Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்களும் இலங்கை அரசின் தந்திரம்-பா .உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


புலம்பெயர் தமிழர்களும் இலங்கை அரசின் தந்திரம்-பா .உதயன்

பல ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை முதலில் விடாமல் தொலைந்து போன தமிழ் மக்களுக்காய் இன்று வரை ஒரு நீதியை வழங்காமல் வட கிழக்கில் ஆக்கிரமித்து இருக்கும் இராணுவ முகாம்களை அகற்றாமல் தமிழர் அரசியல் தீர்வுக்கான எந்த வித கரிசனையும் இல்லாமல் புலம் பெயர் சில அமைப்புகளையும் சில தனி நபர்களையும் பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறதாம் இலங்கை அரசு. தடையை நீக்குவதும் பின் தடையை போடுவதுமாக தங்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்துவதுமாக ஓர் இனவாத போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. இந்த இனவாத சிந்தனைப் போக்கினால் தான் இலங்கை இன்று இவ்வளவு ஓர் அவல நிலைக்கு தள்ளப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

 இனி எப்போ தடையைப் போடும் இருந்து பார்போம். பேசுவதும் எழுதுவதும் பின் கிழித்து எறிந்து ஏமாற்றுவதுமாக இதுவரை காலமும் செய்யும் அரசியல் தீர்வு போலவே இலங்கையின் அரசியல் எப்பொழுதுமே கோமாளித்தனமானதும் சந்தர்ப்பத்தனமாதும் மட்டும் அல்ல அது ஒரு ஏமாற்றுத்தனமானதும் கூட எம்மில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில். தமிழர்களுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை இலங்கை அரசு முன் வைக்காமல் புலம் பெயர் சமூகத்தை அணுகுவதென்னபது நடைமுறை சாத்தியமற்றது என்பதை இரு பகுதியினரும் உணர வேண்டும். ஆகவே சரியான நீதியான நிரந்தரமான தமிழர்கள் கௌரமமாக வாழக்கூடிய ஒரு அரசியல் தீர்வை முதலில் வழங்கும்படி புலம் பெயர் தமிழர் அமைப்புகள் மற்றும் ஈழத் தமிழர்களை பிரதிநிதித்துவம் படுத்தும் அரசியல் கட்சிகள் அரசை வற்புறுத்த வேண்டும். இதன் பின் இலங்கையில் முதலீடு செய்ய நாம் தயார் என்று முன் வைக்க வெண்டும். 

இலங்கையை ஆளும் தலைவர்களின் சதி வலையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். (Don’t fall in the trap. Just Promises and false agreements are not solutions. Reconciliation and Implementations are the needed). நல்லிணக்கமும் அதை நடைமுறைப்படுத்துதலும் முதலில் முக்கிய தேவை. அவசரகால சட்டம் பயங்கர வாத சட்டம் இவற்றை நீக்கி மக்களின் பேச்சு எழுத்துச் சுதந்திரதுக்கு வழி சமைத்து சட்டத்தையும் ஒழுங்கையும் இலங்கை நிலை நிறுத்தாத வரை புலம் பெயர் தமிழர் மட்டும் இன்றி எவராலும் இலங்கையை ஓர் அமைதியும் சுவீட்சமும் கொண்ட தேசமாக்க முடியாது. இலங்கை ஒரு போலித்தனமான அரசியல் மேடை இங்கு நடிப்பவர்களுக்கு எல்லாம் நீதி நேர்மை அர்ப்பணிப்பு கிடையாது. வெறும் தந்திரமும் சூழ்ச்சியும் பொய்மையும் கொண்டவர்கள். புத்த பகவானின் எந்த வித தத்துவத்தையும் பின் பற்றாதவர்கள். 

அவசரகாலச் சட்டம் இது தமிழனுக்காய் கொண்டு வந்த அரச பயங்கவாத சட்டம் ஆயிரம் ஆயிரம் அப்பாவி தமிழ் இளையர் இந்த அடக்கு முறையால் பலியாகிப் போனார் அடிப்படை உரிமைக்காய் அடக்கு முறைக்கு எதிராய் போராடிய மக்களை பயங்கர வாதம் என்று சொல்லி முப்பது ஆண்டுகளுக்கு மோல் இரும்புக் கரம் கொண்டு அடக்கப் பட்ட வரலாறு தொடர்ந்து இன்று அதே பயங்கர வாதம் அதன் சொந்த மக்கள் மேல் பாய்ந்துள்ளது. எந்த நச்சு விதையை விதைத்தீர்களோ அந்த நச்சு விதையை இன்று சிங்கள மக்கள் அனுபவித்தக் கொண்டிருக்கின்றார்கள். மாற்றம் வேண்டி போராடிய மக்கள் மேல் பயங்கர வாத சட்டம் பாய்ந்த போது தான் இன்று சிங்கள மக்கள் ஓரளவுக்கு என்றேனும் தமிழர்களின் வலியை உணர்ந்து இருப்பது போல் தெரிகிறது.

இனவாதம் கடந்து அடிப்படையில் மாற்றமும் தொலை நோக்கு பார்வையும் உண்மையும் நேர்மையும் அறமும் இல்லாமல் எந்த மாற்றமும் இலங்கையில் சாத்தியம் இல்லை. இன ரீதியான ஐக்கியமும் ஏற்பட வழியும் இல்லை. இதை புரியக்கூடிய அரசியல் தலைவர்களும் இலங்கையில் சுதந்திரத்துக்கு பின் எவரும் இல்லை. இளைய சமுதாயம் மாற்றத்தின் வழிகளோடு புதிய பாதை நோக்கி பயணிக்குமா சிந்திப்பார்களா எதிர் காலம் பற்றி.

பா .உதயன் ✍️


Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.