Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜூலையில் மட்டும் 60 இராணுவத்தினர் பலி- 223 பேர் படுகாயம்

Featured Replies

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சிறிலங்கா இராணுவத்தினர் 60 பேர் உயிரிழந்திருப்பதாகவும், முப்படையினர் மற்றும் காவல்துறையினர் 223 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இராணுவத்தினர் குறித்த விபரங்கள் அடங்கிய அறிக்கையை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ரட்ணசிறி விக்கிரமநாயக்க தாக்கல் செய்து பேசியதாவது:

கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். அங்கே காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் கிழக்கை கைப்பற்றியுள்ளனர். அதற்காக பலர் தமது உயிரை தியாகம் செய்ததோடு சிலர் ஊனமுற்றுள்ளனர். புலிகள் தற்போது மறைந்திருந்து தாக்குதல் நடத்துகின்றனர். இத்தகைய தாக்குதல்களை நாங்கள் முறியடிப்போம்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60 இராணுவத்தினர் உயிரிழந்தனர். முப்படையினரும் காவல்துறையினரும் உள்ளடங்கலாக 223 பேர் காயமடைந்துள்ளனர் என்றார் அவர்.

-புதினம்.

  • கருத்துக்கள உறவுகள்

முப்படையினரை விடவும் அதிகமான தமிழ் மக்கள் கடந்த மாதம் பலி.

ஜ வெள்ளிக்கிழமைஇ 10 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் கடந்த ஒரு மாதத்தில் பொலிஸார் மற்றும் முப்படையினர் 60 பேரும் பொது மக்கள் 41 பேரும் கொல்லப்பட்டிருப்பதாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபையில் தெரிவித்தார். பொலிஸார் உட்பட முப்படையினர் 223 பேரும் பொது மக்கள் 32 பேரும் காயமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தவுள்ளோம். திருகோணமலையில் 24 மணி நேரமும் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். கிழக்கின் எழுச்சி என்ற பெயரில் மின்சாரம் இல்லாத பிரதேசங்களில் மின்சாரம் வழங்குவது உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் கிழக்கில் மேற்கொள்ளப்படவுள்ளன. மக்களை பாதுகாப்பதற்காகவே இராணுவத்தினர் பல சிரமங்கள் துன்பங்களுக்கு மத்தியில் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றினார்கள். அதற்காக பலர் தமது உயிரை தியாகம் செய்தனர். சிலர் அங்கவீனமாகினர். ஆகவேதான் நாங்கள் இராணுவத்தினரை பாராட்டுகின்றோம்; மதிக்கின்றோம் என்றதுடன் கடந்தமாதம் 60க்கு மெற்பட்ட பொதுமக்கள் கொல்லபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://nitharsanam.com/?art=24083

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.