Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை அழிக்க வேண்டாம் - ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை அழிக்க வேண்டாம் - ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்

By VISHNU

13 SEP, 2022 | 09:26 PM
image

( எம்.நியூட்டன்)

 

தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்கவேண்டாம் சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை இல்லாது செய்யவேண்டாம்   என  ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சிவநேசபிள்ளை சிவச்செல்வன் தெரிவித்தார். 

 யாழ் ஊடக அமையத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதேஅவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தீவகத்தை பொறுத்தவரையில் ஆழ்கடல் மீன்பிடியை விட களப்பு கடலை நம்பி தொழில் செய்கின்றவர்களே அதிகம்.

இவர்களது வாழ்வாதாரத்தை யாரும் சிந்திப்பதாக தெரியவில்லை.

கடலட்டை வளர்ப்பு என்பது அந்நியச் செலாவணியை ஊக்குவிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. தீவகப் பகுதிகளில் கடலட்டை பண்ணைகளை உருவாக்குவதற்கான இடங்கள் சீன நாட்டுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனால் மீன் வளங்கள் பெரும்பாலும் இல்லாமல் போகும் என்பதுடன் களப்பு கடலை நம்பி தொழில் செய்பவர்கள் பாதிப்படைவார்கள். இதனை கடற்றொழில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.

கடலட்டை பண்ணை அமைக்க அனுமதிக்கும்போது அப்பகுதியை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடாமல் அனுமதிக்கப்படுவதுடன், அவர்கள் இடத்தை அடையாளப்படுத்தி விட்டு செல்கின்றார்கள். நேரடியாக அரசாங்கத்திடம் அனுமதி எடுத்து விட்டு வருகின்றார்கள்.

இது தொடர்பாக மக்களுக்கு எதுவும் தெரியாது. ஆகவே எமக்கு தகவல் தெரிந்தவுடன் இதனை ஊடகங்கள் ஊடாக தெரிவித்து எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம் - என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க தலைவர் மடுத்தின் பெனடிக், கடலட்டை வளர்ப்புக்கு அனுமதி கொடுக்கப்பட்டால் கடற்றொழிலாளர்களை அது பாதிக்கும் என்றும் கடலட்டை பண்ணைக்கான அனுமதி  வழங்ப்படுகின்றது என்றார்.

கடல் தொடுவாய்களை மறைத்து கடலட்டை பண்ணைகள் கட்டப்படுவதனால் மீன்வரத்து குறைந்து கடற்றொழிலாளர்கள் பாதிப்பை எதிர்கொள்வார்கள்.

செயற்கை தொழில்களால் இயற்கை தொழில்கள் தீவகத்தில் பாதிக்கப்படுவதை நாம் விரும்பவில்லை.சீனாவுக்கு எங்களுடைய கடல் வளத்தை கொடுப்பதை முற்றும் முழுதாக நாங்கள் விரும்பவில்லை. எங்களிடம் வளம் இருக்கின்றது. 

இன்னொரு நாட்டிடம் அதனை கொடுத்து வளத்தை பெற வேண்டிய அவசியமில்லை. வெளிநாட்டுக்கு வளங்களை கொடுத்து நாங்கள் இன்னொரு நாட்டிடம் வளங்களை பெற வேண்டிய அவசியம் இல்லை தீவக மக்களிடமும் எமது பகுதி புலம்பெயர்ந்த மக்களிடம் இதற்கான வளங்கள் இருக்கின்றன.

கடற்றொழில் அமைச்சரிடம் இது தொடர்பாக முறையிட்ட போதும் அதையும் மீறி கடலட்டை பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/135576

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து எம் ஜி ஆர் என்ன கருத்து சொல்லப்போகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

பண்ணைக்கடலுக்குள் பழைய பஸ்.. கார்.. ரயருகளைக் கொட்டி மொத்தக் குடாநாட்டுக்கும் மீன் கொடுப்பார். அதற்கும் ஒரு குறூப் ஒத்தூதும். 

1 hour ago, nunavilan said:

ஈழத்து எம் ஜி ஆர் என்ன கருத்து சொல்லப்போகிறார்?

 

1 hour ago, ஏராளன் said:

கடற்றொழில் அமைச்சரிடம் இது தொடர்பாக முறையிட்ட போதும் அதையும் மீறி கடலட்டை பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்

கடற்தொழில் அமைச்சரால்.. தீவக.. 779 பெரும் வீதியையே போட்டு முடிக்க முடியவில்லை. அந்த வீதி பெரும்பான்மை தீவக மக்களின் பாவனைக்குரிய வீதி மட்டுமன்றி.. பாடசாலைகள் அமைந்துள்ள வீதியும் வியாபாரிகள்.. தோட்டம் செய்பவர்கள் அடிக்கடி வளங்களை கொண்டு போகும் கொண்டு வரும் வீதியும் ஆகும். இந்த வீதி செப்பணிட ஆரம்பிச்சு 10 வருடங்கள் ஆகப் போகுது. இன்னும் வீதி திருத்துப்படல்லை. இதில் கடற்தொழில் அமைச்சருக்கு கணிசமான வாக்குளை இங்கு வசிப்பவர்கள் தான் போட்டும் வருகின்றனர். அப்படி இருந்தும்.. அமைச்சர் கமிசன் பிரச்சனையால்.. ஒப்பந்தக்காரர்களை மாற்றி மாற்றி இப்ப வீதி நடுவீதில கிடக்குது.

பல மதகுகள் சேதப்படுத்தப்பட்டு ஊர் மக்களின் காணிக்குள்ளால் பஸ் போக்குவரத்துக்கு வழி செய்யப்பட்டிருக்குது. அதுவும் குன்றும் குழியுமாக. வரும் மாரிகாலத்தில் எப்படித்தான் அப்பகுதி மக்கள் இதில் பயணம் செய்வார்களோ..??!

இந்த வீதி திருத்துப்படாமையால்.. யாழ் - ஊர்காவற்றுறை சேவையில் ஈடுபடும். ஒரே ஒரு உருப்படியான பஸ் சேவையும் ஊர்காவற்றுறையில் இருந்து யாழை அடைய இரண்டு மணி நேரம் எடுக்கும். இதனால் யாழில் கல்வி கற்கும் தனியார் வகுப்புகளுக்கு வரும் மாணவ மாணவிகள் நடு நிசியில் வீடு திரும்பும் நிலையும் பாதுகாப்பற்ற சூழலும் நிலவுவதை காணலாம்.  

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையில் தீவகத்தில் உள்ள முக்கிய இராணுவ முகாம்களை.. கடற்படை முகாம்களை சுற்றி காப்பெட் வீதிகள் போடப்பட்டிருப்பதுடன்..யாழ் கடலேரியை அண்டி உல்லாச தடாகங்கள்.. பூங்காக்கங்கள்.. மாளிகைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்கு எமது கடல் வளத்தை கொடுத்தால் ஒன்றிணைந்து போராடுவோம் - யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்கள்

By VISHNU

15 SEP, 2022 | 05:18 PM
image

( எம்.நியூட்டன்)

சீன நாட்டுக்கு எங்களுடைய கடல் வளத்தை கொடுப்பதாக இருந்தால் அதற்கு எதிராக நாங்கள் வடக்கு கடற்றொழில் சமூகமாக போராடுவோம் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார்.

 யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே

அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் முதலீடு என்ற போர்வையில் கடலட்டை பண்ணை, நீர் வேளாண்மை திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக மன்னார் பூநகரி யாழ் மாவட்ட பிரதேசங்களில் இந்த திட்டங்கள் முதலீடு என்ற போர்வையில் மிகப்பெரியளவில் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. அதன் பலாபலனை இன்று நாங்கள் அனுபவிக்க தொடங்கி இருக்கின்றோம். இதுவரைக்கும் 

வடமாகனத்தில் 750க்கு மேற்பட்ட கடலட்டை பண்ணைகள் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த பண்ணையின் மூலம் கடற்றொழிலாளர்கள் என்ன வருமானத்தை பெற்றனரா, அவர்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கப்பட்டுள்ளதா, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றதா இல்லையா என்பதை தெளிவான ஆய்வினை மேற்கொண்டு எதிர்காலத்தில் கடலட்டை பண்ணை வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகள், வடமாகண கடற்றொழில் நீரியியல் வளத் திணைக்களம், கடலோரப் பாதுகாப்பு திணைக்களம், பிரதேச செயலகங்கள், கடற்றொழில் அமைச்சர், ஜனாதிபதி என்பவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். இது மக்கள் நலன் சார்ந்த பிரச்சனை. அந்த பிரதேச மக்களின் வாழ்வாதாரம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையும் இதன்போது நீங்கள் பார்க்க வேண்டும்.

வெளிநாட்டவர்களிற்கு அடிமையாகி தொழில் செய்கின்ற சூழல் யாழ் மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கின்றது. 

வடக்கு கடலை விற்று, முதலீட்டைப் பெற்று இலங்கையில் இருக்கின்ற கடனை அடைக்க டொலரை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.

நாங்கள் உங்களிடம் தயவாக கேட்பது எங்கள் கடலில் நாங்கள் உழைத்து மக்களுக்கு சுத்தமான 

புரதமான மீனை கொடுப்பதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.

எங்கள் கடலை வைத்து ஏற்றுமதி மூலம் டொலரை பெற வேண்டுமாக இருந்தால் கடற்றொழிலாளர் குடும்பங்களும் சாவினை நோக்கியே நகரும்.

கடலட்டை குஞ்சு பிடித்தல் என்பது கடற்சூழலுக்கு பாதிப்பான விடயம். கடலட்டைக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் இடையே ஒரு சங்கிலித் தொடர் இருப்பதனாலேயே மீன் இனங்கள் அந்தப் பிரதேசத்தில் வருவதும் வாழ்வதும் உறுதியாக இருக்கின்றது.

அண்டை நாடான இந்தியாவில் கடல் அட்டை பிடிப்பதற்கும் கடல் அட்டை வளர்ப்பதற்கும் தடை. இலங்கையில் மாத்திரம் கடலட்டை குஞ்சுகளை பிடித்து பண்ணையில் விட்டு அதிக லாபத்தை பார்க்கின்றார்கள்.

அந்த குஞ்சுகளை கடலில் விட்டு அட்டைப் பண்ணையை வளைத்து அதிக லாபம் பெற முடியாது என்பது மீனவ சமூகம் நிதர்சனமாகக் கண்ட உண்மை.

அந்தப் பண்ணையில் வளர்க்கப்படுகின்ற கடலட்டைக்கு சந்தை கேள்வி இல்லை என்பதை தெளிவாக கூற விரும்புகின்றோம். இந்த கடலட்டைப் பண்ணைகளை மட்டுப்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வெளிநாட்டுகளுக்கும் எங்கள் காணிகளை கொடுத்து எங்கள் சமூகத்தை அடிமையாக்க வேண்டாம் என்ற செய்தியையும் துறை சார்ந்த அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். எதிர்காலத்தில் யாழ்ப்பாண மக்களுக்கோ வடமாகாண மக்களுக்கோ கடலுவு மீன்கள் கிடைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

கடலட்டை பண்ணையாளர் சங்கம் என்பதை உருவாக்கி கடலையும் கடல் பிரதேசத்தையும் அவர்கள் கையில் எடுக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் கிராமிய கடற்றொழில் அமைப்பு இருக்கின்றது. கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன.

அவர்களோடு இணைந்து செயல்படாமல் தனியான முறையிலே கடலட்டை சங்கத்தை உருவாக்கி மீனவ சமூகத்திற்குள் பிரச்சினைகளையும் விரிசல்களையும் உண்டு பண்ணுவதற்குரிய செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.

கடலட்டை பண்ணை அமைக்க சங்கங்கள் அனுமதி வழங்கும்போது நன்கு பரிசீலித்து அனுமதி வழங்குங்கள். கடலட்டை பண்ணைகளின் புதுவிதமான தொழில்நுட்பம் அதனுடைய சாதக பாதக பிரச்சனைகளை மக்களுக்கு புரியாமல் 10 லட்சம் 15 லட்சம் என கூறி விற்கலாம் என்ற மாயைக்குள் உள்ளீர்க்கப்படுகின்றனர்.

சீன நாட்டுக்கு எங்களுடைய கடல் வளத்தை கொடுப்பதாக இருந்தால் அதற்கு எதிராக நாங்கள் வடக்கு கடற்றொழில் சமூகமாக போராடுவோம். யாழ்ப்பாணத்திலே அரியாலை பிரதேசத்தில் கடலட்டை குஞ்சு உற்பத்தி செய்யும் சீன நிறுவனம் இருக்கின்றது. அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. சீன நாடாக இருந்தாலும் சரி எந்த நாடாக இருந்தாலும் சரி எங்களுடைய கடற்பிரதேசங்களை எங்களுடைய கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி அவர்களுக்கு வாழ்வாதாரத்தை செய்ய வேண்டுமே ஒழிய வெளிநாடுகளுக்கு வழங்குவதை முற்றுமுழுதாக நிராகரிக்கிறோம்.

கடற்றொழில் அமைச்சர் யாழ்ப்பாணம் வரும்போது நாங்கள் நேரடியாக சென்று எங்களுடைய கருத்தை கூறுவோம் - என்றார்.

https://www.virakesari.lk/article/135727

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.