Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நோயாளிகளுடன் தங்கியிருப்பவர்களிடம் கட்டணம் அறவிடும் முறையை அறிமுகப்படுத்தியது கொத்தலாவல வைத்தியசாலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோயாளிகளுடன் தங்கியிருப்பவர்களிடம் கட்டணம் அறவிடும் முறையை அறிமுகப்படுத்தியது கொத்தலாவல வைத்தியசாலை

By RAJEEBAN

02 NOV, 2022 | 09:02 AM
image

நிதி அமைச்சு அதிக வருமானத்தை உழைக்குமாறு கேட்டுக்கொண்டது நிர்வாகம் நோயாளிகளிடமிருந்து பணத்தை அறவிடுமாறு உத்தரவிட்டுள்ளது

 

-

hospital_main.jpg

நோயாளிகளுடன் தங்கியிருப்பவர்களிடமிருந்து கட்டணம் அறவிடும் முறையை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக மருத்துவமனை ஆரம்பித்துள்ளது.

நோயாளியுடன் தங்கியிருப்பவர்களிடமிருந்து 350 ரூபாயை அறவிடும் நடைமுறையை  கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக மருத்துவமனை ஆரம்பித்துள்ளது.

இதனை உறுதி செய்துள்ள மருத்துவமனையின் மருத்துவ விநியோகத்திற்கான இயக்குநர் வைத்தியர் சமன் திலகரட்ண தற்போதைய நிதி நெருக்கடிகள் காரணமாக ஏற்பட்ட பராமரிப்பு நஷ்டத்தினை ஈடுசெய்வதற்காக இந்த திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் வாழ்க்கை செலவு மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக மக்கள் மருத்துவ சிகிச்சைகளை கைவிடும் நிலை காணப்படுகின்ற சூழலில் தெரிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி சிகிச்சை முறை அறிமுகமாக உள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த தகவலும் வெளியாகியுள்ளது.

350 ரூபாய் கட்டணத்தை உணவிற்கான கட்டணத்துடன் சேர்க்கவில்லை என தெரிவித்துள்ள சமன் திலகரட்ண நோயாளிகளுடன் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மின்சாரம் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர் நஷ்டத்தினை ஈடு செய்வதற்காக நாங்கள் இந்த கட்டணத்தை அறவிடுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை 3165 மில்லியன் கடனை செலுத்தவேண்டிய நிலையில் காணப்படுகின்றது.மாதாந்த மின்சார கட்டணம் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட பின்னர் அதிகரித்துள்ளது 19 மில்லியனாக காணப்பட்டது தற்போது 30 மில்லியனாக அதிகரித்துள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மருந்துகளை மாத்திரம் சுகாதார அமைச்சு வழங்குகின்றது அனைத்து செலவுகளையும் பாதுகாப்பு அமைச்சே வழங்குகின்றது நிதி அமைச்சு அதிக வருமானத்தை உழைக்குமாறு கேட்டுக்கொண்டது நிர்வாகம் நோயாளிகளிடமிருந்து பணத்தை அறவிடுமாறு உத்தரவிட்டுள்ளது குறிப்பிட்ட மருத்துவமனை சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/138899

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்பத்திரியில் தாதியும் மருத்துவர்களும் இருக்கும்போது எதற்கு இன்னும் ஒருத்தர்? கட்டணம் அறவிடுவது சரிதான் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பகிடி said:

ஆஸ்பத்திரியில் தாதியும் மருத்துவர்களும் இருக்கும்போது எதற்கு இன்னும் ஒருத்தர்? கட்டணம் அறவிடுவது சரிதான் 

சுயமாக இயங்குவதில் இடர்பாடுடைய நோயாளிகளுக்கு உதவியாளர் தேவை தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.