Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாராளுமன்றத்தில் 21 ஆவது திருத்தம் தொடர்பிலான பிரதமரின் சிறப்பு இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றத்தில் 21 ஆவது திருத்தம் தொடர்பிலான பிரதமரின் சிறப்பு இன்று

(எம்.மனோசித்ரா)

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் என்பன தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.

அத்தோடு பிரதமரின் உரை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மறுசீரமைக்கப்பட்ட நிவாரண வரவு - செலவு திட்டம் குறித்தும் கருத்து வெளியிட்டிருந்தார். 

இந்நிலையிலேயே இன்று பொருளாதார நிலைமை தொடர்பில் பிரதமர் பாராளுமன்றத்தில் விசேட உரையை ஆற்றவுள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் , அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடும் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

அத்துடன், 2020ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளைகள் நாளைய விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்படவுள்ளது. 

இன்றைய அமர்வில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2274/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி மற்றும் கடன் எல்லையை ஒரு ட்ரில்லியன் ரூபாவினால் உயர்த்துவதற்கு உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் என்பன விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளன.

அதன் பின்னரே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விசேட உரை நிகழ்த்தப்படும். அத்தோடு நாளை மறுதினம் வியாழக்கிழமை இலங்கை மின்சாரம் திருத்தச்சட்டமூலம் (இரண்டாவது வாசிப்பு) மற்றும் பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன பிற்பகல் 4.30 மணி வரை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.

அதன் பின்னர் 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், 4.50 முதல் 5.30 வரை  எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேர விவாதம் நடைபெறும். 

மேலும் அண்மையில் இடம்பெற்ற குழப்பமான சூழ்நிலையின் போது படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தொடர்பான அனுதாபப் பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) மற்றும் பொது மனுக்கள் பற்றிய குழு போன்ற குழுக்களால் மீளாய்வுகளை மேற்கொள்ளும்போது பாராளுமன்றத்தில் அவற்றை பலப்பலப்படுத்துவதற்காக சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன முன்வைத்த திருத்தங்கள் தொடர்பில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/128960

அனைவருக்கும் மூவேளை உணவு: பிரதமர்

அனைவருக்கும் மூன்று வேளை உணவு வழங்கும் முறையை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  தேவைப்படுபவர்களுக்கு மானியம் வழங்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாக பிரதமர் கூறுகிறார்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், உதவி வழங்கும் நாடுகளில் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளே முன்னணியில் இருக்கின்றது என்றார்.

இரண்டு ஹெக்டேயருக்கும் குறைவான காணியில் விவசாயம் செய்யும் விவசாயிகள் பெற்றுக்கொண்டுள்ள விவசாயக்கடன் இரத்துச் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், மாற்று சிந்தனையில் யோசிப்போம்.

நம் நாடு இப்போது செயலிழந்த கணனி போன்றுள்ளது. அதனை மறுசீரமைக்க வேண்டும். அது இயங்கத் தேவையானவற்றை பொருத்துவதற்கு முன்னர், அதனை மறுசீரமைக்க வேண்டும்.   அதனையே நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். இன்றேல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றார்.

 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அனைவருக்கும்-மூவேளை-உணவு-பிரதமர்/150-297990

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய முன்னிலையில் இன்று மாலை ரணில் பிரதமராக பதவிப்பிரமாணம்?

குறைநிரப்பு பிரேரணை... இன்று முன்வைப்பு – ரணில் விசேட உரை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் 695 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பான விவாதம் நாளைய தினம் நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

பின்னர் அவரது அறிவிப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்றெவுள்ளது

https://athavannews.com/2022/1285720

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் சமகால பொருளாதார நிலைமை, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து நாளை பிரதமர் விசேட உரை!

மூன்று வேளை, உணவை வழங்க... நடவடிக்கை – பிரதமர் உறுதி

அனைவருக்கும் மூன்று வேளை உணவை வழங்கும் திட்டம் குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேவை ஏற்படும் பட்சத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு பெறுவதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கும் நிலை காணப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனவே குறித்த காலகட்டத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம் என்றும் பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை நாட்டு மக்களின் நலனுக்காக அரசாங்கம் எடுக்கும் நலத்திட்டங்களுக்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

https://athavannews.com/2022/1285800

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.