Jump to content

கேரளாவும் தமிழ்நாடும் எழுத்தாளர்களை நடத்தும் விதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 மூன்றாண்டுகளுக்கு முன்பு நான் சுமார் 90 பேர் கொண்ட என் வகுப்புக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுத்தேன். தனியாகவோ நான்கைந்து பேர் சேர்ந்தோ தமது தாய்மொழியில் அல்லது இந்திய மொழி ஒன்றில் இருந்து ஒரு கதையை ஆங்கிலத்தில் மொழியாக்க வேண்டும். அக்கதைகளில் பத்தை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தேன். அப்போது நான் ஒரு விசித்திரத்தைக் கண்டேன். எங்கள் பல்கலைக்கழகத்தில் மலையாளிகள் அதிகம், ஓரளவுக்கு தமிழ் மாணவர்களும் உண்டு, அடுத்து இந்திக்காரர்கள் வருவார்கள். கன்னட மொழி பேசும் மாணவர்கள் அமைதியாக நிழலைப் போல் இருப்பார்கள். ஒரு மாணவர் கூட கன்னடக் கதையை மொழியாக்கவில்லை. முப்பதுக்கு மேல் மலையாள சிறுகதைகளும், இருபதுக்கு மேல் இந்திக் கதைகளும் (நிறைய பிரேம் சந்த் கதைகள்) மொழியாக்கப்பட்டு வந்தன. நான் தமிழ் பேசத் தெரிந்த ஒரு மாணவியை அழைத்து அவரை ஒரு கதையையாவது மொழியாக்கக் கேட்டேன். அவர் தனக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்றதால் யுடியூபில் இருந்து ஒரு பு.பியின் கதையின் வாசிப்பு ஒன்றை எடுத்துக் கொடுத்தேன். அவர் அதைக் கேட்டு எப்படியோ போராடி மொழியாக்கினார். மற்ற தமிழ் மாணவர்கள் சிலர் இந்த விளையாட்டுக்கு வரவே தயாரில்லை. அப்போது என்னை ஆச்சரியப்படுத்தியது கதைகளை மொழியாக்குவதில் மலையாள மாணவர்கள் காட்டிய ஆர்வம் தான். (இந்திக்கதைகளையும் கூட அவர்களே மொழியாக்கினார்கள்.) சில மாணவர்கள் இணைந்து எம்.டி வாசுதேவன் நாயரின் நூறு பக்கங்களுக்கு மேலான ஒரு சுயசரிதையை மொழியாக்கி அளித்தார்கள். நான் அசந்து போனேன். ஒன்று ஒரு நூலை மொத்தமாக மொழியாக்குவதில் அவர்களுக்கு இருந்த பண்பாட்டு ஆர்வமும், தமது மொழியின் சிறப்புகளை அயல் மொழிக்கு கொண்டு போவதில் அவர்கள் காட்டிய துடிப்பும்.

இரண்டு, அந்த கதைகளை நான் பரிந்துரைக்கவில்லை. அவர்களாகவே தேடி அடைந்தார்கள். அவர்களுக்கு முக்கியமான படைப்பாளிகளின் பெயர்கள் தெரிந்துள்ளதே ஆச்சரியமளித்தது. விசாரித்த போது தமது பள்ளி நூல்களில் முக்கியமான கதைகள் அறிமுகமாயின என்றார்கள்.
 
எம்.டியின் அந்த நூலை ஒரு தனிப்புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என விரும்பினேன். ஆனால் அதில் நிறைய திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்ததாலும், எம்.டியிடம் உரிமை பெற வேண்டி இருந்ததாலும் பிறகு கொண்டு வரலாம் என எடுத்து வைத்தேன். தமிழ் பள்ளி / கல்லூரி மாணவர்கள் எங்காவது இப்படி ஒரு முக்கியமான தமிழ் நவீன இலக்கிய நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கிக் கொடுத்திருக்கிறார்களா? எனக்குத் தெரிந்து இல்லை.
இதை எதற்குக் குறிப்பிடுகிறேன் என்றால் இன்றைய தலைமுறை மலையாளிகளுக்கு இலக்கிய ஆர்வம் இல்லை என ஒரு கருத்து சிலர் மத்தியில் நிலவுவதால் தான். நாம் வெளியே காணும் ஒரு சிலரை வைத்து அந்த முடிவுக்கு வரக் கூடாது. நான் நூற்றுக்கணக்கான மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் காண்கிறவன் எனும் முறையில் இது உண்மையில்லை என்று உறுதியாகக் கூற முடியும். ஆனால் ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்த எத்தனை தமிழக மாணவர்களுக்கு தமிழ் இலக்கியம் தெரியும்? நூற்றில் ஒருவர் கூட இருந்தால் ஆச்சரியம்!
 
அடுத்த சல்ஜாப்பு தமிழ் நவீன இலக்கியம் மக்களிடம் ‘கனெக்ட்’ ஆவதில்லை, மக்களிடம் இருந்து விலகி பூடகமாக இருக்கிறது என்பது. ஆனால் கேரளாவில் எல்லா வகையான எழுத்தாளர்களும் கவனிக்கவும் வாசிக்கவும் படுகிறார்கள். சிக்கலான இருண்மையான படைப்பாளிகளும் அங்கே விறப்னையாகிறார்கள். “கஸாப்பின்றே இதிகாசம்” ஒரு சிக்கலான பிரதி தான், அது மலையாள படங்களில் ஒரு ஜோக்காகக் கூட குறிப்பிடப்படுகிறது. அந்தளவுக்கு மக்களிடம் போய் சேர்ந்துள்ளது. அங்கு இறுக்கமான, நுட்பமான மொழியில் எழுதப்பட்ட, தோல்வியின் இருத்தலிய சித்திரத்தை கட்டியெழுப்பும் எம்.டியின் எழுத்துக்களும் தாம் நன்றாக விற்பனை ஆகின்றன. அவரையும் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதே எம்.டி தமிழகத்தில் இருந்திருந்தால் யாரும் மதித்திருக்க மாட்டார்கள். அதனால் பிரச்சனை கனெக்ட் ஆவதில் இல்லை, நம் பண்பாட்டில் தான் உள்ளது.
 
இங்கே மாற்று சினிமா, ஒவியம், சாஸ்திரிய சங்கீதம் போன்றவற்றுக்கும் வெகுமக்கள் இடையே முக்கியத்துவம் இல்லை என்பதை கவனியுங்கள். பிராமணர்கள் இல்லாவிடில் கர்நாடக சங்கீதம் என ஒன்றே இங்கு இருக்காது. சூப்பர் சிங்கரில் பாடுபவர்கள் அனேகமாக அனைவரும் மலையாளிகள் அல்லது பிராமணர்கள். கடந்த நாற்பதாண்டுகளின் சிறந்த பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் நிறைய பேர் வேற்றுமொழிக்காரர்களே.
நீங்களே ஒரு கணக்கெடுங்கள் - இலக்கியத்தை விடுங்கள், உங்கள் பக்கத்து வீடுகளில் எத்தனை பிள்ளைகள் சதவீதம் பிள்ளைகள் சாஸ்திரிய சங்கீதம் (மேற்கத்திய இசையோ, கர்நாடக சங்கீதமோ, இந்துஸ்தானியோ) படிக்கிறார்கள்? சாஸ்திரிய நடனம், சிலம்பம், கிரிக்கெட் என எதையாவது கற்கப் போகிறார்கள்? மிக மிக சொற்பமாகவே இந்த எண்ணிக்கை இருக்கும். கலை, இலக்கியம், இசை, நடனம், விளையாட்டு என எதிலும் பங்கெடுக்காத ஒரு கும்பலாகவே நாம் இருக்கிறோம். கிட்டார், சேர்ந்திசை போன்ற விசயங்களில் பயிற்சி பெற்றவர்களுக்குக் கூட கிறித்துவ தேவாலய பின்னணியே உதவியிருக்கிறது. கிறித்துவமும் இல்லையெனில் தமிழ்நாட்டில் இசையின் வாசனையே, பயிற்சியே மக்களுக்கு இருக்காது என நினைக்கிறேன்.
நாம் கேரளாவுக்கே போக வேண்டாம், நம் பக்கத்தில் உள்ள ஒவ்வொரு பிராமணக் குடும்பத்தையும் எடுத்துப் பாருங்கள் - படிப்புக்கு அப்பால் இசை, நடனப் பயிற்சியில் தம் பிள்ளைகளை சேர்த்து விட மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள் இப்பெற்றோர்கள். கிரிக்கெட் பயிற்சியிலும் சேர்த்து விடுகிறார்கள். அவர்களுக்கு ஓரளவுக்கு இலக்கிய ஆர்வமும் வந்து விடுகிறது. இந்த பயிற்சிகளால் பணம் கிடைக்காது என்றாலும் அதில் மதிப்பும், மரியாதையும் உண்டு, அது பெருமைமிகு மரபு என நினைத்து முன்னெடுக்கிறார்கள். இதுவே கிறித்துவர்கள் அல்லாத மற்ற சாதி மத்திய வர்க்கத்தினரின் குடும்பங்களைப் பாருங்கள் - வெறும் படிப்பு, டிவி, தெருவில் விளையாடுவது, மொபைலை நோண்டுவதைத் தாண்டி அந்த பிள்ளைகளின் வாழ்வில் ஒன்றுமே இருக்காது. பெற்றோர்கள் வேறெதையும் அனுமதிக்கவோ அறிமுகப்படுத்தவோ ஊக்குவிக்கவோ மாட்டார்கள். இப்பிள்ளைகள் வளர்ந்து எப்படியே தப்பித்து இலக்கியம் பக்கம் வந்தால் உண்டு.
 
நாம் எல்லா நூற்றாண்டுகளிலும் இப்படி இருந்ததில்லை. நம்மிடம் தமிழிசை, நடனம், சிற்பக்கலை, சங்க இலக்கியம், தமிழ் பௌத்தம், தத்துவ நூல்கள், தற்காப்புக் கலைகள், மருத்துவம் என என்னென்னமோ இருந்தது. ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் இப்படி சோறு தான் முக்கியம், சினிமா தான் அடைக்கலம் என மாறி விட்டோம். அதன் பின்னர் நமக்கு வயிற்றுப்பாடு மட்டுமே முக்கியமாக இருக்கிறது, நீண்ட காலமாக. இந்த கெடுநிலையை மாற்ற முயலாத, வேலைவாய்ப்பு, பிம்ப அரசியல், புலன்கிளர்ச்சியே முக்கியம் எனக் கருதுகிற அரசுகளுக்கு, பள்ளிக் கல்வித்துறைக்கு, ஊடகங்களுக்கும் இதில் ஒரு முக்கிய பங்குள்ளது.
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் (24 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.   யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:   62)    சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, மேற்கிந்தியத் தீவுகள் (C2) எதிர் தென்னாபிரிக்கா (D1)  WI  எதிர்  SA   நான்கு போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். 11 பேர் போட்டியில் உள்ள தென்னாபிரிக்கா வெல்லும் எனக் கணித்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் வென்றால் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவுக்குப் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, நியூஸிலாந்து அணிகளைத் தெரிவு செய்த ஏழு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் SA வீரப் பையன்26 SL சுவி AFG நிலாமதி NZ குமாரசாமி SA தியா NZ தமிழ் சிறி NZ புலவர் SA P.S.பிரபா WI நுணாவிலான் SA பிரபா USA SA வாதவூரான் SL ஏராளன் SA கிருபன் SA ரசோதரன் NZ அஹஸ்தியன் WI கந்தப்பு SA வாத்தியார் WI எப்போதும் தமிழன் SA நந்தன் SA நீர்வேலியான் WI கல்யாணி NZ கோஷான் சே SA   இப் போட்டியில் எவர் புள்ளிகளை எடுப்பார்கள்?         63)    சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா (B2) எதிர் இந்தியா (A1)    AUS  எதிர்  IND   11 பேர் போட்டியில் உள்ள இந்திய அணி வெல்லும் எனவும், 05 பேர் போட்டியில் உள்ள அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.  இப்போட்டியில் அவுஸ்திரேலியா வென்றால், இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த 05 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் IND வீரப் பையன்26 IND சுவி IND நிலாமதி IND குமாரசாமி IND தியா PAK தமிழ் சிறி IND புலவர் PAK P.S.பிரபா ENG நுணாவிலான் PAK பிரபா USA ENG வாதவூரான் IND ஏராளன் PAK கிருபன் AUS ரசோதரன் IND அஹஸ்தியன் AUS கந்தப்பு IND வாத்தியார் AUS எப்போதும் தமிழன் AUS நந்தன் PAK நீர்வேலியான் IND கல்யாணி IND கோஷான் சே AUS   இப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
    • கந்தையா57 ஐயா! உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா!! இது என்கணிப்பு அல்ல, கூக்கிள் ஆண்டவர் மேற்கொண்டு தந்த கணிப்பு என்பதைக் குறிப்பிட்டும் உள்ளேன். ஆண்டவர்மேல் குற்றம் கண்டு, மறுபடியும் முதுகில் பிரம்படி வாங்கிக் கொடுத்து உலக மானிடர் அனைவர் முதுகிலும் இரண்டாவது தழும்பையும் ஏற்படுத்த என்மனம்  ஒப்பவில்லை ஐயா!!🤔😟
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.