Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாதுகாப்புப் படையினர், மேற்கொண்ட தாக்குதல்... முற்றிலும் தேவையற்றது – ஹர்ஷ டி சில்வா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

பாதுகாப்புப் படையினர், மேற்கொண்ட தாக்குதல்... முற்றிலும் தேவையற்றது – ஹர்ஷ டி சில்வா

காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் முற்றிலும் தேவையற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பெற்றுள்ள அதிகாரமானது மக்களின் ஆணையைப் பிரதிபலிக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

நியாயமான மற்றும் அமைதியான போராட்டங்களுக்கு தான் தொடர்ந்து ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் போராட்டத்தை சட்டத்திற்கு புறம்பாக மாற்றுவது மற்றும் நாட்டை மேலும் சீர்குலைக்கும் வன்முறையாளர்களின் ஊடுருவலை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு உண்மையான நோக்கங்கள் இருந்தால், மார்ச் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி நாட்டை ஸ்திரப்படுத்த ஒருமித்த சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதன் மூலமே நாடாளுமன்றம் மக்களின் ஆணையை பிரதிபலிக்கும் என்றும், மாற்றங்கள் ஒரே இரவில் நடக்காது என்றும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1292085

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அபிலாசைகளை படுங்குழிக்குள் அரசாங்கம் தள்ளியுள்ளது- சஜித்

ராஜபக்சவின்,  நிழல் அரசாங்கம்... கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது – சஜித் கடும் கண்டனம்.

நிராயுதபாணியான போராட்டக்காரர்கள் மீது ராஜபக்ஷ நிழல் அரசாங்கம் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

தாக்குதலுக்கு உத்தரவிட்டது மற்றும் திட்டமிட்டது யார் என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பெண்கள், அங்கவீனமுற்ற இராணுவத்தினர் என பலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனை எதிர்க்கட்சியினர் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

இத்தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தி அதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தாக்குதல் தொடர்பான பொறுப்பில் இருந்து ஜனாதிபதி விலகிச் செல்ல முடியாது என்றும் அரச அனுசரணையுடன் வன்முறைக்கு உத்தரவு பிறப்பித்தது யார் எனவும் கேள்வி எழுப்பினார்.

https://athavannews.com/2022/1292088

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்- சரத் பொன்சேகா

‘நாளை... தொழிற்சங்கங்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படலாம்”

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தீர்வையே கோருவதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், அடக்குமுறையால் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும் கூறினார்.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் இன்று உயர்வாகக் கடைப்பிடிக்கப்படுவதாகவும், அதைப் அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த சம்பவங்களை தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக நிராகரிக்க முடியாது என்றும் இது ஜனநாயகத்தை நசுக்குவதற்கான ஒரு படியாக இருக்கலாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று போராட்டக்கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் நாளை தொழிற்சங்கங்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பிற குழுக்கள் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

https://athavannews.com/2022/1292091

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'G NEWS GC NEWS தொலைக்காட்சி மூலம் பிரபாகரனை தீவிரவாதியாக காட்டினர்... இன்று அவரின் போராட்டம் நியாயமானது என உணருகின்றோம் தமிழ் மக்களை கொன்று குவிக்கும் போது போர் வெற்றி தினம் கொண்டாடினோம்.... அவர்களின் போராட்டம் நியாயமானது. தமிழ் போராட்ட ஒருங்கிணைப்பாளர் கிணைப்பாளர் ாளர் இலங்கை 22 ஜூலை 2022'

தொலைக்காட்சி  மூலம், பிரபாகரனை தீவிரவாதியாக காட்டினர்.... 
இன்று அவரின் போராட்டம், நியாயமானது.. என உணர்கின்றோம்.  
-போராட்ட ஒருங்கிணைப்பாளர்.-

  • கருத்துக்கள உறவுகள்

ம்.....ம். நடப்பதெல்லாம் நன்மைக்கே! நாம் எந்த விளிம்புவரை ஓடினோம் என்பதை வெடிகொழுத்தி கொண்டாடிய மக்கள் உணர்ந்து, எமது வலியை தாங்களும் அனுபவித்து இனவாதிகளை வெளியேற்றும்வரை இந்தப்போராட்டம் தொடரலாம் என காலம் கணித்து விட்டது.                           

உள்ளூர் பயங்கரவாதிகளும் கண்டனம் தெரிவிப்பதுதான் வினோதம்! இவர்கள் பதில் ஜனாதிபதியாக வந்திருந்தாலும் இதேதான் நடந்திருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.