Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன இராணுவத்தால் கவர்ந்தீர்க்கப்படும் பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீன இராணுவத்தால் கவர்ந்தீர்க்கப்படும் பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள்!

சீன இராணுவத்தால் கவர்ந்தீர்க்கப்படும் பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள்!

பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள் சீன இராணுவத்திற்கு பயிற்சிகளை வழங்குவதற்காக பெருமளவிலான பணத்துடன் சீனாவிற்கு இழுக்கப்படுகின்றனர்.

30 முன்னாள் பிரித்தானிய இராணுவ விமானிகள் வரை சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க சென்றதாக கருதப்படுகிறது.

சீன இராணுவத்தில் பணிபுரியும் முன்னாள் இராணுவ விமானிகளுக்கு பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விமானிகளை கவர்ந்தீர்க்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும், சமீபத்தில் அது அதிகரித்து வருவதாகவும் மேற்கு அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘விமானிகளின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு தற்போதைய பிரித்தானிய சட்டத்தை மீறவில்லை, ஆனால் பிரித்தானிய மற்றும் பிற நாடுகளில் உள்ள அதிகாரிகள் செயற்பாட்டைத் தடுக்க முயற்சிக்கின்றனர்’ என கூறினார்.

237,911 பவுண்டுகள் வரை முன்னாள் இராணுவ விமானிகளுக்கு வழங்கப்படுமென மேற்கத்திய அதிகாரி கூறினார்.

ஓய்வுபெற்ற பிரித்தானிய விமானிகள் மேற்கத்திய விமானங்கள் மற்றும் விமானிகள் செயற்படும் விதத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறார்கள். இது தாய்வான் போன்ற ஏதேனும் மோதல்கள் ஏற்பட்டால் அது முக்கியமானதாக இருக்கும்.

https://athavannews.com/2022/1305543

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனின் முன்னாள் ராணுவ விமானிகளை 'ஆசை காட்டி' தன் பக்கம் இழுக்கும் சீனா

  • கார்டன் கொரேரா
  • பாதுகாப்பு விவகார செய்தியாளர், பிபிசி
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ராயல் விமானப்படை விமானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரிட்டனின் முன்னாள் ராணுவ விமானிகள் சீன ராணுவத்திற்கு தங்களது நிபுணத்துவத்தை வழங்குவதற்காக சீனாவால் ஆசை காட்டி ஈர்க்கப்படுவதாக மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகளால் கூறப்படுகிறது. பெருமளவிலான பணம் அவர்களுக்கு வழங்கபடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் முன்னாள் ராணுவ விமானிகள் 30 பேர் வரை, சீன மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பயிற்சியளிக்கச் சென்றதாகக் கருதப்படுகிறது. சீன ராணுவத்தில் பணியாற்றும் அந்த முன்னாள் ராணுவ விமானிகளுக்கு பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விமானிகளை ஆசைவார்த்தை கூறி ஈர்க்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் சமீபத்தில் அந்த முயற்சி அதிகரித்து வருவதாகவும் மேற்கத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "விமானிகளின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு தற்போதைய பிரிட்டன் சட்டத்தை மீறவில்லை. ஆனாலும் பிரிட்டன் மற்றும் பிற நாடுகளிலுள்ள அதிகாரிகள் இதைத் தடுக்க முயல்கின்றனர்," என்றார்.

 

"இதற்கான லாபகரமான சம்பளம் வழங்கப்படுகிறது. பணம் ஒரு வலுவான உந்துதல்," என்று ஓர் அதிகாரி கூறுகிறார். சிலருக்கு ஆண்டொன்றுக்கு 2,70,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 23 லட்சம் ரூபாய்) வரை சம்பளம் கிடைப்பதாகக் கருதப்படுகிறது.

ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் விமானிகள், மேற்கத்திய விமானங்கள் மற்றும் விமானிகள் செயல்படுகின்ற விதத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறார்கள். தைவான் விவகாரத்தில் உண்டாக்கியுள்ள மோதல் நிலைமை போன்ற சூழல் போல ஏதாவது உண்டானால் சீனாவிற்கு அது முக்கியமானதாக இருக்கும்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

"அவர்கள் அந்த அறிவைப் பகிரக்கூடிய மிகவும் கவர்ச்சிகரமான குழுவாக இருக்கிறார்கள். சீன ராணுவ விமானப்படை தந்திரோபாயங்கள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கு சிறந்த அனுபவமுள்ள மேற்கத்திய விமானிகளை எடுத்துக் கொள்கிறது," என்று ஒரு மேற்கத்திய அதிகாரி கூறினார்.

2019ஆம் ஆண்டில் சிறிய எண்ணிக்கையில் முன்னாள் ராணுவ விமானிகள் பணியமர்த்தப்பட்டது குறித்து பிரிட்டனுக்கு முதல்முறையாகத் தெரிய வந்தது. அதில் அப்படி பணியமர்த்தப்பட்டவர்களில் தனித்தனி நபராகக் கையாளப்பட்டனர். கோவிட்-19 பேரிடர் அந்த முயற்சிகளைக் குறைத்தது. அந்த நேரத்தில் சீனாவிற்கு பயணம் செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்தது. ஆனால், இப்போது அப்படியில்லை என்பதால் அந்த முயற்சிகள் அதிகரித்துள்ளன. இதுவே இப்போதைய இந்த எச்சரிக்கைக்கு வழிவகுத்தது.

"இந்த முயற்சி அதிகரித்து வருவதை நாங்கள் பார்க்கிறோம். இதுவொரு தொடர்ச்சியான பிரச்னை," என்று ஒரு மேற்கத்திய அதிகாரி செய்தியாளர்களிடம் ஒரு மாநாட்டில் கூறினார். இப்போது பணியாற்றிக் கொண்டிருப்பவர்களும் குறி வைக்கப்படுகிறார்கள். ஆனால், இதுவரை யாரும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

வேகமான ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்களில் அனுபவம் பெற்ற விமானிகள், ராயல் விமானப்படை மட்டுமல்ல, ராணுவம் முழுவதும் இருந்து வருகிறார்கள். அவர்கள் டைஃபூன்ஸ், ஜாகுவார்ஸ், ஹேரியர்ஸ், டொர்னாடோஸ் போன்ற விமானங்களில் பறந்தவர்கள்.

எஃப்-35 விமானிகள் இதில் ஈடுபடவில்லை என்றாலும் சீனா அவர்கள் மீதும் ஆர்வம் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. சில விமானிகள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்கள் சில காலத்திற்கு முன்பு ராணுவத்தை விட்டு வெளியேறினர். இவர்கள் போக, மற்ற நட்பு நாடுகளின் விமானிகளும் குறி வைக்கப்படுகின்றனர்.

 

ராயல் விமானப்படை விமானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இவர்களைச் சேர்த்துக்கொள்ள இருக்கும் இடைத்தரகர் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாகவும் தென்னாப்ரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட விமானப் பயிற்சி அகாடமி இதில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எந்தவொரு விமானியும் அலுவல்பூர்வ ரகசியங்கள் சட்டத்தை மீறியதாகவோ, அவர்கள் ஏதேனும் குற்றம் செய்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை. ஆகவே, இந்தச் செயல்பாட்டைத் தடுப்பது, தற்போதைய ஊழியர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளுக்குத் தெரிவிப்பது, முக்கிய தகவல்களைப் பாதுகாப்பதற்கான அவர்களின் கடமைகளைப் பணியாளர்களுக்கு நினைவூட்டுவது ஆகியவையே இந்த எச்சரிக்கையை விடுத்ததன் நோக்கம்.

"சீன மக்கள் குடியரசில் உள்ள மக்கள் விடுதலை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, பிரிட்டன் ஆயுதப்படையின் இந்நாள் மற்றும் முன்னாள் விமானிகளைச் சேர்த்துக் கொள்வதற்கான சீனாவின் ஆட்சேர்ப்பு திட்டங்களை நிறுத்த நாங்கள் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்," என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

"பணிபுரிபவர்கள் மற்றும் முன்னாள் பணியாளர்கள் அனைவரும் ஏற்கெனவே லுவல்பூர்வ ரகசியங்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள். மேலும் பாதுகாப்புத் துறை முழுவதும் இருக்கின்ற ரகசியம் காக்கும் ஒப்பந்தங்கள், தகவலை வெளிப்படுத்த முடியாத ஒப்பந்தங்களைப் பயன்படுத்துவதை நாங்கள் மதிப்பாய்வு செய்கிறோம். அதே நேரத்தில், இந்த விஷயம் உட்பட, சமகால பாதுகாப்பு குறித்த சவால்களைச் சமாளிக்க கூடுதல் வசதிகளை உருவாக்கும் ஒன்றாக புதிய தேசிய பாதுகாப்பு மசோதா இருக்கும்."

https://www.bbc.com/tamil/global-63296143

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவின் முன்னாள் விமானிகளுக்கு பெரும் சம்பளத்தை வழங்கி பணியில் அமர்த்திய சீனா - விசாரணைகள் ஆரம்பம்

By RAJEEBAN

09 NOV, 2022 | 12:45 PM
image

தேசிய பாதுகாப்பு இரகசியங்களை களவாடுவதற்காக  அவுஸ்திரேலியாவின் முன்னாள் விமானிகளுக்கு சீனா மிகப்பெரும் சம்பளத்தை வழங்குகின்றது என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

c323b77c003ce39e328a6f5082752bab.jpg

சீனா அவுஸ்திரேலியாவின் முன்னாள் விமானிகளை பணிக்கு அமர்த்துவதை தடை செய்யும் சட்டம் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லெஸ் தேசிய பாதுகாப்பு இரகசியங்களை வேறு ஒரு தரப்பிற்கு வழங்குவது குற்றம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் தொடர்வதால் இந்த விடயத்தில் எத்தனை அவுஸ்திரேலிய பிரஜைகள் தொடர்புபட்டுள்ளனர் என்பதை அவர் தெரிவிக்க மறுத்துள்ளார்.

சீனாவிற்கு போர்பயிற்சிகளை வழங்குமாறு அவுஸ்திரேலியாவின் முன்னாள் விமானிகள் சிலர் அணுகியிருக்கலாம் என வெளியாகும் கரிசனைக்குரிய விபரங்கள் குறித்து அறிந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்தவேளை நான் எனது திணைக்களத்தை இது குறித்து ஆராயுமாறு கேட்டுக்கொண்டேன் என ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

இதுவரை எனக்கு கிடைத்த ஆதாரங்கள் இந்த விடயத்திற்கு தீர்வை காண்பதற்காக தற்போதைய பாதுகாப்பு கொள்கைகள் நடைமுறைகள் குறித்து மறு ஆய்வினை மேற்கொள்ளவேண்டிய தேவையை உணர்த்தியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

793de4092709acf62d8eda933808ab35.jpg

இதன் காரணமாக எனது திணைக்களத்தினை இந்த மறுஆய்வினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்,பாதுகாப்பு செயற்பாடுகளும் அதனுடன் தொடர்புபட்டவர்களும் அதனுடன் தொடர்புபட்ட சொத்துக்களும் வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் இலக்குவைக்கப்படுவது புதிய விடயமல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்,அரசாங்கத்திற்காக பணியாற்றிய அவுஸ்திரேலியர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களை அறிந்துகொண்டவர்களிற்கு தங்கள் பணிக்கு பின்னரும் அந்த இரகசியங்களை பேணவேண்டிய கடப்பாடு உள்ளது எனவும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/139525

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.