

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.

இதனையடுத்து மதவழிபாடுகளில் ஈடுபட்ட ரணில் விக்கிரமசிங்கவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கோட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

“ கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம் . நாடு கட்டியெழுப்பப்பட்டு இளம் தலைமுறையினருக்கு சிறப்பான எதிர்காலம் உருவாக்கப்படும்.

ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தப்படும் எனவும் நாளை அமைச்சரவை நியமிக்கப்படாது எனவும் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
 

 

https://www.virakesari.lk/article/127388

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2022 at 01:36, கிருபன் said:

கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம்

ராஜபக்சக்களை நம்பமுடியாது, இதை அறியாதவரல்ல ரணில், எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம். ரணிலுக்கு உதவ எந்த அரசியல் கட்சியும் முன்வராது. ஆகவே கோத்தாவை கட்டுப்படுத்தும் மூக்கணாங்கயிறு இந்த கோத்தா கோ கம களமே! ஆகவே அதை அவர் கலைத்தால் அவர் பாதுகாப்பு அம்மோதான். ஆனால் இது கலைவதா, தொடர்வதா, இல்லை ரணில் கோ கம என்று மாறுமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, satan said:

ராஜபக்சக்களை நம்பமுடியாது, இதை அறியாதவரல்ல ரணில், எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம். ரணிலுக்கு உதவ எந்த அரசியல் கட்சியும் முன்வராது. ஆகவே கோத்தாவை கட்டுப்படுத்தும் மூக்கணாங்கயிறு இந்த கோத்தா கோ கம களமே! ஆகவே அதை அவர் கலைத்தால் அவர் பாதுகாப்பு அம்மோதான். ஆனால் இது கலைவதா, தொடர்வதா, இல்லை ரணில் கோ கம என்று மாறுமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நான் இங்கே கோத்தா-ரணில் என பிரித்து பார்க்கவில்லை. அவர்கள் இருவரும் தம் இன நலன் கருதி கை கோர்த்துள்ளார்கள். அவ்வளவுதான். 
சோத்து பஞ்சம் நீங்க அவரவர் தமக்குரிய அரசியலை செய்ய ஆரம்பிப்பர்.

தமிழர் பிரச்சனை நின்ற இடத்திலையே நிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

அவர்கள் இருவரும் தம் இன நலன் கருதி கை கோர்த்துள்ளார்கள். அவ்வளவுதான். 

தமிழர் பிரச்சனை எப்போதும்  கிணற்றில் போட்டு கல் தான். ஆனால் காலம் வேறு எங்கோ எழுத்துச் செல்வதுபோல் தெரிகிறது. வேறு ஒரு வழியை திறக்கும்.            

 நம் தலைவர்களும் அவர்களுக்கு கைகொடுப்பார்கள் அதில் சந்தேகமில்லை. எல்லோரும் சிங்கள மக்களின் உணர்வுகளுக்கே முன்னுரிமை அளிப்பார்கள். முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்து ராஜபக்ஸக்கள் பாராளுமன்றம் வெற்றிக்களிப்புடன் வந்தபோது, இதே ரணில் மகிந்தாவிடம்; அவர்களுக்கு எந்தவகையிலும் தமது ஆதரவை வழங்க தயாராயிருப்பதாக பலதடவை அறிவித்தார், ஆனால் தமது வெற்றிக்களிப்பில் ரணில் பங்குதாரராக  வருவதை பக்க்ஷாக்கள் விரும்பவில்லை, மக்கள் தங்களை மட்டுமே போற்ற வேண்டுமென விரும்பினர். அதனால் நீங்கள்; புலிகளுடன் சமாதானம் செய்து நாட்டை புலிகளுக்கு விற்றீர்கள் என குற்றஞ் சாட்டி ஒதுக்கினார்கள், ஆனால் ரணில் அந்த வெற்றியின் முக்கிய பங்குதாரர். மஹிந்தா பலதடவை, பகிரங்கமாய் வெளிப்படுத்தியிருந்தார்; கருணா இல்லையென்றால், அழிக்க முடியாத புலிகளை அழித்து, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியாது என்றார். அந்த கருணாவை பிரித்த பெருமை ரணிலுடையது. அதனாலே சிங்களம் கருணாவை அமைசரவையில் அங்கீகரித்தது. தமிழரை அழித்த காரணத்திற்காக, தனது இனம் என்பதற்காக ரணில் பக்க்ஷாக்களை என்றும் பாதுகாப்பார். இன்றைய பொருளாதார பிரச்சனைக்கு தாம் மட்டும் காரணமில்லை, முன்னைய அரசாட்சியாளர்களும் காரணம் என்று நழுவிக்கொள்ளும் இவர்கள், போர்வெற்றியை மட்டும் மற்றவர்களோடு பங்கு போட்டுக்கொள்ளத் தயாராயில்லை. ஆனால் மற்றவர்கள்; பொருளாதார பிரச்சனையை பொறுப்பெடுக்க தயங்கினாலும் யுத்த வெற்றியில் (தமிழரை அழித்ததில்) தங்களுக்கும் பங்குண்டு என வாதாடுகிறார்கள். அண்மையில் சந்திரிக்காவின் "நானே தேவையான போர்தளபாடங்களை வருவித்தேன் அதைவைத்தே புலிகளை அழித்தார்கள்" எனும் கூற்று நிரூபிக்கிறது. அவனவன் தன் இனத்தை பாதுகாக்க தோள் கொடுப்பான் எமக்கு தோள் தரவேண்டாம் தொந்தரவு தராமல் இருந்தாலே போதும்.                

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2022 at 16:36, கிருபன் said:

நாடு கட்டியெழுப்பப்பட்டு இளம் தலைமுறையினருக்கு சிறப்பான எதிர்காலம் உருவாக்கப்படும்

அதெப்படி என்று விளக்கமாய் சொன்னால் சிங்களவன் இவற்றை வீட்டையும் எரிப்பான் .

ஏற்கனவே தமிழர் பகிதியில்  உள்ள தீவை வித்து  போட்டினம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.