Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த, பசில் வெளிநாடு செல்வதை தடுக்கக் கோரி நகர்த்தல் பத்திரம் : கப்ரால், டபிள்யூ.டி.லக்ஷ்மன், ஆட்டிகல ஆகியோருக்கும் தடை கோரப்படுகிறது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published by Vishnu on 2022-07-12 19:44:10

 
 

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் உயர்  நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுத்து இடைக்கால உத்தர்வொன்றினை பிறப்பிக்குமாறு 12 ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி உபேந்ர குணசேகர இந்த நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை  எதிர்வரும் 27 ஆம் திகதி ஐந்து  நீதியரசர்களைக்கொண்ட பூரண அமர்வு முன்  பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே,  அவசர வழக்காக கருதி இடைக்கால நிவாரணமாக பயணத் தடைக் கோரி இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  குறித்த மனுக்களை அவசர மனுவாக நாளை 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க (இடைக்கால தடை உத்தரவு -  வெளிநாட்டு பயணத் தடை தொடர்பில் ) உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மூன்று பல்கலைக்கழக புத்திஜீவிகள், இலங்கையைச்சேர்ந்த நீச்சல் வீரரும் பயிற்றுவிப்பாளருமான ஜுலியன் பொல்லிங், இலங்கை வர்த்தகப்பேரவையின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு மற்றும் ஜெஹான் கனக ரத்ன ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் சீரற்ற நிதி நிர்வாகம் ஆகியவற்றுக்கான முக்கிய பொறுப்பாளிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அம்மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர் எல்.ரி.பி.தெஹிதெனிய மற்றும் நீதியரசர் யசந்த கோட்டாகொட ஆகிய மூவரடங்கிய நீதியரசர் குழாம் முன் குறித்த மனுக்கள்  கடந்த 6 ஆம் திகதி ஆராயப்ப்ட்ட போது, எதிர்வரும் 27 ஆம் திகதி ஐவரங்கிய அமர்வின் முன் இந்த மனுக்களை விசாரணை செய்வது என  தீர்மானிக்கப்பட்டது.

 மேற்குறிப்பிட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த கலாநிதி அத்துலசிறி குமார சமரகோன், புத்திஜீவிகளான சூசையப்பு நேவிஸ் மொறாயஸ் மற்றும் கலாநிதி மஹிம் மென்டிஸ் ஆகியோர் தமது மனுக்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் டபிள்யூ.டி.லக்ஷ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உள்ளிட்ட 39 பேரை பிரதிவாதிகளாகப் பெயரிட்டுள்ளனர். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வரிக்குறைப்புக்களே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைக்குப் பிரதான காரணமென மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக மக்களால் செலுத்தப்படும் வரிகளைக் குறைப்பதற்குத் தன்னிச்சையான தீர்மானத்தை மேற்கொண்டார் என்றும், இத்தீர்மானம் முற்றுமுழுதாக அரசியல் ரீதியான நகர்வென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் கணக்காய்வாளர் நாயகம் இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் கொடுக்கல், வாங்கல்களைக் கணக்காய்விற்கு உட்படுத்தி மத்திய வங்கிக்கு ஏற்பட்டிருக்கும் நட்டத்தை மதிப்பீடு செய்யும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். 

இவ்வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மற்றும்ஜனாதிபதி சட்டத்தரணி  சந்தக ஜயசுந்தர ஆகியோரும் சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நரின் புள்ளேவும் ஆஜராகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மஹிந்த, பசில் வெளிநாடு செல்வதை தடுக்கக் கோரி நகர்த்தல் பத்திரம் : கப்ரால், டபிள்யூ.டி.லக்ஷ்மன், ஆட்டிகல ஆகியோருக்கும் தடை கோரப்படுகிறது ! | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.