Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராடார்களை இந்தியா வழங்கியமை பயங்கரவாத யுத்தத்தினை ஊக்குவிப்பதாகும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராடார்களை இந்தியா வழங்கியமை பயங்கரவாத யுத்தத்தினை ஊக்குவிப்பதாகும்: செ.கஜேந்திரன்

[வியாழக்கிழமை, 9 ஓகஸ்ட் 2007, 19:40 ஈழம்] [தாயக செய்தியாளர்]

சிறிலங்கா அரசாங்கத்துக்கு ராடார்களை இந்திய அரசாங்கம் வழங்கியமையானது சிறிலங்காவின் பயங்கரவாத யுத்தத்தை ஊக்கப்படுத்துவதாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்காவிற்கான யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் சாடியுள்ளார்.

இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறிலங்கா அரசுக்கு ராடர்களை இந்தியா வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தியினால் தமிழ் மக்கள் கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

சிறிலங்கா அரசானது சமாதான முயற்சிகளை புறந்தள்ளி விட்டு இராணுவத்தீர்வின் மீது தீவிர நம்பிக்கை கொண்டு தமிழ் மக்கள் மீது தீவிர ஆக்கிரமிப்பு யுத்தத்தினை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தினை அரச படைகள் ஆக்கிரமித்த பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதில் ஆர்வம் காட்டாத சிங்கள அரசு கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளை உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ள அதேவேளை அங்கு புத்தர் சிலைகளை நிறுவும் நடவடிக்கைகளிலும் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

எறிகணைகளை வீசி மக்களை அகதிகளாக்கி இடம் பெயரவைத்த அரசு அந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு கண்ணிவெடி அகற்றப்படவில்லை என்பதனை காரணமாகச் சொல்கின்றது. ஆனால் திருமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் புத்தர் சிலைகளை நிறுவியுள்ள அரசு அங்கு சிங்களவர்கள் சுதந்திரமாக சென்றுவர சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளது.

அதேவேளை வட பகுதியையும் கைப்பற்றுவதற்கான இராணுவ நடவடிக்கைகளுக்கான தயாரிப்புக்களிலும் ஈடுபட்டுள்ளது.

மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள பிரதேசங்களை கைப்பற்றுவதற்கு பலமுறை இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு தோற்றுப்போன நிலையில் தொடர்ந்தும் அதற்கான தயாரிப்புக்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் அதேவேளை ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் சிறிலங்காப் படைகளின் தாக்குதலில் இருந்து தப்பி உடுத்த உடையுடன் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து கொண்டிருக்கும் போது இந்தியா ராடர்களை வழங்கியமையானது சிறிலங்கா அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான பயங்கரவாத யுத்தத்தினை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளது.

யுத்தத்தினை நிறுத்தி சமாதான வழிமுறை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முயலும்படி சிறிலங்கா அரசை அனைத்துலக சமூகம் வற்புறுத்தி வருகின்ற போதிலும் அந்த யோசனைகளை அடியோடு நிராகரித்து சிறிலங்கா அரசு யுத்தத்தில் ஆர்வம் காட்டி வருவதற்கும் மனித உரிமை மீறல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதற்கும் ஒரே காரணம் அனைத்துலக நாடுகள் சில தொடர்ந்தும் யுத்தத்திற்காகவும் அபிவிருத்திக்காகவும் உதவிகளை வழங்கி வருகின்றமையே ஆகும்.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமாயின் சிறிலங்கா அரசுக்கு யுத்தத்திற்காகவோ, அபிவிருத்திக்காகவோ வழங்கப்படும் உதவிகளை இந்தியா மற்றும் இணைத்தலைமை நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் சகலவிதமான உதவிகளையும் சிறிலங்கா அரசுக்கு வழங்குவதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக இந்தியா இராணுவ உதவிகளை வழங்குவதானது தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் நிலப்பறிப்பு மற்றும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும் இந்தியா மறைமுகமாக ஆதரிப்பதாகவே அமையும்.

இந்திய உப கண்டத்தில் இந்தியாவின் உண்மையான நட்புறவுச் சக்திகள் ஈழத் தமிழ் மக்கள் என்பதனையும் இலங்கை தீவிலுள்ள சிங்களவர்கள் ஒருபோது இந்தியாவின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கப் போகின்றவர்கள் அல்ல என்பதனையும் இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=32963

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.