Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுவான் வாங் 5 கப்பலின், விஜயத்தை ஒத்திவைக்குமாறு... சீனாவிடம், அரசாங்கம் கோரிக்கை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைவரும் சீன இராணுவ கண்காணிப்பு கப்பலால் கடும் அதிருப்தியில் இந்தியா

யுவான் வாங் 5 கப்பலின், விஜயத்தை ஒத்திவைக்குமாறு... சீனாவிடம், அரசாங்கம் கோரிக்கை !

சீன யுவான் வாங் 5 கப்பலின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

செயற்கைக் கோள்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளை இந்த கப்பல் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குறித்த கப்பல் வந்தடையும் என கூறப்பட்டதை அடுத்து பிராந்தியத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விண்வெளி செயற்கைக்கோள் நடவடிக்கைகளை கண்காணிக்க இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை வருவதாக இந்தியா தெரிவித்தது.

குறித்த கப்பலின் வருகை குறித்து கவலை வெளியிட்ட இந்தியா, சீனக் கப்பலின் வருகையானது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் எச்சரித்தது.

கடந்த ஜூலை 13ஆம் திகதி சீனாவின் ஜியாங்யின் பகுதியில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி புறப்பட்ட குறித்த கப்பல், தற்போது தாய்வானின் கடல் எல்லையை வந்தடைந்துள்ள நிலையில் அரசாங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

எவ்வாறாயினும் தமது அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் இதற்கு பதிலளிப்பதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1293889

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எதிர்வரும் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குறித்த கப்பல் வந்தடையும் என கூறப்பட்டதை அடுத்து பிராந்தியத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது

ஹம்பாந்தோட்டைக்கு வரவிருக்கும் கப்பலால் பயந்தாங்கொள்ளி இந்தியா பதட்டபடுகுது என்றால் இந்தியாவின் பலம் என்ன?

1 hour ago, தமிழ் சிறி said:

செயற்கைக் கோள்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளை இந்த கப்பல் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்பற்றி இலங்கை கணக்கெடுக்கவில்லையென்றால்; இலங்கை அவ்வளவு பலமுள்ளதா? கவலைப்படுமளவிற்கு அதனிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லையா? இந்தியா துடிக்க வேணும், கதற வேணும், பதற வேணும். அன்று எங்களை பதற வைத்து ரசித்ததல்லவா அனுபவிக்கட்டும்! முற்பகல் செய்ய பிற்பகல் விளையும். இலங்கை இப்போ திரிசங்கு நிலையில், மாறி மாறி கைநீட்டி கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்தவரல்லவா?

1 hour ago, தமிழ் சிறி said:

சீன யுவான் வாங் 5 கப்பலின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதுக்கு....?  இந்தியாவிடம் இருந்து வரவிருக்கும் உதவி வந்து சேருமட்டுமா? அப்போ எரிபொருள் நிரப்ப வருகிறது என்று சொன்னதெல்லாம் ..... தமாஷா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

ஹம்பாந்தோட்டைக்கு வரவிருக்கும் கப்பலால் பயந்தாங்கொள்ளி இந்தியா பதட்டபடுகுது என்றால் இந்தியாவின் பலம் என்ன?

இதைப்பற்றி இலங்கை கணக்கெடுக்கவில்லையென்றால்; இலங்கை அவ்வளவு பலமுள்ளதா? கவலைப்படுமளவிற்கு அதனிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லையா? இந்தியா துடிக்க வேணும், கதற வேணும், பதற வேணும். அன்று எங்களை பதற வைத்து ரசித்ததல்லவா அனுபவிக்கட்டும்! முற்பகல் செய்ய பிற்பகல் விளையும். இலங்கை இப்போ திரிசங்கு நிலையில், மாறி மாறி கைநீட்டி கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்தவரல்லவா?

எதுக்கு....?  இந்தியாவிடம் இருந்து வரவிருக்கும் உதவி வந்து சேருமட்டுமா? அப்போ எரிபொருள் நிரப்ப வருகிறது என்று சொன்னதெல்லாம் ..... தமாஷா?

இலங்கை அரசியல்வாதிகள்... தினமும் சொல்லும் பொய்களை,
ஒரு கிழமைக்கு குறித்து வைத்து, பார்த்தீர்களானால், ஆயிரத்தை தாண்டும்.
நேற்று... நாமல் சொல்கிறார், கோத்தா சர்வகட்சி  அரசாங்கம் அமைப்பதற்காகத்தான்,
இராஜினாமா செய்தவராம்.

சிங்களவன் பொய் பேசுபவன் என்றால்,
தமிழ் அரசியல்வாதிகள்... அணில் ஏற விட்ட  பிராணிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் அரசியல்வாதிகள்... அணில் ஏற விட்ட  பிராணிகள்.

அதுகள் அப்பிராணிகள் அதுகளை ஒண்டும் சொல்லாதீங்கோ! ரணில் உடைச்ச தேங்காயில் கதிகலங்கிப்போயிருக்குதுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.