Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் கடத்திக்கொல்லப்பட்ட இந்தியக் குடும்பம் ; சந்தேக நபர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கடத்திக்கொல்லப்பட்ட இந்தியக் குடும்பம் ; சந்தேக நபர் கைது

By T. SARANYA

07 OCT, 2022 | 02:55 PM
image

அமெரிக்காவில் இந்தியக் குடும்பம் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39), ஆகியோருடன் வசித்து வந்தார். 

கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர்.

அந்த குடும்பம் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. 

குடும்பத்தைத் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் உறவினர்களால் காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு நடத்தினர். அப்போது அந்த குடும்பம் துப்பாக்கி முனையில் மர்ம நபரால் கடத்தப்பட்டது தெரியவந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் நான்கு பேரையும் இறந்த நிலையில் சடலமாக போலீசார் நேற்று கண்டு பிடித்துள்ளனர். 

கடத்திய போது பதிவான திடுக்கிடும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் நான்கு பேரையும் துப்பாக்கி முனையில் ஒருவர் கடத்துவது தெளிவாகத் தெரிகிறது.

இதை தொடர்ந்து விசாரணையை துரிதப்படுத்திய பொலிஸார் கொலை செய்யப்பட்ட நபர்களில் ஒருவரின் ஏடிஎம் அட்டையைப் ஒரு நபர் பயன்படுத்தியதை கண்டறிந்தனர். 

ஜீசஸ் மானுவல் சல்காடோ (48 வயது) என்ற அந்த நபரை பொலிஸார் கைது செய்ய சென்ற போது அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். பின்னர் போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 இந்நிலையில் ஜீசஸ் சல்காடோவுக்கு ஏற்கனவே குற்றப்பின்னணி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு கொள்ளை வழக்கில் சிறைக்கு சென்றுள்ள சல்காடோ பின்னர் 2015 ஆம் ஆண்டு பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

தற்போது சல்காடோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரிடம் பொலிஸார் விசாரணையை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொலைக்கான காரணம் தற்போது வரை தெரியவரவில்லை. இருப்பினும் பணத்திற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இந்த சம்பவம் தற்போது அமெரிக்காவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/137175

  • கருத்துக்கள உறவுகள்

கொலையாளி இந்திய வம்சாவளியினரின் கீழ் வேலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.