Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மனித உரிமை மீறல்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் மேஜிக் செய்து மாற்ற முடியாது" - அம்பிகா சற்குணநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கை மனித உரிமை மீறல்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் மேஜிக் செய்து மாற்ற முடியாது" - அம்பிகா சற்குணநாதன்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ரணில் விக்ரமசிங்க

 

படக்குறிப்பு,

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க

(இன்றைய (மே 17) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார் என்பதற்காக நாட்டில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை மாயாஜால வித்தைகளை செய்து மாற்றிவிட முடியாது என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அச்செய்தியில் அவர் தெரிவித்ததாக, "மனித உரிமை நிலவரங்களில் ஏற்படும் முன்னேற்றங்கள் தனிமனிதரில் தங்கியிருப்பதில்லை. புதிய ஒருவர் பதவிக்கு வருவதால் மாத்திரம் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாது.

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார் என்பதற்காக மாயாஜால வித்தைகளை செய்து மனித உரிமைகள் செயற்பாடுகளில் அவரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கூட போலீஸ் வன்முறைகள் குறைந்திருந்த போதிலும் முற்றாக இல்லாமல் போகவில்லை. மனித உரிமைகள் தொடர்பான நிலவரங்கள் எனும்போது அது தனிமனிதரில் தங்கியிருப்பதில்லை. ஒட்டுமொத்த மக்களின் மனநிலையில் மாற்றங்கள் வர வேண்டும். குறிப்பாக, பொறிமுறையில் மாற்றம் ஒன்றே நாட்டுக்கு அவசியம்."

 

அம்பிகா சற்குணநாதன்

"இம்மாதம் 9ஆம் தேதி அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. மாறாக அரசியல்வாதிகளின் வீடுகளைத் தாக்கியதாகவும் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும் பலரை போலீசார் கைது செய்துவருகிறார்கள். நியாயமான சந்தேகத்தின் அடிப்படையிலோ அல்லது ஆதாரத்தின் அடிப்படையிலோ இந்த கைதுகள் இடம்பெறவில்லை என்பதுபோலவே எமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன" என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தீர்வு விவகாரத்தில் இந்தியாவின் பொறுப்பை நிறைவேற்றுங்கள்"

 

இரா.சம்பந்தன்

பட மூலாதாரம்,ISHARA KODIKARA

 

படக்குறிப்பு,

இரா.சம்பந்தன்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இந்தியா அவதானம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் இவ்விடயத்தில் இந்தியாவுக்கு இருக்கின்ற பொறுப்பை உரியவாறு நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்றும் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.

இந்திய தூதுவருடன் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்னிறுத்திய நடவடிக்கைகள் தற்போது ஸ்தம்பித்துள்ளது என்று அவரிடம் சுட்டிக் காட்டியதாகவும் இவ்விடயத்தில் இந்தியாவுக்கு இருக்கின்ற பொறுப்பை உரியவாறு நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியதாகவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்ததாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "தற்போது நாட்டில் குழப்பகரமான சூழ்நிலை நிலவுவதால், தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால் இதுகுறித்து இந்தியா அவதானம் செலுத்த வேண்டும் என்றும் தூதுவர் கோபால் பாக்லேவுடம் சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.

அதற்கு பதிலளித்த தூதுவர், இப்போது நாட்டில் இடம்பெற்று வரும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்துவருவதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை இச்சந்திப்பின்போது புதிய பிரதமரின் நியமனம் தொடர்பில் தூதுவர் கோபால் பாக்லே ஏதேனும் தெரிவித்தாரா என்று எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோது, 'இல்லை' என்று பதிலளித்த அவர், இவ்விடயத்தில் தமது நிலைப்பாடு என்னவென்பதைத் தாம் தூதுவரிடம் தெளிவுபடுத்தியதாகக் கூறினார்" என, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நிற்க வேண்டாம்"

 

இலங்கை பொருளாதார நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

எரிபொருளுடன் மேலும் 3 கப்பல்கள் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ள மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இன்னும் மூன்று தினங்களுக்கு பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளதாக, 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்காக மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும், "நேற்று டீசல் கப்பல் ஒன்று நாட்டை வந்துடைந்துள்ளதுடன் விரைவில் மேலும் 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளன.

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கவுள்ள மூன்று எரிபொருள் கப்பல்களே விரைவில் நாட்டுக்கு வரவுள்ளன" என தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-61474971

  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2022 at 07:21, ஏராளன் said:

"இம்மாதம் 9ஆம் தேதி அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. மாறாக அரசியல்வாதிகளின் வீடுகளைத் தாக்கியதாகவும் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும் பலரை போலீசார் கைது செய்துவருகிறார்கள்.

போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் செய்தவர்களையும் கைது செய்ய வேண்டும், வீடுகள் பொது சொத்துகள் எரித்தவர்களையும் கைது செய்ய வேண்டும்.  ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர் தீவைத்து எரிப்பர்களுக்கு ஆதரவாக நிற்பது சரியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அம்பிகா, சும்மா போன்றவர்கள்  தமிழர்களின் தொடரும் இன அழிப்பை மனித உரிமை மீறல் என்று மலினப்படுதுவதை கைவிட வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.