Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரஷ்யாவிடம் இருந்து... எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு, இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாடு ஒரே சட்டம் – ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

ரஷ்யாவிடம் இருந்து... எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு, இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

நீண்டகால அடிப்படையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை உடன் ஆரம்பிக்குமாறு  ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

9 சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

எனவே  தங்களது கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விரைவில் சந்தர்ப்பம் வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், நாட்டில்  நிலவும்  எரிபொருள் நெருக்கடி   தொடர்பில்  ஆட்சியாளர்கள் பொறுப்பின்றி  செயற்படுவதாகவும்  09 கட்சிகளின் தலைவர்கள்  குற்றம் சுமத்தியுள்ளனர்.

https://athavannews.com/2022/1286371

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பில் பிரதமருக்கும் வலுச்சக்தி அமைச்சருக்குமிடையே பரஸ்பர கருத்து வேறுபாடு - விமல் தகவல்

(இராஜதுரை ஹஷான் ,எம்.ஆர்.எம்.வசீம்)

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிடும் கருத்திற்கிடையில் பரஸ்பர வேறுபாடுகள்  உள்ளன.

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்தால் அமெரிக்காவை  பகைத்துக்கொள்ள நேரிடும் என  பிரதமர் குறிப்பிட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், 

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வது குறித்து கலந்துரையாடினோம்.

தற்போதைய நிலையில் ரஷ்யாவிடமிருந்து  எரிபொருளை கொள்வனவு செய்தால் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள நேரிடும் என பிரதமர் குறிப்பிட்டார். 

தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது.

எரிபொருள்,எரிவாயு மற்றும் உரம் ஆகியவற்றினை பெறுவதில் நாம்  பாரிய நெருக்கடியை எதிர் கொண்டுள்ள போது ரஷ்யாவிடமிருந்து நாம் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்வது குறித்து அவதானம்  செலுத்த வேண்டும் என்றார்.

எரிபொருள் கொள்வனவு தொடர்பில் பல்வேறு தரப்பினர் களிடமிருந்து  யோசனைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வது குறித்தும் யோசனை முன்வைக்கப்பட்டு அடுத்தக்கட்ட தீர்மானம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என  வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர  சபையில் தெரிவித்தார்.
 

https://www.virakesari.lk/article/129208

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.