Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்வாங்கிய கடல் - அச்சத்தில் மீனவர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 உள்வாங்கிய கடல் - அச்சத்தில் மீனவர்கள்!

உள்வாங்கிய கடல் - அச்சத்தில் மீனவர்கள்!

 

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக கடல் பகுதி வழக்கத்தை விட இன்று (15) காலை உள் வாங்கி உள்ளதால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி உள்ளதோடு, அடிக்கடி கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசால் அறிவித்துள்ள மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று (14) மாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீன் பிடிக்க சென்ற ஒரு சில மீன்பிடி விசைப் படகுகள் மீன் பிடித்து விட்டு இன்று (15) காலை மீன் களை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு எடுத்து வந்தனர்.

இந்நிலையில் மீன் பிடித்து வந்த மீன்பிடி படகுகள் கடல் உள்வாங்கியதால் தரை தட்டி படகு சேதமடையும் என்ற அச்சத்தில் படகை மீனவர்கள் துறைமுகம் கொண்டு வந்தனர்.

எனவே, தமிழக அரசு பழமையான ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தை உடனடியாக தூர்வாரி பேரிடர் காலங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வழி வகை செய்து தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கடல் உள்வாங்கி வந்த நிலையில் கடந்த வாரம் கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது ஆனால் தற்போது இன்று காலை முதல் தொடர்ந்து கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் வழக்கத்திற்கு மாறாக கடல் உள் வாங்கியுள்ளதால் கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் தரை தட்டி நிற்கிறது.
 

-மன்னார் நிருபர் லெம்பட்-

http://tamil.adaderana.lk/news.php?nid=162370

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nunavilan said:

உள்வாங்கிய கடல் - அச்சத்தில் மீனவர்கள்!

உள்வாங்கிய கடல் - அச்சத்தில் மீனவர்கள்!

 

கடல் உள்வாங்கினால்... அனுபவம் இல்லாதவர்கள், 
உள்ளுக்கு... இறங்கி விடுப்பு பார்க்கக் கூடாது.
திடீரென்று... பயங்கர வேகத்தில், தண்ணீர் அதே இடத்துக்கு வரும்.

இராமேஸ்வர செய்தியை... மன்னார் நிருபர் தெரிவிக்கின்றார்.
மன்னாரில் இருந்து பார்க்க, இராமேஸ்வரத்தில்   கடல் உள்வாங்கின விஷயம்...
இவருக்கு எப்படி தெரிந்தது. 😛 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.