Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரண்டு வருட, நிவாரணத் திட்டம் உள்ளடங்கலாக.... ஆறு வாரங்களுக்குள், இடைக்கால வரவுசெலவு திட்டம் : பிரதமர் உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே பதினெட்டு:  ரணில் நினைவுகூர்த்தலைத் தடுப்பாரா? நிலாந்தன்.

இரண்டு வருட, நிவாரணத் திட்டம்  உள்ளடங்கலாக.... ஆறு வாரங்களுக்குள், இடைக்கால வரவுசெலவு திட்டம் : பிரதமர் உறுதி

ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அந்தவகையில் இடைக்கால வரவுசெலவு திட்டத்தின் மூலம் நாட்டின் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு உதவ நிதி கிடைக்கும் என்று கூறினார்.

உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை குறைத்து இரண்டு வருட நிவாரணத் திட்டமாக இந்த இடைக்கால வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்போது பணவீக்கம் அதிகரிக்கும் என்றும், இதனால் போராட்டங்கள் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மாதங்களில் வருடாந்த பணவீக்கம் 40% ஐ தாண்டும் என்றும் இது ஏற்கனவே அதிக விலைகள் காரணமாக இன்னல்களை அனுபவிக்கும் குடும்பங்களுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

மார்ச் மாதத்தில் 21.5% ஆக இருந்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு 33.8% ஆக உயர்ந்துள்ளது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, புதிய நிதியமைச்சர் ஒருவர் இன்று நியமிக்கப்படுவார் என்றும் அது ரணில் விக்ரமசிங்க என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1283690

  • கருத்துக்கள உறவுகள்

பணவீக்கம் அதிகரிக்கும் – ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கும் – ரணில் ஆறுவாரங்களில் இடைக்கால வரவு செலவுதிட்டம்

 
வரவிருக்கும் கடினமான நாட்களை பார்க்கும்போது ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புகள் இருக்கும்,மக்கள் கஷ்டப்படும்போது அவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது இயற்கையான விடயம்
ரொய்ட்டர்
ranil-may251-300x200.jpg
 
அடுத்த ஆறுவாரங்களில் இடைக்கால வரவுசெலவுதிட்டத்தினை சமர்ப்பிப்பேன் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இரண்டுவருட நிவாரண திட்டத்திற்கு நிதியை வழங்குவதற்காக உட்கட்டமைப்பு திட்டங்களை குறைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களிற்கு முன்னர் பிரதமராக பதவியேற்ற ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் நெருக்கடிக்கு தீர்வை காணமுயலும் தருணத்தில் பணவீக்கம் அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளார்.
வீதிகளில் மேலும் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அமைதியின்மை கட்டுக்கடங்காததாக மாறாது என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் 22 மில்லியன் மக்களை கொண்ட நாட்டில் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளவர்களிற்குநிதிஉதவியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் கடினமான நாட்களை பார்க்கும்போது ஆர்;ப்பாட்டங்கள் எதிர்ப்புகள் இருக்கும்,மக்கள் கஷ்டப்படும்போது அவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது இயற்கையான விடயம் என தெரிவித்துள்ளார்.
ஆனால் அது அரசியல் அமைப்பினை பலவீனப்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
gas12-300x204.jpg
 
இடைக்கால வரவுசெலவுதிட்டத்தில் செலவுகளை குறைப்பது முடிந்தவரை செலவுகளை குறைத்து நலன்புரித்திட்டங்களிற்கு மாற்றுவது ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எங்களிற்கு ரூபாய் வருமானமில்லை,தற்போது மேலும் ஒரு டிரில்லியன் ரூபாய்களை அச்சிடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வருடாந்த பணவீக்கம் எதிர்வரும் மாதங்களில் 40 வீதமாக அதிகரிக்கும் என எச்சரித்துள்ள பிரதமர் ஏற்கனவே கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள இலங்கையின் குடும்பங்களின் மீது அழுத்தங்கள் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நிவாரண நடவடிக்கைகளிற்கான பணத்திற்காக தனது அமைச்சு நாட்டின் ஊதிப்பெருத்துள்ள அரசாங்க துறையில் சாத்தியமான செலவீனங்களை குறைப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
ranil-may25-300x200.jpg
 
உதாரணத்திற்கு சுகாதார அமைச்சில் செலவீனங்களை குறைக்கமுடியாது – கல்வியமைச்சில் ஓரளவு செய்யலாம்:ஆனால் ஏனைய அமைச்சுகளில் செலவீனங்களை குறைக்கவுள்ளோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
 

 

https://thinakkural.lk/article/179322

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

உதாரணத்திற்கு சுகாதார அமைச்சில் செலவீனங்களை குறைக்கமுடியாது – கல்வியமைச்சில் ஓரளவு செய்யலாம்:ஆனால் ஏனைய அமைச்சுகளில் செலவீனங்களை குறைக்கவுள்ளோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செலவீனங்ளை குறைத்தாலே…. பெரிய தொகையை சேமிக்க முடியம்.
ஆனால்… அதில் கை வைத்து, படையினரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று பயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.