Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆன்லைன் ரம்மி திறன்களை வளர்க்கிறதா? நீதிபதி சந்துரு தலைமையில் ஆய்வுக்குழு அமைத்த தமிழ்நாடு அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்லைன் ரம்மி திறன்களை வளர்க்கிறதா? நீதிபதி சந்துரு தலைமையில் ஆய்வுக்குழு அமைத்த தமிழ்நாடு அரசு

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இணையத்தில் சூதாட்டம் மாதிரிப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இணையத்தில் சூதாட்டம் மாதிரிப் படம்

ஆன்லைன் ரம்மியில் பணத்தை ஏமாந்து, பலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு அந்த விளையாட்டின் அம்சங்களை ஆராய்வதற்காக, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக தமிழ்நாடு உள்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு உண்மையில் திறன்களை வளர்க்கிறதா அல்லது இழப்புகளை ஏற்படுத்துகிறதா என்று கண்டறியவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து பல தற்கொலை சம்பவங்களில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகளவில் பணத்தை இழந்தது காரணமாக உள்ளதைத் தொடர்ந்து புதிய சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு கொண்டுவரவுள்ளது.

அது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விளையாட்டில் எந்த விதத்தில் பணத்தை மக்கள் ஏமாறுகிறார்கள், என்ன விதமான பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என விரிவான ஆய்வை நீதிபதி சந்துரு தலைமையிலான குழு கண்டறியவேண்டும் என்றும் அந்த முடிவு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த விளம்பரங்களை எவ்வாறு தடை செய்வது, மக்கள் எவ்வாறு சூதாட்டத்திற்கு அடிமையாகிறார்கள் உள்ளிட்ட காரணங்களை அந்தக் குழு தகவல்களை சேகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏமாந்தவர்கள் குறித்த வழக்குகள், தற்கொலை உள்ளிட்ட விவரங்களை காவல்துறை இந்த குழுவிடம் அளிக்கவேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

 

நீதிபதி சி. சந்துரு

இதுவரை தமிழ்நாட்டில் 23 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்துள்ளதால், காலம் தாழ்த்தாமல் தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள குறிப்பில், ''ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்சியாக நடைபெற்று வருகின்றன. இத்தகைய சம்பவங்களால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர், ஆன்லைன் சூதாட்டத்தின் பெரும் ஆபத்தை உணர்ந்து தடை செய்ய இதை விடவா இந்த அரசுக்குக் காரணிகள் தேவை,'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ''ஆய்வுக் குழு அமைப்பதன் மூலம் இது காலம் தாழ்த்தப்படுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது, இந்த விடியா அரசு குழு அமைப்பதிலேயே முனைப்பு காட்டுவதை விட்டு விட்டு, நிரந்தர தீர்வுக்காக உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய அவசர சட்டத்தை இயற்றி, இனி இந்த சூதாட்டத்தால் எந்த ஓர் உயிரிழப்பும் நேராத வண்ணம் மக்களைக் காக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்,'' என்றும் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-61768888

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்லைன் ரம்மி விளையாட தடை! மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

 


ஆன்லைன் ரம்மி தொடர்பான அரசாணையை வெளியிடுவதற்கு இரண்டு வாரங்களில் பரிந்துரைகளை வழங்க சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவை அமைப்பதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டவை பின்வருமாறு;

  • இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
  • இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் உயரத் தொடங்கியது.
  • இதில் பணத்தை இழப்போர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • எனவே, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் பெரிதளவில் வலுத்து வருகின்றன.

I

கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இச்சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அதனை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று ஆட்சி செய்யும் தமிழக அரசு ரம்மி விளையாட்டுக்கு எதிராகச் சட்டத்தினை இயற்ற குழு ஒன்றை அமைத்துள்ளது.

 

 

இதேபோல், கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இத்தகைய செய்ல்பாடுகளால், ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டமானது தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. குழுவின் உறுப்பினர்களில் ஐஐடி நிபுணர் சங்கரராமன், சினேகா நிறுவனர் மற்றும் மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார் மற்றும் கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே ஆகியோர் அடங்குவர்.

அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராய வேண்டும் எனவும், இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆய்ந்து சட்டத்தினை இயற்ற வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரம்மி ஆடினால் கடுமையான தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

https://www.dinamani.com/tamilnadu/2022/jun/10/online-rummy-ban-cm-orders-setting-up-of-special-legal-panel-3859583.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.