Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜப்பான் மீது ஏவுகணை ஏவியது வடகொரியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான் மீது ஏவுகணை ஏவியது வடகொரியா!

ஜப்பான் மீது ஏவுகணை ஏவியது வடகொரியா!

ஜப்பானின் வடக்குப் பகுதியின் மீது வட கொரியா, பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி 07:29 மணிக்கு ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து வெளியான எச்சரிக்கையில், ஹொக்கைடோ தீவில் உள்ள மக்களுக்கு விமானம் மற்றும் ரயில் பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

வடகிழக்கு ஹொக்கைடோ மற்றும் அமோரி பகுதிகளில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

ஜப்பானில் இருந்து சுமார் 3,000 கிமீ (1,860 மைல்) தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழுந்ததாகவும், இது தொடர்பாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானிய கடலோரக் காவல்படை மற்றும் தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்களால் கண்டறியப்பட்ட ஏவுகணை, 4,500 முதல் 4,600 கிமீ (2,800-2,850 மைல்கள்) வரை அதிகபட்சமாக 1,000 கிமீ (620 மைல்கள்) உயரத்திற்கு பறந்ததாக தெரிவித்தனர்.

சீனாவுடனான எல்லைக்கு அருகே நாட்டின் வடபகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஆயுதம், பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு சுமார் 22 நிமிடங்கள் வானில் பறந்தது.

ஜப்பானின் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்த நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டித்து, ஏவுதலை வன்முறை நடத்தை என்று விபரித்தார். மேலும் ஜப்பானிய அரசாங்கம் அதன் தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

எந்தவொரு முன் எச்சரிக்கையும் ஆலோசனையும் இன்றி மற்ற நாடுகளை நோக்கி ஏவுகணைகளை பறக்கவிடுவது சர்வதேச விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது.

கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பான் மீது வடகொரியா ஏவுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1302725

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஜப்பான் மீது ஏவுகணை ஏவியது வடகொரியா!

ஜப்பானின் வடக்குப் பகுதியின் மீது வட கொரியா, பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

ஏன் அமெரிக்கா சும்மா பார்த்துக்கொண்டிருக்கு? நேட்டோவை விட்டு வட கொரியாவுக்கு அடிக்கலாம் தானே?
அமெரிக்கா உலகத்திலை நடக்கிற எல்லாத்தையும் சற்றலைட் மூலமாக கவனிச்சுக்கொண்டிருக்கும் எண்டு சொல்லுறாங்கள். அப்ப இதையும் பாத்திருக்கும் தானே?
ஏன் எதிர்ப்பு ஆயுதம் ஏவி கொரியா விட்டதை திருப்பி அடிக்கேல்லை????

என்ன நான் சொல்லுறது கேக்குதோ? 😀

  • கருத்துக்கள உறவுகள்

செய்யமாட்டார்கள்....... ஜப்பானுக்கும் ஆயுதபூசை (வியாபாரம்) செய்ய கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவறவிட மாட்டார்கள் .........!  🤔

  • கருத்துக்கள உறவுகள்

" ஜப்பானின் ஆழுகைக்கு உட்பட்ட பகுதியின் மேலாக ஏவுகணை ஏவப்பட்டது. ஜப்பானின் மீது அல்ல. 

"A short while ago, North Korea launched a ballistic missile that flew over Japan and is believed to have landed in the Pacific Ocean,”Prime Minister Fumio Kashida’s office said in a statement, adding “This is an outrageous act following the recent repeated ballistic missile launches, and I strongly condemn it.”

😏

Edited by Kapithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.