Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்.. 51ஆவது அமர்வு, இன்று ஆரம்பம் – இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு இன்று ஜெனிவா பயணம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்.. 51ஆவது அமர்வு, இன்று ஆரம்பம் – இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு இன்று (திங்கட்கிழமை) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இன்று தொடங்கும் அமர்வு, ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான விரிவான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மனித உரிமைகள் ஆணையாளர் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 46/1 தீர்மானம் தொடர்பிலான முன்னேற்றம் உள்ளிட்ட இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கண்காணித்தல், அறிக்கை செய்தல், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான விடயங்கள் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அமர்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தலைமையிலான குழு ஜெனீவாவிற்கு சென்றுள்ளது.

மேலும் இன்றைய அமர்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உரையாற்றவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1298596

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் உரையாற்றவுள்ளார் பீரிஸ் !

பயங்கரவாத தடைச் சட்டம்: மனித உரிமை பேரவைக்கு கொண்டு செல்லும், புலம்பெயர் முஸ்லீம்கள்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது அமுல்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து புலம்பெயர் முஸ்லிம்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜெனீவாவில் இன்று இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத்தொடரில் தாம் எதிர்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்து எடுத்துரைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

புலம்பெயர் முஸ்லிம் பேரவையின் சர்வதேச விவகார ஒருங்கிணைப்பாளர் அய்யூப் அஸ்மின் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பல மாதங்களாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பல முஸ்லிம் அமைப்புகளுக்கான தடைகள் தொடர்வதாகவும் இந்த சட்டத்தால் முஸ்லிம்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களை எதிர்நோக்கி வருவதாகவும் கூறியுள்ளார்.

எனவே இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து அமுல்படுத்த வேண்டும் என்றும் வலியறுத்தியுள்ளார்.

https://athavannews.com/2022/1298648

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச பொறிமுறை அவசியம் என வலியுறுத்துவோம் – உலக தமிழர் பேரவை

"சர்வதேச பொறிமுறை" அவசியம் என, வலியுறுத்துவோம் – உலக தமிழர் பேரவை.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கும், பொறுப்புக் கூறலை உறுதி செய்வதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்குவதற்கும் ஒரு சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தவுள்ளதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறியமைக்கான விசாரணை, சாட்சியங்களை சேகரித்தல், பொறுப்புக்கூறல், நீதி வழங்குதல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், உள்ளுர் பொறிமுறை என கூறி பாதிக்கப்பட்டவர்களை மற்றும் சர்வதேச சமூகத்தை அரசாங்கங்கள் முட்டாளாக்கியுள்ளன என்றும் உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார்.

எனவே புதிய தீர்மானம், நிலைமாறுகால நீதியின் ஒரு பகுதியாக, இதேபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் மற்றும் உள்நாட்டு உள்நாட்டுப் போரில் விளைந்த பிரச்சினைகளின் மூல காரணங்களுக்கான அரசியல் தீர்வைக் கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் ஆட்சிக் கட்டமைப்பை அர்த்தப்படுத்த வேண்டும் என்றும் மாகாணங்களுக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்வை அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தப்பட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1298657

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடைக்கால அதிகாரத்தை நிறுவி அரசியல் தீர்வை அடைய வேண்டும் – பிரித்தானிய தமிழர் பேரவை

இடைக்கால அதிகாரத்தை நிறுவி... அரசியல் தீர்வை, அடைய வேண்டும் – பிரித்தானிய தமிழர் பேரவை.

சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

திறமையான அதிகார வரம்பைக் கொண்ட ஐ.நா. உறுப்பு நாடுகளை, தங்கள் நீதிமன்றங்களில் பயனுள்ள மற்றும் சுதந்திரமான குற்றவியல் மற்றும் பிற நடவடிக்கைகளை எடுக்க தாம் கோரவுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வி.ரவி குமார் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஏற்கனவே நிறுவப்பட்ட சாட்சியங்கள் சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் பரிந்துரை பொறிமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் பலப்படுத்த வேண்டும் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரினால் துண்டாடப்பட்டு, போருக்கு முன்னும் பின்னும் அனைத்து இலங்கை அரசாங்கங்களாலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தவுள்ளது.

அத்தோடு இடைக்கால அதிகாரத்தை நிறுவி, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்தை உள்ளடக்கி சர்வதேச நடுவர் செயல்முறை மூலம் அரசியல் தீர்வைக் காண்பதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள் கோரியபடி, எந்தவொரு அரசியல் தீர்வும் உள்ளார்ந்த சுயநிர்ணய உரிமை மற்றும் கூட்டாட்சிக் கோட்பாடுகளின் அங்கீகாரத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1298662

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பம்

 

 

 

1-25.jpg

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று (12) ஆரம்பமானது.

உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பான 47 நாடுகள், சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இன்று தொடங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கின்றன.

கடந்த ஆண்டு முழுவதும் கவனத்தை ஈர்த்த அனைத்து மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளது.

இதில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்று பங்கேற்கவுள்ளதுடன், வெளிவிவகார அமைச்சரும் இன்று இந்த அமர்வில் உரையாற்ற உள்ளார்.

இதேவேளை, கூட்டத்தொடர் ஆரம்பத்தில், மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

https://media.un.org/en/webtv/

https://thinakkural.lk/article/207196

 

  • கருத்துக்கள உறவுகள்

51 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் ! இலங்கை குறித்தும் விவாதம் !

By PRIYATHARSHAN

12 SEP, 2022 | 04:50 PM
image

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை (12) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றையதினம் இலங்கை தொடர்பான விவாதமும் நடைபெறவுள்ளது.

கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று இலங்கை தொடர்பான விபரமான எழுத்து மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிடவுள்ளதுடன் அதன் சாரம்சத்தையும் வாசிப்பார்.

இலங்கை அரசாங்த்தை பிரதிநிதித்துவப்படுத்தி  ஜெனிவா சென்றுள்ள தூதுக்குழுவின் தலைவர் அலிசப்ரி மனித உரிமைப் பேரவையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் உரையாற்றவிருக்கிறார்.

 

 

  • நாடுகளை அடிப்படையாக கொண்ட பொறிமுறைகளை ஆதரிக்கவில்லை என  பெலாரஸ் தெரிவிப்பு 

 

  • அரசியல்நோக்கங்களை அடிப்படையாக கொண்ட தீர்மானங்கள்  உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுபவை என அந்த நாடு தெரிவித்துள்ளது.

 

  • நாடுகளை அடிப்படையாக கொண்ட தீர்மானங்கள் ஐ.நா. சாசனத்தின் அடிப்படையை மீறுபவையென புரூண்டி தெரிவித்துள்ளது.

 

  • கடந்த தீர்மானம்  குறிப்பிட்ட நாட்டின் ஆதரவுடன் நிறைவேற்றப்படாததால் அது பயனுள்ளதாக அமையவில்லை என சிம்பாப்வே தெரிவித்துள்ளது.

 

  • மனித உரிமைகளிற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ள வியட்நாம் இழப்பீடு மற்றும் நிலங்கை விடுவிப்பது குறித்த இலங்கையின் தேசிய முயற்சிகளை அங்கீகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

  • இலங்கையில் காணப்படும் மனித உரிமை நிலவரத்தை பெரிது படுத்தும் எண்ணமில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

 

  • ஐக்கியநாடுகள் மனித உரிமைகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளுடன் இலங்கை தன்னை இணைத்துக்கொள்வது அவசியம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

  • முக்கியமான நடவடிக்கையாக இலங்கை  நீண்டகாலமாக காணப்படும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் ஊழல் ஆகியவற்றிற்கு தீர்வை காணவேண்டும் எனவும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

  • இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி குறித்து கனடா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

 

  • ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அண்மைய தாக்குதல்கள் இலங்கையில் தொடர்ந்து நிலவும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கும் பத்திரிகையாளர்கள், சிவில் சமூகத்தினர் துன்புறுத்தப்படும் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றது என கனடா தெரிவித்துள்ளது.

 

  • அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான இலங்கையின் அணுகுமுறை கடினமாவது குறித்து நியுசிலாந்து கவலை தெரிவித்துள்ளது.

 

  • பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான புதிய அறிவிப்புகளை சுட்டிக்காட்டியுள்ள நியுசிலாந்து சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திவைக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

  • இலங்கைக்கு தனது தளர்ச்சியற்ற ஆதரவை வெளியிட்டுள்ள பாகிஸ்தான், இலங்கை முன்னெடுத்துள்ள உள்நாட்டு முயற்சிகளை மனித உரிமை பேரவை அங்கீகரிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

  • இலங்கை தனது ஆணையை நிறைவேற்ற கால அவகாசம் வழங்கப்படவேண்டுமென துருக்கி தெரிவித்துள்ளது.

 

  • முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாட்டிலிருந்து வெளியேறிய பின்னர் இலங்கை ஜனநாயக ஒழுங்கை ஏற்படுத்தியுள்ளமைக்கு உகண்டா பாராட்டு தெரிவித்துள்ளது.

 

-----------------------------------------------------------------------------------------------------------------

 

இலங்கை தொடர்பான விபரமான எழுத்து மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிடுவார்

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இன்று (12) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான விவாதமும் நடைபெறவுள்ளது.

கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று இலங்கை தொடர்பான விபரமான எழுத்து மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிடவுள்ளதுடன் அதன் சாரம்சத்தையும் வாசிப்பார்.

 

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/135478

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

உள்ளக பொறிமுறை குறித்து பச்லெட்டை தெளிவுபடுத்தவுள்ள  அரச தூதுக்குழு

 

காணாமல் போனோர்  அலு­வ­லகம்,  இழப்­பீட்டு அலு­வ­லகம் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை  ஒருங்­கி­ணைக்கும்  செய­லகம்  என்­ப­ன­வற்றை இலங்கை முன்­னெ­டுத்து செல்­கின்­றது என்­பது குறித்தும் இலங்கைத் தூதுக்­கு­ழு­வினர் ஐ.நா. மனித. உரிமை ஆணை­யாளர்   பச்­லெட்­டிடம் எடுத்­துக்­கூ­ற­வி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

http://fe.virakesari.lk/article/135485

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.