Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒவ்வொரு நாளும் சாதாரண இலங்கையர்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் பார்ப்பது கவலையாகவுள்ளது - கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் சாதாரண இலங்கையர்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் பார்ப்பது கவலையாகவுள்ளது - கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன்

இலங்கையில், புறத்தாக்கங்களினால் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. அதன் விளைவாக ஒவ்வொரு நாளும் சாதாரண இலங்கையர்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் பார்ப்பது கவலையாகவுள்ளது. 

பெருந்தொற்றின் போதும், சுமார் கடந்த 70 ஆண்டுகளாகவும் நாம் செய்தததைப் போன்றே, இந்த நெருக்கடி நேரத்திலும் கனேடியர்கள் தமது ஆதரவை வழங்கியுள்ளனர் என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் தெரிவித்தார்.

1.jpg

இதனோடு தொடர்புட்ட வகையில் கனடா இலங்கையின் மீளிணக்கச் செயன்முறைக்கு ஆதரவளிப்பதுடன், பெண்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்கள் சமூகங்களாகிய யாருடைய ஒருங்கிணைப்பு நாட்டின் வெற்றிக்கு அவசியமானதோ அவர்களின் வலுவூட்டலுக்கும் ஆதரவளிக்கின்றது.

இது பலமான மக்களிடையிலான இணைப்பையும் நீண்ட பொருளாதாரப் பிணைப்பையும் கட்டியெழுப்புகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கனடா தின வாழ்த்துக்கள். இன்று கனேடியர்கள் ஒன்றாக எமது நாட்டின் சாதனைகளைக் கொண்டாடுவதுடன் அவ்வாறு செய்வதில் ஒரு மகிழ்ச்சி உள்ளதாக நம்புகின்றோம்.

ஒரு சிறந்த கனடாவைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதால் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் நாம் சிந்திக்கின்றோம்.

கனடா தினமானது, வகைமாதிரியாக குடும்பம், நண்பர்கள் மற்றும் சன சமூகத்தில் கவனம் குவிப்பதுடன் முறைசார் ரீதியாகக் கொண்டாடப்படுகிறது. கனேடியர்களின் அனைத்தையும் உள்ளடக்கிய தேசியவாத உணர்வை இது பிரதிபலிக்கின்றது.

அவர்களது தனிப்பட்ட அடையாளங்களின் பல்வகையான பிரஜாநிலைகளை பல்வேறுபட்ட படைகளை மப்பிள் (maple) இலையின் கீழ் கனேடியர்களாக அனைவரையும் ஒன்றுசேர்க்கும் உணர்வுக்குள்ளான ஒருங்கிணைப்பை இயலச் செய்கிறது.

கொள்ளைநோயின் கொடுமையான கட்டமானது, நன்றிக்குரிய முறையில் எங்களுக்குப் பின்னால் சென்றுவிட்ட அதேவேளையில், உலகமானது எமது பதிற்செயற்பாட்டில் எம்மையெல்லாம் ஒன்றாக மீண்டும் பணியாற்ற கேட்டுநிற்கும் வேறுபட்ட சிக்கலான சவால்களை உலகம் எதிர்கொள்கிறது.

உலகளாவிய விளைவுகளின் பெரிய நெருக்கடிகள் உலகத்தைச் சூழ எழுந்துள்ளன. மிகவும் குறிப்பிடத்தக்கமுறையில் உக்ரைன் மீதான ரஸ்யப் படையெடுப்பு உள்ளது.

இலங்கையில், இந்த புறத்தாக்கங்களினால் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. அதன் விளைவாக ஒவ்வொரு நாளும் சாதாரண இலங்கையர்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் பார்ப்பது கவலையாகவுள்ளது.

பெருந்தொற்றின் போதும், சுமார் கடந்த 70 ஆண்டுகளாகவும் நாம் செய்தததைப் போன்றே, இந்த நெருக்கடி நேரத்திலும் கனேடியர்கள் தனது ஆதரவை வழங்கியுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருட்களின் கொள்வனவிற்கான நிதியினை நாம் வழங்குகின்றோம்.

தேசிய பாடசாலை உணவு நிகழ்ச்சிக்கு உடனடியாக தேவையாகவுள்ள அரிசியினை கொள்வனவு செய்வதற்கு உலக உணவுத் திட்டத்துடனும் கனடா பணியாற்றுகின்றது.

நெருக்கடி அதிகரிக்கின்ற நிலையில், ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு செம்பிறைச் சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு பதிலளிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

இந்த சவால்மிக்க நேரங்களை ஒரு மிகவும் நிலையான, வளமான அத்துடன் இந்தக் குறிப்பிடத்தக்க நாட்டினதும் அதன் ஆற்றலுடைய மக்களினதும் பெரும் இயலுமையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரு அனைத்துமடங்கிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக்குவதற்கான பல இலங்கையர்களின் விசேட ஆர்வத்தை நான் பாராட்டுகின்றேன்.

பல்வேறுபட்ட நிலைமைகளின் பொழுதும்கூட கனடாவில் நாம்கூட இது தொடர்பான ஒரு சட்டவாக்கத்தை அங்கீகரித்து முடிவுக்குக் கொண்டுவருதல் உட்பட சுதேசிய மக்களுடனான மீளிணக்கத்தை முன்கொண்டு செல்வதனால் எல்லோருக்குமான ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாமும் உழைக்கின்றோம்.

உலகம் முழுதிலும் இருந்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான புலம்பெயர்வாளர்களைத் தொடர்ந்து வரவேற்றுக்கொண்டிருந்த பொழுதிலும் எமது அழகான நாட்டின் பூர்வகுடிகளின் வழித்தோன்றல்களை ஏற்றுக்கொண்டு கனேடிய சமூகத்தில் முழுமையாகக் கொண்டாடுவதை நிச்சயப்படுத்த நாம் விரும்புகின்றோம்.

இதனோடு தொடர்புட்ட வகையில் கனடா இலங்கையின் மீளிணக்கச் செயன்முறைக்கு ஆதரவளிப்பதுடன், பெண்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட சன சமூகங்களாகிய யாருடைய ஒருங்கிணைப்பு நாட்டின் வெற்றிக்கு அவசியமானதோ அவர்களின் வலுவூட்டலுக்கும் ஆதரவளிக்கின்றது. இது பலமான மக்களிடையிலான இணைப்பையும் நீண்ட பொருளாதாரப் பிணைப்பையும் கட்டியெழுப்புகின்றது.

உலகம் எதிர்கொண்டிருக்கும் பல சவால்களினிடையே அவற்றிலெல்லாம் மிகவும் ஆழமான ஒன்றை நாம் மறந்துவிட முடியாது. காலநிலை மாற்றம்.

காலநிலை மற்றும் சுற்றாடல் செயற்பாடானது, கனடாவுக்கு ஒரு முன்னுரிமையான விடயமாகத் தொடர்ந்துள்ளதுடன் நாம் உலகளாவிய சுற்றாடல் வசதிப்படுத்தல் மற்றும் பசுமைக் காலநிலை நிதியம் ஆகிய இலங்கைக்கு வசதியளிப்பவர்களுக்கு நாம் தொடர்ந்து பங்களிப்புச் செய்கின்றோம். அண்மைய ஆண்டுகளில் ஒரு உள்ளுர் சுற்றாடல் முனைப்புக்காக நாம் எமது ஆதரவை அதிகரித்துள்ளோம்.

கனடாவை வடிவமைப்பதிலும், முன்னேற்றுவதிலும் தொடர்ந்து செயற்படும் இலங்கைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த பல கனேடியர்கள் பற்றி ஒரு குறிப்புடன் முடிக்காவிடில் அது ஒரு பெரிய கவனக்குறைவாக இருக்கும். பல்வகைத் தன்மை, ஐக்கியம் என்பவற்றுக்கான ஒரு தினமாக ஏன் நாம் கனடா நாளைக் கொண்டாடுகின்றோம் என அவர்கள் சான்று காட்டுவர்.

இன்னும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு எதிர்காலத்திற்காக நாம் நம்பியிருப்போமாக.

கனடா தின வாழ்த்துக்கள்! என அந்த அறிக்கையில் கனேடிய உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.virakesari.lk/article/130616

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

கனடா இலங்கையின் மீளிணக்கச் செயன்முறைக்கு ஆதரவளிப்பதுடன், பெண்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்கள் சமூகங்களாகிய யாருடைய ஒருங்கிணைப்பு நாட்டின் வெற்றிக்கு அவசியமானதோ அவர்களின் வலுவூட்டலுக்கும் ஆதரவளிக்கின்றது.

 இவர் ஓரம் கட்டப்பட்ட மக்கள் சமூகம் எண்டு ஆரை சொல்லுறார்?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

 இவர் ஓரம் கட்டப்பட்ட மக்கள் சமூகம் எண்டு ஆரை சொல்லுறார்?

முக்கியமான விடயத்தினை கவனித்திருக்கிறீர்கள், இலங்கையின்  இன்றய நிலமைக்கான காரணம் எல்லோருக்கும் தெரிகிறது, ஏந்தானோ அத்னை நேரடியாக இலங்கைக்கு சொல்லும் தைரியம் எவருக்கும் இல்லை, இரஸ்சியாவையே நேரடியாக எந்த பயமுமின்றி எதிக்கும் நாடுகள் இலங்கை என்றவுடன் வாலை தொங்கப்போட்டு விடுகின்றன.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.