Jump to content

தென்னை விவசாயிகள் விரக்தி: கொள்முதல் விலை சரிவு மற்றும் செலவு அதிகரிப்பால் மரங்களை வெட்டும் நிலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென்னை விவசாயிகள் விரக்தி: கொள்முதல் விலை சரிவு மற்றும் செலவு அதிகரிப்பால் மரங்களை வெட்டும் நிலை

  • மோகன்
  • பிபிசி தமிழுக்காக
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

தென்னை விவசாயி

"என் பிள்ளையைப் போல 40 ஆண்டுகளாக இந்த தென்னை மரங்களை வளர்த்தேன். ஆனால் இன்று உரிய விலை கிடைக்காததால் அனைத்து மரங்களையும் வெட்டிவிட்டேன்" என்கிறார் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தென்னை விவசாயி ராமலிங்கம்.

தென்னை விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் தனக்கு சொந்தமான 143 தென்னை மரங்களை தானே வெட்டி சாய்த்துள்ளார் ராமலிங்கம். ஆனால் இது ராமலிங்கத்தின் பிரச்னை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் தென்னை சார்பு பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தான் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெறுகின்றது. கடந்த ஜூலை 13-ம் தேதி பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த திருப்பந்தூர்த்தியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னை சாகுபடி செய்து வருகிறார். இந்த நிலையில் இளநீர், தேங்காய், மற்றும் கொப்பரை ஆகியவற்றிற்கு உரிய விலை கிடைக்காததால் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 145 தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளார்.

என் பிள்ளை போன்ற மரங்களை வெட்டிவிட்டேன்:

இதுகுறித்து விவசாயி ராமலிங்கம் பிபிசி தமிழிடம் கூறுகையில், `25 ஆண்டுகளுக்கு முன்பு தேங்காய் இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் அப்போது வெட்டுக்கூலியும் குறைவாக இருந்ததால் போதிய லாபம் கிடைத்தது. ஆனால் தற்போது ஒரு தேங்காய் ரூ.5.50 காசுக்கு விற்கப்படுவதால் போதிய லாபம் இல்லை. உர விலை, வெட்டுக் கூலி என அனைத்தும் உயர்ந்துள்ளது.

சந்தையில் ஒரு இளநீர் 50 ரூபாய்க்கும், தேங்காய் 20 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் அதை விளைவிக்கக்கூடிய விவசாயிகளான எங்களுக்கு ஒரு தேங்காயின் விலை ஐந்து ரூபாய் அளவுக்குதான் கிடைக்கிறது. இதனால் தென்னைக்கு செலவு செய்யக்கூடிய தொகை கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. என் பிள்ளையை போல் 40 ஆண்டு காலம் வளர்த்த தென்னையை மனமில்லாமல் வெட்டிவிட்டேன்` என்றார்.

தேங்காய் உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில் கொள்முதல் விலை நேர்மாறாக குறைந்து வருவதாக தெரிவிக்கிறார் நாம் அமைப்பின் மாநில தலைவர் பிரபு ராஜா. பிபிசி தமிழிடம் பேசியவர், `கடந்த ஆண்டு இதே நேரம் ஒரு டன் தேங்காய் 47,000 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில் இந்த ஆண்டு ஒரு டன் 19,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 23 ரூபாய்க்கு கொள்முதல் ஆன தேங்காய் இன்று 10 ரூபாய்க்கும் 6 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

தேங்காய் கொள்முதல் செய்பவர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு மிகக் குறைவான விலைக்கு வாங்கி வருகிறார்கள். அதே சமயம் தென்னை உரம் 900 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில் தற்போது 1,900 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

பிரபு

பட மூலாதாரம்,PRABHU

 

படக்குறிப்பு,

பிரபு

ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய்

உற்பத்தி செலவு இரட்டிப்பாகியுள்ள நிலையில் தேங்காய் கொள்முதல் விலை பாதியாகக் குறைந்துள்ளது. தென்னை தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இதனால் அரசு ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பியுள்ளோம். மத்திய அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை ரூ.130 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிற நிலையில் தேங்காய் எண்ணெய்யை ரேசன் கடைகள் மூலம் வழங்குவது விவசாயிகளுக்கும் மக்களுக்கும் சாதகமாக அமையும். உக்ரைன் - ரஷ்யா போரால் சூரிய காந்தி உற்பத்தி தடைபட்டுள்ளது. இதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

பொள்ளாச்சியில் நடைபெற்றதைப் போல தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளோம். அரசு உடனடியாக தலையிட்டு தென்னை விவசாயிகளின் குறைகளுக்கு தீர்வு காண வேண்டும்` என்றார்.

தென்னை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் போராடி வருகின்றனர். ஆனால் இந்த வருடம் கடந்த வருடங்களை காட்டிலும் மிக குறைவான அளவிலே இலாபம் கிடைப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேசிய குழு உறுப்பினர் மு.மாதவன் தெரிவிக்கிறார். தொடர்ந்து பேசியவர், `உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெயை உபயோகப்படுத்த எவ்வித வாய்ப்பையும் மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தவில்லை. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் பயன்பாட்டை நிறுத்தி, தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை அதிகபடுத்தினால் தேங்காய் விவசாயிகளுக்கு குறைந்த அளவிலான லாபம் கிடைக்க வழிவகுக்கும்.

 

மாதவன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. கஜா புயலால் தென்னை சாகுபடி மிகப் பெரிய பாதிப்புக்குள்ளானது. இதன் காரணமாக இங்கு 50 சதவிகிதம் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளது.

தென்னை மரத்திற்கு அளிக்கப்படும் மருந்துகள் அனைத்தும் வேளாண் துறை மூலம் மானிய விலையில் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.

தென்னை சார்பு துறைகளும் பாதிப்பு

தென்னையைப் பொருத்த வரை விவசாயிகள் மட்டுமல்லாமல் தேங்காய் பறிப்போர், தேங்காய் உரிப்போர், தேங்காய் நார் உற்பத்தி செய்வோர், ஓட்டுநர்கள், கோகோ பீட் உற்பத்தி, கயிறு உற்பத்தி என தேங்காயைச் சார்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட தொழில்கள் உள்ளன. இந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் தேங்காய் விவசாயத்தை நம்பி உள்ளது.

எனவே டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் தேங்காய் காய்க்க தொடங்கிய நிலையில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்` என்றார்.

 

தென்னை

அரசுத்தரப்பு சொல்வது என்ன?

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி, `அரசு ஆண்டு ஒன்றுக்கு 50,000 மெட்ரிக் டன் தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு உள்ளது. ஆனால் 7,000 மெட்ரிக் டன் கூட கொள்முதல் செய்யப்படுவதில்லை. தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டுமென்றால் ஒன்றிய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

தேங்காய்க்கு விலை அதிகமாக கிடைக்கிறபோது வெளிசந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை சரிந்தால் அரசு குறைந்தபட்ச ஆதார விலைக்கு வாங்க முடியும். தேங்காய் எண்ணெய் பயன்பாடு தமிழ்நாட்டில் எந்த அளவில் உள்ளது என்பதை பார்க்க வேண்டும். கேரளாவில் தேங்காய் எண்ணெய் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அவ்வாறு இல்லை, சொற்பமான அளவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மக்களிடம் பயன்பாடு அதிகம் இல்லாத பொருளை அரசு கொள்முதல் செய்வது சாத்தியம் குறைவு.

மாறாக தென்னை விவசாயிகள் தென்னை பொருட்களை மதிப்பு கூட்ட வேண்டும். நீரா போன்ற தென்னை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களை அரசு வைத்துள்ளது. இத்தகைய திட்டங்களை விரிவுபடுத்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளும் அதில் ஈடுபட்டு பயனடைய வேண்டும். மதிப்பு கூட்டப்பட்ட தென்னை பொருட்களின் சந்தை அதிகரிக்கும்போது தென்னை விவசாயிகளின் இன்னல்கள் குறையும்` என்றார்.

https://www.bbc.com/tamil/india-62219797

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் (24 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.   யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:   62)    சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, மேற்கிந்தியத் தீவுகள் (C2) எதிர் தென்னாபிரிக்கா (D1)  WI  எதிர்  SA   நான்கு போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். 11 பேர் போட்டியில் உள்ள தென்னாபிரிக்கா வெல்லும் எனக் கணித்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் வென்றால் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவுக்குப் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, நியூஸிலாந்து அணிகளைத் தெரிவு செய்த ஏழு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் SA வீரப் பையன்26 SL சுவி AFG நிலாமதி NZ குமாரசாமி SA தியா NZ தமிழ் சிறி NZ புலவர் SA P.S.பிரபா WI நுணாவிலான் SA பிரபா USA SA வாதவூரான் SL ஏராளன் SA கிருபன் SA ரசோதரன் NZ அஹஸ்தியன் WI கந்தப்பு SA வாத்தியார் WI எப்போதும் தமிழன் SA நந்தன் SA நீர்வேலியான் WI கல்யாணி NZ கோஷான் சே SA   இப் போட்டியில் எவர் புள்ளிகளை எடுப்பார்கள்?         63)    சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா (B2) எதிர் இந்தியா (A1)    AUS  எதிர்  IND   11 பேர் போட்டியில் உள்ள இந்திய அணி வெல்லும் எனவும், 05 பேர் போட்டியில் உள்ள அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.  இப்போட்டியில் அவுஸ்திரேலியா வென்றால், இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த 05 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் IND வீரப் பையன்26 IND சுவி IND நிலாமதி IND குமாரசாமி IND தியா PAK தமிழ் சிறி IND புலவர் PAK P.S.பிரபா ENG நுணாவிலான் PAK பிரபா USA ENG வாதவூரான் IND ஏராளன் PAK கிருபன் AUS ரசோதரன் IND அஹஸ்தியன் AUS கந்தப்பு IND வாத்தியார் AUS எப்போதும் தமிழன் AUS நந்தன் PAK நீர்வேலியான் IND கல்யாணி IND கோஷான் சே AUS   இப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
    • கந்தையா57 ஐயா! உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா!! இது என்கணிப்பு அல்ல, கூக்கிள் ஆண்டவர் மேற்கொண்டு தந்த கணிப்பு என்பதைக் குறிப்பிட்டும் உள்ளேன். ஆண்டவர்மேல் குற்றம் கண்டு, மறுபடியும் முதுகில் பிரம்படி வாங்கிக் கொடுத்து உலக மானிடர் அனைவர் முதுகிலும் இரண்டாவது தழும்பையும் ஏற்படுத்த என்மனம்  ஒப்பவில்லை ஐயா!!🤔😟
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.