Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரணில் விக்கிரமசிங்கவின்... தனிப்பட்ட இல்லத்திற்கு,  தீ வைத்த... 20 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த 20 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

ரணில் விக்கிரமசிங்கவின்... தனிப்பட்ட இல்லத்திற்கு,  தீ வைத்த... 20 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 20 பேரை இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட காணொளிகள் ஊடாகவே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வலுக்கட்டாயமாக இல்லத்திற்கு நுழைந்தவர்கள் மற்றும் இல்லத்திற்குள் நுழைய வழிவகுத்தவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் தலைமையகத்தினால் குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், சந்தேக நபர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்களின் உதவியை நாடவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சந்தேக நபர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தியதன் பின்னர், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் கடந்த 9ஆம் திகதி தீக்கிரையாக்கப்பட்டது.

தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் மகன் மறுநாள் துபாய் சென்றுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் துபாயில் இருந்து, இங்கிலாந்து சென்றுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியையும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://athavannews.com/2022/1292459

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் கடந்த 9ஆம் திகதி தீக்கிரையாக்கப்பட்டது.

 

6 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 20 பேரை இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்.

தன்னுடைய ஒரு வீடு எரிக்கப்பட்டதற்கு அதிகாரமிருப்பதால்   இந்தப்போடு போடுறார். தமிழ் மக்களுடைய உடைமைகளும், உயிர்களும் எரிக்கப்படும்போது அதிகாரத்தை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்தார். அன்று இவர்கள் எங்களுக்கு செய்ததை, இன்று அவர்கள் தூண்டி விட்டவர்களுக்கெதிராக செய்கிறார்கள். இப்படித்தானே அன்று எங்கள் உணர்வுகளும் இருந்திருக்கும்? யாராவது உதவிக்கரம் நீட்டி எங்களை காப்பாற்ற மாட்டார்களா? என்று எங்கள் உறவுகளின்  இறுதி மூச்சு நிற்கும் வரை எதிர்பார்த்திருந்தோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

தன்னுடைய ஒரு வீடு எரிக்கப்பட்டதற்கு அதிகாரமிருப்பதால்   இந்தப்போடு போடுறார். தமிழ் மக்களுடைய உடைமைகளும், உயிர்களும் எரிக்கப்படும்போது அதிகாரத்தை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்தார். அன்று இவர்கள் எங்களுக்கு செய்ததை, இன்று அவர்கள் தூண்டி விட்டவர்களுக்கெதிராக செய்கிறார்கள். இப்படித்தானே அன்று எங்கள் உணர்வுகளும் இருந்திருக்கும்? யாராவது உதவிக்கரம் நீட்டி எங்களை காப்பாற்ற மாட்டார்களா? என்று எங்கள் உறவுகளின்  இறுதி மூச்சு நிற்கும் வரை எதிர்பார்த்திருந்தோம்.

அரசியல்வாதிகள் எல்லாரும், மிகவும் கீழ்த்தரமான சிந்தனை உடையவர்கள்.
மகிந்தவின் பூர்விக வீடு எரிக்கப் பட்டதற்கு, அரசே கட்டிக் கொடுக்குமாம்.
ஏனென்றால் அது... அரசுடைமையாக்கப் பட்ட  நினைவுச் சின்னமாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.