Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டென்மார்க்கில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க்கில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியாகியுள்ளதாக டென்மார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

சிட்டி சென்டர் மற்றும் விமான நிலையத்திற்கு இடையே உள்ள அமேஜர் மாவட்டத்தில் உள்ள பெரிய வணிக வளாகத்தை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நாங்கள் சம்பவ இடத்தில் இருக்கிறோம், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது மற்றும் பலர் தாக்கப்பட்டனர்," என்று கோபன்ஹேகன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகரின் தெற்கில் உள்ள வணிக வளாகத்திற்கு ஆயுதமேந்திய அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். 

எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அங்குள்ள அனைத்து சாலைகளும், நகர மையத்துடன் இணைக்கும் மெட்ரோ பாதையும் மூடப்பட்டுள்ளன.

மேலும் அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

டென்மார்க்கில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் | Shots Fired In Copenhagen Mall

 

https://tamilwin.com/article/shots-fired-in-copenhagen-mall-1656869802

 

  • கருத்துக்கள உறவுகள்

22 year old Danish man has been arrested in connection with this attack -BBC

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க்கின் மிகப்பெரிய வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 3பேர் உயிரிழப்பு- குறைந்தது 3பேர் காயம்!

டென்மார்க்கின் மிகப்பெரிய வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 3பேர் உயிரிழப்பு- குறைந்தது 3பேர் காயம்!

டென்மார்க்கின் மிகப்பெரிய வணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

இது டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள வணிக வளாகத்தில் இருந்து கடைக்காரர்களை பாதுகாப்பிற்காக தப்பி ஓடச் செய்தது.

உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை இறந்தவர்களில் 40 வயதுடைய ஒருவரும் இரண்டு இளைஞர்களும் அடங்குவதாகக் கோபன்ஹேகன் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சோரன் தாமஸ்சென் தெரிவித்தார்.

மொத்தம் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை, ஆனால் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என கூறினார். மாலை 6 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக 22 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘hங்கள் கைது செய்தவர் குற்றவாளி என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அவர் தனது கைவசம் ஒரு துப்பாக்கி வைத்திருந்தார், மேலும் அந்த துப்பாக்கிக்கான தோட்டாக்களையும் அவர் வைத்திருந்தார்’ எனக் கூறினார்.

டென்மார்க்கில் துப்பாக்கி வன்முறை என்பது ஒப்பீட்டளவில் அரிதானது. சிட்னி பல்கலைக்கழகம் வைத்துள்ள துப்பாக்கி வன்முறைத் தரவுகளின்படி, டென்மார்க்கில் ஆண்டுதோறும் 100,000 பேருக்கு ஒரு துப்பாக்கி மரணம் ஏற்படுகிறது.

https://athavannews.com/2022/1289422

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.