Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய ஜனாதிபதியினை... தெரிவு செய்வதற்கான, வாக்கெடுப்பு இன்று!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

புதிய ஜனாதிபதியினை... தெரிவு செய்வதற்கான, வாக்கெடுப்பு இன்று!

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகின்றனர்.

இரகசிய வாக்கெடுப்பே நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

வாக்கு சீட்டை நாடாளுமன்ற உறுப்பினர்கள் படமெடுத்தால்... அவர்களுக்கு ஏழாண்டுகள் வரை நாடாளுமன்றம் வர தடை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

டலஸ் அழகப்பெருமவுக்கான... ஆதரவு வலுத்துள்ளது. 10 இற்கும் மேற்பட்ட கட்சிகள் அவருக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.

https://athavannews.com/2022/1291706

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஜனாதிபதி யார்? வாக்கெடுப்பு இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பம் – நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் 

இலங்கையில் வெற்றியடமாகியுள்ள ஜனாதிபதிப் பதவிக்கு, புதிய ஜனாதிபதியை தெரிவு தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு, இன்று சற்று நேரத்தில் நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சரான டளஸ் அழகப்பெரும, ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

ரகசிய வாக்கெடுப்பின் ஊடாகவே இந்தத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.

இந்த மூன்று தரப்பினரும், இறுதிக்கட்டம்வரை தங்களுக்கான ஆதரவினை அரசியல் கட்சிகளிடமிருந்து பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளே இந்தத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறானதொரு முறையில் இடம்பெறும் இந்த ஜனாதிபதித் தேர்தலானது, தேசிய ரீதியாக மட்டுமன்றி, சர்வதேச ரீதியாகவும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1291722

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'LIVE'

பாராளுமன்ற வாக்குச் சாவடி. 🙂

 

May be a cartoon

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றம் கூடியது – கையடக்க தொலைபேசிக்கு தடை!

July 20, 2022

spacer.png

நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. அதன்பின்னர், நாடாளுமன்றத்துக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்த சபாநாயகர், வாக்களிப்பின் போது, முன்மாதிரியாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இடையில் குறுக்கு கேள்விகளை கேட்பதற்கும், விவாதம் நடத்தவும் முடியாது என அறிவுறுத்திய சபாநாயகர், தங்களுடைய கையடக்க தொலைப்பேசியின் ஊடாக, வாக்குச்சீட்டை படம்பிடிக்கக் கூடாது என்றும், அவ்வாறு படம்பிடித்தால் அரசியலமைப்பின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதேபோல வாக்களிக்கும் போதும் கையடக்க தொலைபேசியை எடுத்துவருவது தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றார்.
 

 

https://globaltamilnews.net/2022/178625

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.