Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழச் செய்தி மடல்: பிரிக்கமுடியாத இரத்த உறவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழச் செய்தி மடல்: பிரிக்கமுடியாத இரத்த உறவு!

-(எஸ்.எம்.ஜி)

"பிரிவினைவாதப் பயங்கரவாதிகள்" - இப்படித்தான் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சிங்கள ஆதிக்க சக்திகளும். இனவெறி ஊடகங்களும் முத்திரை குத்தி உலக முழுவதும், பிரசாரம் செய்து வருகின்றன. இந்தப் பிரச்சாரம் ஓரளவு - ஓரளவல்ல பெருமளவு வெற்றியும், பெற்றிருக்கிறதென்றே சொல்லவேண்டும்.

இதனால்தான் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டுமென்று கிளிப்பிள்ளைகள் போல வெளிநாடுகள் பலவும் திரும்பத் திரும்பச் சொல் லிக்கொண்டு வருகின்றன. இதே சமயம் இலங்கை பிளவுபடுவதையோ இலங்கையின் ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் ஏற்படுவதையோ ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இலங்கையின் அயல்நாடுகளும், உலக நாடுகள் பலவும் வற்புறுத்தி வருவதும், தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் சிங்கள ஆதிக்க சக்திகள் மேலும் மேலும் உற்சாகமடைந்து தமிழ் இன ஒழிப்பிலும் தமிழ் மண் அபகரிப்பிலும் புதிய புதிய உத்திகளைக் கையாளத் தொடர்ந்து ஈடுபடத் தொடங்கினர்.

சமீப காலத்தில் ஒரேயொரு சிறு மாறுதல் உலக நாடுகளின் போக்கில் வெளிப்படையாகத் தெரிகிறது. பயங்கரவாதிகள், பயங்கரவாதிகள், என்று எதற்கெடுத்தாலும் திருப்பித் திருப்பிச் சொல்லிவரும் சிங்கள ஆதிக்க சகதிகளினதும் சிங்கள இனவெறி ஊடகங்களினதும் பிரச்சாரத்துக்கு முன்பு பக்கப்பாட்டு பாடிய உலக நாடுகள் பலவற்றின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் மட்டுமல்ல அதிகாரிகளும் கூட இன்று பக்கப்பாட்டை நிறுத்தி மெளனம் காக்கின்றனர்! உணவில் தன்னிறைவு என்று சொல்லி சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயகா கிழக்கில் விவசாய விஸ்தரிப்புத் திட்டங்களைத் தொடங்கினார். கல்லோயா, இங்கினியாகல, அல்லை, கந்தளாய் என பழைய குளங்களைப் புதுப்பித்து இப்பகுதிகளில் திட்டமிட்டு குடியேற்றங்கள் தொடங்கப்பட்டன. இவை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாக உருவாகின.

இத்திட்டங்களுக்கு வழிகாட்டியாக இருந்த கணித மூளை என்ற அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் பின்னர், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழ் ஈழம் அபகரிக்கப்பட்டு வருவதை உணர்ந்து 1960ஆம் ஆண்டில் தமிழ் மண்ணுக்கு விடுதலைகோரி ஈழ ஒற்றுமை முன்னணி என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து ஈழவிடுதலைக் கொள்கையை முன் வைத்து தேர்தலில் நின்றார். தமிழ் இனம் ஒற்றுமைப்படாததால் அவர் வெற்றியீட்டவில்லை. அப்பொழுது செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியும் சுந்தரரின் ஈழவிடுதலையை எதிர்த்து, சமஷ்டிக் கோரிக்கையை முன் வைத்துத் தேர்தலில் போட்டியிட்டது.

சிங்கள ஆதிக்க சக்திகளுக்கும் இனவெறியர்களுக்கும் தமிழ் மக்களுக்காக உரிமைக்குரல் கொடுக்கும் அனைவரும் அந்த அமைப்புகளும் பிரிவினைவாதிகளாகத்தான் தோற்றமளிப்பார்கள். தமிழர்கள் சிங்களவர்களை போல் சுதந்திர இலங்கையில் தமது தாயக மண்ணில் சுயாட்சியுடன் சகல உரிமைகளுடனும் வாழ வேண்டுமானால் இணைப்பாட்சி என்ற சமஷ்டி ஆட்சி அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தமிழ் அரசுக் கட்சி கோரியது, போராடியது, ஜனநாயக முறையில் மக்கள் முன் இக்கோரிக்கையை வைத்தும் பொதுத் தேர்தல்களிலும் அங்கீகாரம் பெற்றது.

இது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தது. சிங்களம் மட்டும் - சட்டத்தைக் கொண்டு வந்த பண்டாரா நாயகா மட்டும் செல்வ நாயகத்துடன் பேச்சு நடத்தி ஓர் ஒப்பந்தமும் செய்தார். புத்தபிக்குகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து எதிர்த்தனர். இந்த ஒப்பந்தம் கிழித்து எறியப்பட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களின் அங்கீகாரம் பெற்ற தமிழ்த் தலைவர்களுடன் பேச்சுநடத்துவதற்கு சிங்கள ஆதிக்க சக்திகள் ஒரு போதுமே முன் வந்தது இல்லை. கோடாரிக் காம்புகள் காலத்துக்குக்காலம் தோன்றுவார்கள். இவர்களைச் சிங்கள ஆதிக்க சக்திகள் தங்கள் வசப்படுத்தி தமிழ் மக்களுக்கெதிராகப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதுவே இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமது குள்ளநரித் தந்திரம் வெற்றி பெற்றதாக கோடாரிக்காம்புகளும் சிங்கள ஆதிக்க சக்திகளும் கருதிச் செயல்பட்டுக்கொண்டிருக்கின

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.