Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊழல் மோசடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் மோசடி, ஊழல் மோசடி, ஊழல் மோசடி...

[26 - August - 2007] [Font Size - A - A - A]

அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழு கடந்த ஜனவரி நடுப்பகுதியில் சமர்ப்பித்தமுதலாவது அறிக்கையில் 26 அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்டிருந்தன. அது தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒருநாள் விவாதம் இடம்பெற்றதைத் தவிர, வேறு எந்தவிதமான நடவடிக்கையுமே எடுக்கப்படாதிருந்துவரும் நிலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அக்குழு அதன் இரண்டாவது அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது. இந்த அறிக்கையில் மேலும் 20 அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகளில் சுமார் 600 கோடி ரூபா கையாடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவர் விஜேதாச ராஜபக்ஷ சபையில் அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றுகையில் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு தொகைப்பணம் மோசடி செய்யப்பட்டிருக்கிறது என்பதை விபரமாகத் தெரிவித்திருக்கிறார். அந்த விபரங்களை நோக்கும் போது அரசாங்க நிருவாகம் ஒன்று இருக்கிறதா என்று வியக்க வேண்டியிருக்கிறது. 16 வருடங்களுக்கு முன்னர் ஈராக்கியப் படைகள் குவைத்தை ஆக்கிரமித்ததையடுத்து மூண்ட முதலாவது வளைகுடா போரின் விளைவாக மத்திய கிழக்கில் பாதிக்கப்பட்ட 11,130 இலங்கைத் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டைக் கூட வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்கத் தவறிவிட்டது என்று ராஜபக்ஷ அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். இத்தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கென 160 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும் கூட, அந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லையென்றால் அரசாங்க நிறுவனங்களின் செயற்பாட்டின் இலட்சணத்தை புரிந்துகொள்வதில் எவருக்குமே சிரமம் இருக்க முடியாது. இது ஒரு உதாரணம் மட்டுமே.

இந்த இரண்டாவது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர்தான், அதாவது 8 மாதங்களுக்கும் கூடுதலான காலம் கழித்து முதலாவது அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டிருந்த ஊழல் மோசடிகள் தொடர்பில் 13 அரசாங்க நிறுவனங்களுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்றைச் செய்வதற்கு நேற்று முன்தினம் பாராளுமன்றம் தீர்மானித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஏற்கனவே முதலாவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென்று எதிரணி தொடர்ச்சியாக விடுத்துவரும் கோரிக்கைக்கு இணங்குவதற்கு அரசாங்கத் தரப்பினர் தயாராயில்லை. முதலாவது அறிக்கை குறித்து பாராளுமன்றத்தில் ஒரு நாள் விவாதம் நடைபெற்றது. இரண்டாவது அறிக்கையைச் சபையில் இரு நாட்கள் விவாதிக்க இணங்குவதாக நேற்று முன்தினம் அரசாங்கத்தின் பிரதம கொறடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே அறிவித்திருக்கிறார். மூன்றாவது அறிக்கை வந்தால் மூன்றுநாட்கள் விவாதிப்பார்கள் போலும். அரசாங்க நிறவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழு தொடர்ந்து மேற்கொள்ளக் கூடிய விசாரணைகள் மேலும் பல அரசாங்க நிறுவனங்களில் இடம் பெற்றிருக்கக் கூடிய ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இறுதியிலே ஊழல் மோசடிகளும் முறைகேடுகளும் இல்லாத ஒரு அரசாங்க நிறுவனமுமே இல்லை என்பதே நிதர்சனமாகும்.

கடந்தவாரம் கொழும்பில் இடம் பெற்ற கருத்தரங்கொன்றில் விஜேதாச ராஜபக்ஷ உரையாற்றிய போது குறிப்பிட்ட ஒரு விடயத்தை இச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சங்கமும் ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நாஷனல் இலங்கைப் பிரிவும் இணைந்து `ஊழலற்ற ஆட்சி நிருவாகத்தை வேண்டிநிற்கும் சிவில் சமூகம்' என்ற தொனிப் பொருளில் இக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன. `எமது நாடு உச்சபட்ச ஊழல் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படாததேயாகும். மகியங்கனையைச் சேர்ந்த ஒரு ஏழைக்கிராமவாசியான சைமனுக்கு நான்கு தேங்காய்களைத் திருடியமைக்காக 6 மாத கடூழியச்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் அறிக்கையில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தவர்களுக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.