Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், நகைகளைத் தேடி யாழ். இருபாலையில் அகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், நகைகளைத் தேடி யாழ். இருபாலையில் அகழ்வு

By DIGITAL DESK 5

17 SEP, 2022 | 10:59 AM
image

யாழ்ப்பாணம், இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் கோப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் இந்த அகழ்வுப் பணி இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது .

20220917_101252.jpg

இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தங்க நகைகள் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து 6 பேர் அகழ்வுப் பணிக்கு தயாராகிய நிலையில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இராணுவத்தில் உள்ளவர்களும் உள்ளடங்கியிருந்தனர் .

20220917_101035.jpg

இந்த நிலையில் கோப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் இன்று முற்பகல் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

https://www.virakesari.lk/article/135828

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களையும் நகைகளையும் கண்டுபிடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணி இடைநிறுத்தம்

By DIGITAL DESK 5

17 SEP, 2022 | 04:39 PM
image

 

யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றில் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் ஆயுதங்களையும், நகைகளையும் கண்டுபிடிக்கும் நோக்குடன் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் மதியம் 2 மணியுடன் நிறுத்தப்பட்டது.

 

 

74cd42b0-d111-44ec-a124-1e33bb271e79.jpg

டச்சு வீதியில் உள்ள வீடொன்றில் புலிகளின் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் ஆயுதங்களும், நகைகளும் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் அவற்றைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கான அகழ்வை மேற்கொள்ள யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் கோப்பாய்ப் பொலிஸார் கோரி இருந்தனர். 

நீதிமன்ற அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் இன்று சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 2 மணி வரையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

புதையல் அகழ்வதற்காக கொழும்பில் இருந்து விசேட அணியினர் வந்திருந்த நிலையில் , அகழ்வு பணிகளுக்காக கனரக வாகனங்களும்  பயன்படுத்தப்பட்டன. 

யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் போது, எவ்விதமான பொருட்களும் மீட்கப்படாத நிலையில் அகழ்வு பணிகள் மதியம் 2 மணியளவில் இடைநிறுத்தப்பட்டன.

https://www.virakesari.lk/article/135860

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

டச்சு வீதியில் உள்ள வீடொன்றில் புலிகளின் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் ஆயுதங்களும், நகைகளும் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் அவற்றைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கான அகழ்வை மேற்கொள்ள யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் கோப்பாய்ப் பொலிஸார் கோரி இருந்தனர்.

அப்பாடா..... காணிக்காரருக்கு இந்த எரிபொருள் பற்றாக்குறை காலத்தில் ஒரு கவலை தீந்தது. இலங்கை இராணுவம் தனது காணியில் கண்ணி வெடிகளை புதைத்திருக்குமோ என்றொரு சந்தேகம் வந்து, இரகசிய தகவல் கொடுத்து, வைத்தவர்களாலேயே எடுக்க நினைத்தாரோ? "காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த மாதிரி" நகை என்றவுடன் பாய்ஞ்சோடி வந்திட்டினம் கிளறி எடுக்க! ஹி .... ஹீ ....  சும்மா பகிடி.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பொலிஸூக்கும் இராணுவத்திற்கும் பதவி உயர்வு தேவைன்னா.. அரசியல்வாதிகளின் தேவைக்கு கிண்ட வேண்டியான். இதற்கு நீதிமன்றங்களும் நீதிபதிகளும்.. வக்காளத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

சிங்கள பொலிஸூக்கும் இராணுவத்திற்கும் பதவி உயர்வு தேவைன்னா.. அரசியல்வாதிகளின் தேவைக்கு கிண்ட வேண்டியான். இதற்கு நீதிமன்றங்களும் நீதிபதிகளும்.. வக்காளத்து. 

அதுமட்டுமல்ல: இன்றைய நாட்டுப்பிரச்சனையை திசைதிருப்ப, வடக்கில் பல புரளிகளை கிளப்பவேணும், விகாரை கட்ட வேணும், வலிந்து தமிழரை இழுக்க அபிஷேகம் நடத்த கூட்டமா வந்து இறங்க வேணும், இது சிங்கள பவுத்த நாடு என்று கூவவேணும், நாடு பத்தி எரியவேணும், அதில விறகு பிடுங்க வேணும்.

வீட்டுக்குடியிருப்பாளர் இருக்க அவர்கள் வளவில் யாரோ புதையல் கிண்டினாராம்,இரகசிய தகவல் தந்தவராம். என்னமாதிரி கதை சோடிக்கிறானுகள். காக்காவுக்கு கனவிலும் ஏதோ அழையுற நினைவாம். நாட்டில வெடித்த குண்டை தடுக்க துப்பில்லை துலக்குகினமாம் வடக்கில். 

குருந்தூர் மலை விவகாரம் இன்னும் வடக்கில்  போலீசார் கேட்டவுடன் போடும் தடையுத்தரவு நல்ல உதாரணம் வடக்கு  நீதிமன்றங்கள் எப்படி மக்களை அடக்கியாள  ஒத்தூதுகின்றன  என்பதற்கு. ஆனால் இதே தடையுத்தரவை தென்பகுதியில் போலீசார் கேட்க்கும் போது, அந்த நீதிபதிகள் எதிர்த்து கேள்வி கேட்க்கின்றார்கள், தடை போட மறுக்கிறார்கள். எங்களுக்கு வந்து வாய்த்ததுகள் எல்லாம் அப்படிப்பட்டவையே! யாரை நோவது? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.