Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயநிர்ணயம் வென்ற மோரோ மக்கள் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுயநிர்ணயம் வென்ற மோரோ மக்கள் போராட்டம்

By DIGITAL DESK 5

06 NOV, 2022 | 04:20 PM
image

ஐங்கரன் விக்கினேஸ்வரா

உலகில் பல இனங்களின் போராட்டம் வெற்றி பெற்றோ அல்லது முற்றிலும் நசுக்கப்பட்டோ உள்ளது. ஆயினும் மோரோ போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இது உயிர்வாழ்வதற்கும், கலாசார அடையாளத்திற்கும், சுயநிர்ணய உரிமைக்கும் தொடர்ச்சியானதொரு போராட்டமாகும்.

பிலிப்பைன்ஸின் தென்பகுதியில் உள்ள மின்டானோ பிரதேசம் அங்குள்ள பிரதானமான தீவுக்கூட்டமாகும். இங்கு 6 மில்லியன் மக்கள் உள்ளனர். பிலிப்பைன்ஸில் முதல் நாகரிகமென மோரோ மக்களை பதிவுசெய்கிறது என்பதையும், அதன் பொருளாதாரம் மற்ற பழங்குடி சமூகங்களை விட மிகவும் முன்னேறியது என்பதையும் வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகிறது.

ஆனால் மோரோ மக்கள் முழுமையான நாடுநிலைக்கு முழுமையாக வளருமுன், தொடர்ச்சியான வெளிநாட்டு காலனித்துவ தலையீடுகளை சந்தித்தனர். மோரோவுக்கு எதிரான காலனித்துவ ஆக்கிரமிப்பு 300ஆண்டுகளுக்குப் முன் ஸ்பானிஷ் படையெடுப்பு மற்றும் காலனித்துவ தொடக்கமாக வடக்கு தீவுகளான லுசோன் மற்றும் விசயாக்களில் அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியது.

இதன்பின் அமெரிக்க 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மோரோ மக்கள் கடுமையாக போராடினர். சுயநிர்ணய உரிமைப் போரில் அமெரிக்கா மரண அடியை மோரோக்களிடம் வாங்கியதும் உண்மையே.

ஆயினும் அமெரிக்கர்கள் மோரோ எதிர்ப்பைத் தணிக்க இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதையும், பிளவு மற்றும் தந்திரோபாயங்களையும் பாவித்தனர். அத்துடன் பொது மன்னிப்புத் திட்டம்  மோரோ கிளர்ச்சியாளர்களை அமெரிக்க அதிகாரிகளிடம் சரணடைய அனுமதித்தது. 

அமெரிக்க காலனித்துவ அரசாங்கம் அரசியல் கட்டுப்பாட்டைப் பெற்ற பின்னர், முழு தீவுக்கூட்டத்தையும் பொதுநிலமாக அறிவித்தது, ஆனால் இந்நிலமே மோரோ மூதாதையர்களின் தாயகமாகக் கருதப்பட்டது. அதேநேரம், மிண்டானாவோவில் அமெரிக்கா தமது கல்வி நிலையங்கள நிறுவியது. தாங்கள் வெளிநாட்டு அரசாங்கத்தை அமைத்து, வடக்கிலிருந்து குடியேற்ற வாசிகளை அழைத்து வந்து, மைண்டானோவின் வளமான வளங்களை சுரண்ட அனுமதித்தனர்.

இவ்வாறு மோரோ மக்களை சிறுபான்மை இனமாக மாற்றி அமெரிக்காவும் அழிக்க ஆரம்பித்தது. இந்தக்காலனித்துவ ஆதிக்கத்தின் தாக்கம் இன்றும் உணரப்படுகிறது. இந்தக் காலனித்துவ ஆதிக்கம் காரணமாக மோரோ மக்கள் நிலங்களை இழந்தனர்.

லுசோன் மற்றும் விசாயாஸின் பிலிப்பைன்ஸ் மக்கள் 1946இல் சுதந்திரம் பெற்றதொரு புதிய தேசத்தின் பிறப்பின் ஆரம்பம் என்று கருதி மகிழ்ச்சியுடன் கொண்டாடியபோது, மோரோ மக்கள் இந்த நிகழ்வை தங்கள் சொந்த சுதந்திரம் மற்றும் நீண்ட கால இறையாண்மையின் மரணமாக கருதினர்.

மோரோ மண்ணில் குடியேற்ற வாசிகளை கொண்டு வந்து நில அபகரிப்பை சட்டபூர்வமாக்கினர். இதன் பின் மோரோ மக்களும் தாங்களும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை அடைந்தனர். அவர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாக்க, அதாவது தங்கள் நிலத்தைப் மீளப் பெறவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும், போராட்ட குழுக்களை ஏற்பாடு செய்து ஆயுதம் ஏந்தினர்.

நான்கு நூற்றாண்டுகளாக ஜப்பானியர்கள் பிலிப்பைன்ஸ்காரர்கள், ஸ்பானியர்கள் மற்றும் அமெரிக்கர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களை மோரோ மக்கள் தாங்கள் நடத்தி வரும் தேசிய விடுதலை இயக்கத்தின் (பங்ஸமோரோ) போராட்டமாகவே பார்க்கின்றனர்.

1970களின் முற்பகுதியில், மோரோ மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான பல படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. தொடர் மோதல்கள் மிண்டானாவோவில் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்பட இல்லை. மார்கோஸ் ஆட்சியில் இதன் பின் இராணுவச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தியது.

பிலிப்பைன்ஸ் அரசின் இராணுவச் சட்ட உச்சக்கட்டத்தில் இனப்படுகொலை தீவிரம் அடைந்தது. மோரோ மக்கள் ஆபத்தை எதிர்கொள்ள ஒரு புதிய புரட்சிகர இயக்கத்தை உருவாக்கினர். மிகவும் ஆக்ரோஷமான இளைஞர்கள் தலைமையில் உருவான ‘மோரோ தேசிய விடுதலை முன்னணி’ தங்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்தைத் தொடர்ந்தது.

இதனால், தேசிய விடுதலை முன்னணியுடன், மார்கோஸ் அரசாங்கத்தை 1976 ஆம் ஆண்டு திரிபோலி ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டனோ மோரோ மக்களுக்கு சுயாட்சி வழங்குவதன் மூலம் மோரோ பிரச்சனைக்கு அரசியல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

உடன்படிக்கையில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தன்னாட்சி அரசாங்கத்தின் பிரதேசங்களைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் பொது வாக்கெடுப்பை வலியுறுத்தியது. ஆயினும் பொது வாக்கெடுப்பின் முடிவை தேசிய விடுதலை முன்னணி அங்கீகரிக்கவில்லை, இதனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

இதன்பின் இரண்டு மோரோ நிர்வாக தன்னாட்சி பகுதிகள் உருவாக்கப்பட்டன. இது காலனித்துவ அமெரிக்க ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்ட மாகாணத்தை நினைவூட்டுவதாக இருந்தது. ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் நேரடியாக முஸ்லிம் விவகார அலுவலகம் உருவாக்கப்பட்டது.

இவையனைத்தும் மோரோ மக்களைத் திருப்திப்படுத்தவே. இத்தனை அரசாங்க வேலைத்திட்டங்களுக்கு மத்தியிலும் ஆயுதப் போராட்டம் அமைதியாக இருந்தாலும் தொடர்ந்தது. மோரோ தேசிய விடுதலை முன்னணியில் இருந்ததொரு பிளவுபட்ட குழு தனியான அமைப்பை உருவாக்கியது.

1996 இல் பிலிப்பைன்ஸ் அரசும் மோரோ தேசிய விடுதலை முன்னணியும் இறுதி சமாதான உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டன. இது முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசத்துக்கு சுயாட்சியை வழங்கியது. ஆனால் 1984இல் மோரோ தேசிய விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்த மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி விடுதலை போராட்டத்தை தொடர்ந்து நடத்த தீர்மானித்தது.

 பின்னர் அவர்களும் 1997இல் பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வில் கவனம் செலுத்தி 1997 இல் அரசாங்கத்துடன் சமாதான உடன்படிக்கையை செய்து கொண்டனர். இது சமாதான பேச்சுக்களின் தொடக்கத்துக்கு நல்ல சமிக்ஞையாக அமைந்தது. 2012 ஒக்டோபர் 7இல் மோரோ தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமாதான உடன்படிக்கை தயாரானது. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மேற்கு மின்டானோவை உள்ளடக்கிய பங்ஸ்மோரோ சுயாதிக்க பிரதேசத்துக்கான அதிகார மாற்றத்துக்கு வழிவகுத்தது.

INGARAN_TOP_01.jpg

2014 மார்ச்சில் பங்ஸ்மோரோவுக்கான விரிவான உடன்படிக்கையில் தேசிய விடுதலை முன்னணியும் பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் ஒப்பமிட்டன. இந்த சமாதான உடன்படிக்கையின் அமுலாக்கம் அதிகார மாற்றம் என்பன தான் கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கிய விடயங்களாகின. 2013இல், மோரோ தேசிய விடுதலை முன்னணியின் நூர் மிசுவாரி பிரிவு மோரோ குடியரசுக்கு சுதந்திரம் அறிவித்து, ஜாம்போங்கா நகரத்தை பாரியளவில் தாக்கியது. 

பிலிப்பைன்ஸின் ஆயுதப் படைகளுடனான மோரோ தேசிய விடுதலை முன்னணியுடனான மோதலின் போது, அந்தக் குழு பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாக பிலிப்பைன்ஸால் குற்றம் சாட்டப்பட்டது, இதனால் அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 12இல் மோரோ தேசிய விடுதலை முன்னணியின் அப்துல்கரீம் மிசுவாரி, நூர்ஹெடா மிசுவாரி உடன் தற்போதய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி போங் பாங் மார்கோஸின் கீழ் பாங்சமோரோ இடைநிலை ஆணையத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

2025ஆம் ஆண்டு பாங்சமோரோ பாராளுமன்றத்திற்கான வழக்கமான தேர்தல்கள் நடைபெறும் வரை இந்த நியமனம் நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் நீண்ட காலமாக தொடர்ந்த காலனித்துவ ஆதிக்கம் தகர்க்கப்பட்டு, மோரோ மக்களின் போராட்டம் தேசிய சுயநிர்ணயத்தை வென்றுள்ளது. அத்துடன் இறையாண்மை பெற்ற மின்டோனா தேசமாக தற்போது உருவாகியும் உள்ளது.

மோரோ விடுதலை போராட்டத்தின் வெற்றி பிலிப்பைன்ஸ் அடித்தட்டு மக்களின் போராட்ட வெற்றியாக இருக்கும் என கருதப்படுகிறது. அதுவே ஒடுக்கப்பட்ட இனப்போராட்டத்தின் ஒற்றுமையின் வெற்றியாக இருக்குமெனத் தெளிவாகுகிறது.

https://www.virakesari.lk/article/139292

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.