Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவமான அரசியல்

Featured Replies

அவமான அரசியல்

சுயமரியாதை, தன்மானம் என்பவற்றிற்காகப் பதவியைத் தூக்கி எறிகின்ற அரசியல் வாதிகளையோ கொள்கை மக்கள் நலன் என்பவற்றை முதன்மைப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளையோ சிறிலங்கா அரசியலில் காண்பது மிகவும் கடினமானது என்றாலும் அரசியல் பதவிகளுக்காக தன்மானத்தையும் சுயமரியாதையையும் தூக்கி வீசுகின்ற அரசியல் வாதிகளுக்கு பல உதாரணங்களைக் காட்டலாம்.

அந்த வகையில் உடனடியாக ஞாபகம் வருகின்ற அரசியல் கட்சிகள் என்றால் அது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுமாகத் தானிருக்கும்..

யார் ஆட்சியில் இருந்தாலும் அமைச்சர் கதிரைகளை அலங்கரிப்பது என்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்டு மலையக மக்களின் அறியாமையைத் தமது பெரும் ஆயுதமாகக் கொண்டும் கடந்த ஐம்பது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும்இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் அண்மைக்காலச் செயற்பாடுகள் சுயமரியாதை கொண்ட எவரையுமே வெட்கித் தலைகுனியவே செய்யும்.

அடிப்படை வசதிகளையாவது பெற்று வாழ்வதற்குத் தேவையான சம்பளம் கூட இன்றி மிருகங்கள் மட்டுமே வாழ்வதற்குகந்த லயத்துக் காம்பராக்களிலே தங்கள் வாழ்க்கையை நடாத்திக் கொண்டிருக்கும் தோட்டத் தொழிலாளர்களிடம் சந்தாப் பணம் என்ற போர்வையில் சுரண்டும் ( உறிஞ்சும் என்ற பதமே பொருத்தமாக இருக்கும்) பணத்திலே கட்சி அலுவலகம் கட்சிக் காரியாலயம் என்பவற்றை நடாத்திக் கொண்டு அந்த மக்களின் அடிப்படை நலனைக் கூடக் கவனிக்கத் தவறிய இந்தப் பச்சோந்தி அரசியல் வாதிகள் இதை விடக் கேவலப்படுத்த முடியுமா என்று ஐயுறுமளவிற்குக் கேவலப்படுத்தப்பட்ட பின்னும் மகிந்த அரசிற்கு முட்டுக் கொடுக்க நினைப்பதற்கு பண, பதவி ஆசைகளைத் தவிர வேறு எந்தக் காரணத்தையும் கூற முடியாது.

கடந்த சில வாரங்களிற்கு முன்பதாக தோட்டப் பகுதியிலே சிங்கள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயிற்கும் முத்து சிவலிங்கத்திற்கும் இடையே இடம்பெற்ற சச்சரவு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ‘மகிந்த பிறதர்ஸ் அண்ட் கோ’வின் முக்கிய பங்குதாரரான பசில் ராஜபக்சவின் முன்னால் நடைபெற்றது.

அப்பொழுது முத்து சிவலிங்கத்தையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும் மிகவும் கடுமையான வார்த்தைகளால் சாடிய பசில் ராஜபக்ச தமிழர்களைக் கேவலப்படுத்துவதற்கு பாவிக்கின்ற மிகவும் கீழ்த்தரமான வார்த்தையான ‘பற தெமலா’ என்றும் திட்டியதாகத் தெரிகிறது.

அப்பொழுது ‘உணர்ச்சிப் பிழம்பும்’ தன்மானத்தில் கவரிமானுக்கு ஒத்தவருமான முத்து சிவலிங்கம் நீங்கள்; இப்படியெல்லாம் பேசினால் உங்களுடன் நாம் எப்படி ஆட்சியில் சேர்ந்திருப்பது என்று கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

உடனடியாகவே பசில் ராஜபக்ச ஒரு வெள்ளைத் தாளை நீட்டி நீங்கள் உடனடியாகவே பதவி விலகலாம் என்று சொல்லியிருக்கிறார். எம்முடைய அலுவலகத்திலே நிறைய வெள்ளைத் தாள்கள் இருக்கினறன என்று கூறிவிட்டு அலுவலகம் வந்த இதொகாவினர் தங்கள் ராஜினமாக் கடிதத்தை அனுப்பி வைத்தது யாவரும் அறிந்ததே.

ஆனால் இப்பொழுது அந்த ராஜினமாக்களை வாபஸ் பெறுவதற்காக வெள்ளைத் தாளை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ என்று சந்தேகப்படும் காரியங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

இதொகாவின் பதவி விலகலினால் அரசாங்கம் ஆட்டம் காணக் கூடிய ஒரு சூழல் உருவாகியதால் ஆறுமுகம் தொண்டமானுடன் மகிந்த ராஜபக்ச பேச்சுவார்த்தையொன்றை நடாத்தினார். அதனைத் தொடர்ந்து சுருதி இறங்கிய நிலையில் இதொகவினர் கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன் எந்த நேரத்திலும் அரசில் இணைந்து கொள்ளக் கூடும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இவர்களது பேச்சுக்களில் தொழிலாளர் நலன் சார்ந்த விடயங்கள் இடம்பெற்றிருக்கும் என்று அரசியல் ஞானச+னியங்களே நம்பமாட்டார்கள். ஆனால் காசோலைகளின் பருமன் எவ்வளவாக இருக்கும் என்பதே முக்கியமான கேள்வியாக இருக்கும்.

அவர்கள் அரசில் ஒட்டிக் கொண்டுதானிருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான் என்றாலும் மீண்டும் பதவியல் ஒட்டிக் கொள்ளு முன்னர் தம்மை மிகவும் கேவலப்படுத்திய பசில் ராஜபக்சவின் பகிரங்க மன்னிப்பைக் கோருமளவிற்கு சிறிதளவாவது தன்மானம் இவர்களின் இரத்தத்தில் இருக்குமா என்பதே தற்போதுள்ள கேள்வி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.