Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயிஷாவின் மரணத்திற்கு... நீதி கோரி, 8 மாவட்டங்களில் நாளை போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிஷா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதா?- பொலிஸ் அதிகாரி வெளியிட்ட தகவல்!

ஆயிஷாவின் மரணத்திற்கு... நீதி கோரி, 8 மாவட்டங்களில் நாளை போராட்டம்!

சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வடக்கு, கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மன்னார் பஜார் பகுதியில் நாளை காலை 10 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு -கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண்கள் வலையமைப்பினர், சமூக ஆர்வலர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றினைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

தொடர்ச்சியாக நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் அவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்கு விரைவில் நீதி நிலைநாட்டப்படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 8 மாவட்டங்களில் நாளை போராட்டம் இடம்பெறவுள்ளது

எனவே பொதுமக்கள் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க ஒன்றிணையுமாறு பெண்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

https://athavannews.com/2022/1284583

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிஷாவுக்கு நீதி வேண்டும் - த.ம.வி.பு.கட்சி

வ.சக்தி 

பாத்திமா ஆயிஷாவை  கொலை செய்த குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலம் அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சிறுமி ஆயிஷா கடந்த மே 27 ஆம் திகதியன்று காணாமல் போனநிலையில் மறுதினம் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச் சிறுமி செய்த தவறுதான் என்ன இக்கொடுமையை எந்த மனித நேயம் உள்ளவர்களால் ஒருபோதும்  தாங்கிக்கொள்ள முடியாது.

பல எதிர்கால கனவுகளோடு மலர வேண்டிய இச் சிறுமி இன்று கருகி இருக்கின்றாள். இச் சிறுமியே எமது மண்ணின் வரலாற்றில் கருகிய இறுதி மொட்டாக இருக்க வேண்டும். இந்த இழப்பினை ஆறுதல் படுத்துவதற்கு வார்த்தைகளே இல்லை. 

அந்தச் சிறுமி வீடு திரும்பி வந்து சேரவேண்டும் என எல்லோரும் பிரார்த்தனை செய்த வேளையில் எமது நெஞ்சங்களில் இடி விழுந்தது போல் அவரது மரணச் செய்தி எம்மை உறைய வைத்துள்ளது.  இத்தகைய கொடூர செயல்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்என்பதோடு  சிறுவர்களை மதித்து அவர்களின் உரிமைகளைப் பேணி சிறந்த ஒரு எதிர்கால சந்ததியினை உருவாக்க வேண்டியது எம் அனைவரதும் தலையாய கடமையாகும்.

அதேவேளை பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், வன்முறைகள் இடம் பெறுகின்ற போது அதனை விசாரிப்பதற்கும் தண்டனை வழங்குவதற்கும் தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதனை எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. 

இவ்வாறு தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்படுமிடத்து குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை துரிதமாக கண்டறியமுடிவதுடன் மிக விரைவில் தீர்ப்பு வழங்கக் கூடியதாக அமையும்.

பாத்திமா ஆயிஷாவின் பிரிவால் தவிக்கும் பெற்றோர் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் சிறுமியின் ஆத்மா சாந்திக்காகவும் இறைவனை பிரார்த்திப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (R)

 

https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/ஆயிஷாவுக்கு-நீதி-வேண்டும்-த-ம-வி-பு-கட்சி/73-297549

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழிலும் போராட்டம்!

அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்குக் கிழக்கு பெண்கள் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில்
யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் ஆயிஷாவின் மரணத்துக்கு நீதி கோரி கோஷங்களை எழுப்பினர்.

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் 8 மாவட்டங்களில் ஆயிஷாவிற்கு நீதி கோரி இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

https://athavannews.com/2022/1284784

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.