Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்திலிருந்து விலகிய இ.தொ.க தனித்துவமாக செயற்படுவதற்கு முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்திலிருந்து விலகிய இ.தொ.க தனித்துவமாக செயற்படுவதற்கு முடிவு

வீரகேசரி நாளேடு

முரண்பாடுகள் காரணமாக அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராளுமன்றத்திலும் வெளியிலும் தனித்துவமாக இயங்குவதற்கு முடிவுசெய்துள்ளது.

கொட்டகலையில் நேற்று கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற மத்திய குழுக்கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திலிருந்து இ.தொ.கா. விலகியதுடன் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட எம்.பி.க்கள் நேற்று

முன்தினம் தமது அமைச்சுப் பதவிகளையும் ராஜினாமா செய்திருந்தனர். இ.தொ.கா.வின் திடீர் முடிவினையடுத்து அரசாங்க தரப்பிலிருந்து சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவை எதுவும் கைகூடவில்லை. இந்த நிலையில் இ.தொ.கா.வின் மத்திய குழு கூட்டம் நேற்று கொட்டகலவில் இடம்பெற்றது. காலை முதல் பிற்பகல் வரை நடைபெற்ற இக்கூட்டத்தில் இ.தொ.கா.வின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அரசாங்கத்துடன் மீண்டும் இணைவதில்லை என்றும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் தனித்துவமாக இயங்குவதெனவும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள நாம் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கப் போவதில்லை. அரசிலிருந்து சுயமரியாதைக்காகவே நாம் வெளியேறியுள்ளோம். அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் வெளியேறவில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கட்சியின் பேச்சாளருமான ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.

எவ்வளவு காலத்துக்கு...???

இ.தொ.கா. விலகிய போதும் அரசு பெரும்பான்மையை இழக்கவில்லை அமைச்சர் ஜெயராஜ் அறிவிப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகியமையின் காரணமாக அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துவிடவில்லை. அரசாங்கம் ஒருபோதும் ஆட்டம் காணாது. நாங்கள் மிகவும் பலமாக இருக்கின்றோம். அரசாங்கத்தில் இன்னும் 114 உறுப்பினர்கள் உள்ளனர் என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸை மீண்டும் அரசாங்

கத்துடன் இணைத்துக்கொள்ளலாம். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகியமை குறித்து கருத்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது :

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொள்கை பிரச்சினை காரணமாக அரசாங்கத்திலிருந்து விலகவேண்டும் என்ற முடிவை எடுக்கவில்லை. இது தற்செயலாக இடம்பெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக ஏற்பட்ட சிக்கலாகும். இதனை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று நம்புகின்றோம்

http://www.virakesari.lk/

ஐ.தே.க. கூட்டணியில் இ.தொ.கா. விரைவில் இணைய வேண்டும்

அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விரைவில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியில் இணைந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கின்றோம். அவர்களை இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். அரசாங்கத்திலிருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையும் படலம் ஆரம்பித்துவிட்டது. ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிய 17 எம்.பி. க்களில் சிலர் மீண்டும் எம்முடன் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். அது தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவருக்கு வழங்கிவிட்டோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய போகின்றோம் என்ற போர்வையில் அரசாங்கம் கிழக்கின் வளங்களை சூறையாடுவதற்கு பாரிய திட்டத்தை மேற்கொண்டுள்ளது. சர்வதேச உதவிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் எவ்வாறு கிழக்கை அபிவிருத்தி செய்யும்? இது ஒரு மாயை மட்டுமேயாகும். கிழக்கில் சர்வதேச கண்காணிப்பின்றி தேர்தலை நடத்தக்கூடாது.தற்போதைய சூழலில் தேர்தல் நடத்தப்பட்டால் கிழக்கு ஈராக் போன்று ஆகிவிடும் அபாயம் உள்ளது. இலங்கை தற்போது சர்வதேச ரீதியில் நண்பர்கள் அற்ற நாடாக மாறி விட்டது என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சகோதர நிறுவனம் கிழக்கை அபிவிருத்தி செய்வதாக பிரசாரம் செய்வருகிறது. வருகிறது. முதலில் அரசாங்கம் மஹிந்த சிந்தனையின் பிரகாரம் தெற்கை அபிவிருத்தி செய்துள்ளதா? கட்டுநாயக்க கொழும்பு, மாத்தறைகொழும்பு, கண்டிகொழும்பு ஆகிய வீதிகள், வீரவில விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் என எதுவுமே இதுவரை நிர்மாணிக்கப்படவில்லை. இந்நிலையில் அரசாங்கம் எவ்வாறு கிழக்கை அபிவிருத்தி செய்யும்? சமுர்த்தி உதவி குறைக்கப்பட்டுள்ளது.பிரதேசங

இதொகாவின் கொள்கைக்கு இது முரணாக இருக்குதே எவ்வாறு அமைச்சர் பதவி இல்லாமல் இருகலாம் இது கட்சியின் கொள்கையை மீறும் செயல் இதனை வன்மையாக கண்டிக்கின்றேன்

கவலைப்படாதீர்கள் ஈழவன்,

வெகுவிரைவில் அவர்கள் தங்கள் கொள்கையை வெகுவிரைவில் காப்பாற்றுவார்கள்

மகிந்த தூதனுப்பியிருக்கிறார். வீசப்படும் எலும்புத் துண்டின் அளவு கொஞ்சம் கூட்டப்பட்டால் மீண்டும் வாலை யாட்டுவார்கள்.

இவர்களுக்கு சுயமரியாதையாவது கத்தரிக்காயாவது.

தேவை கருதி இந்தப் படத்தையும் இணைத்துள்ளேன். அருகில் நிற்பவர்களை அடையாளங் கண்டுகொள்வீரகள் என்று நினைக்கிறேன்.

[url=http://img523.imageshack.us/my.php?image=arumugamthondamanpx5.jpg][img=http://img523.imageshack.us/img523/627/arumugamthondamanpx5.th.jpg][/url]

arumugamthondamanpx5.th.jpg

Edited by இணையவன்

இ.தொ.கா மீண்டும் இணைக்க மகிந்த - ஆறுமுகம் தொண்டமான் இன்று சந்திப்பு

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகள் தொண்டமானுக்கும் இடையில் இன்று இரவு முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

இதன் போது இலங்கை தொழிலாளார் காங்கிரசை மீண்டும் அரசாங்கத்தில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சகோதரரும் சிரேஸ்ட ஆலோசகருமான பிசல் ராஜபக்சவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளை டுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளது.

எனினும் தமத கட்சிக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் எந்த விதமான முரண்பாடுகளும் கிடையாது என்றும் தாங்கள் விலகியமைக்கு பசில் ராஜபக்ச தமது கட்சி உறுப்பினர்களை அவமதிக்கம் விதமான நடந்து கொண்டமையே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று இரவு நடைபெறும் சந்திப்பின் பின்னர் இதொகா அரசாங்கத்தில் மீண்டும் இணைவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப பல லகரங்கள் கை மாறப்போகுது என்று சொல்லுங்கள் :P

அப்ப பல லகரங்கள் கை மாறப்போகுது என்று சொல்லுங்கள் :P

இ.தொ.கா நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் அமைச்சு பதவிகளைப் பொறுப்பேற்பர்

அமைச்சு பதவிகளை இராஜினாமாச் செய்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது அமைச்சு பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இதற்றாக இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

-pathivu-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.