Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேதங்களை மறந்து சம்பந்தனின் இல்லத்திற்கு வாருங்கள் : சுமந்திரன் தமிழ் கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஐயோ அதை ஏன் நியாபகப்படுத்துறியள்🤣.

சும் சாணாக்கியன் கனடா வந்த நேரம் கற்ப்ஸ் அவிச்ச, அவியல் - நாகபூசணி அம்மன் அன்னதானத்தில கூட இராது🤣.

நான் கொஞ்சம் டவுட் ஆகி ஒரு கேள்வி கேட்க,

கொஞ்சம் அமெரிக்கன் படை இப்பவே கொழும்பில இறங்கீட்டு எண்டெலே ஒரே போடாய் போட்டவர்🤣.

ஒன்றில் இவர் அதீத கற்பனாவாதி.

அல்லாட்டில் யாரோ ஆளுக்கு நல்லா மொட்டையும் அடிச்சு, சந்தணமும் தடவி, விட அதை இங்க வந்து அவிச்சு இறக்கி இருக்கிறார்.

இந்த இலட்சணத்தில் உலக அரசியல் வியாக்கியானம் வேற.

#சாமி இங்கிலீஷ் எல்லாம் பேசுது 🤣

நானும் இந்தாளுக்கு கொஞ்சம் கூடத் தெரியும் என்றுதான் நினைச்சன். இப்பத்தான் தெரியுது மின்னுவதெல்லாம் பொன்னல்லவென்று. 

😉

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

நானும் இந்தாளுக்கு கொஞ்சம் கூடத் தெரியும் என்றுதான் நினைச்சன். இப்பத்தான் தெரியுது மின்னுவதெல்லாம் பொன்னல்லவென்று. 

😉

அதெப்படி நீங்கள் அவரை அப்படி கணித்தீர்கள்? அவர் சொன்னாரா உங்களை விட கூடத்தெரியுமென்று?  இல்லை ...... சொன்னீர்கள் என்றால் நாங்களும் சிலரை எடைபோடலாம் அதுக்குதான் கேட்டேன்!  சொல்ல விரும்பினால் வசையில்லாமல் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, satan said:

அதெப்படி நீங்கள் அவரை அப்படி கணித்தீர்கள்? அவர் சொன்னாரா உங்களை விட கூடத்தெரியுமென்று?  இல்லை ...... சொன்னீர்கள் என்றால் நாங்களும் சிலரை எடைபோடலாம் அதுக்குதான் கேட்டேன்!  சொல்ல விரும்பினால் வசையில்லாமல் சொல்லுங்கள்.

கூடத் தெரியும் என்று சொன்னேனே தவிர், என்னைவிட கூடத்தெரியும் எனக் கூறவில்லை. 

சாத், 

உங்களுடன் மோசமாக முரண்படுவேனே தவிர உங்கள் மீது கோபம் இல்லை. சோ டோண்ட் வோறி, பி கப்பி. 😀

(மற்றவர்கள் வசைபாடும்போது காணாதிருப்பீர்களோ 😉)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

கூடத் தெரியும் என்று சொன்னேனே தவிர், என்னைவிட கூடத்தெரியும் எனக் கூறவில்லை. 

சாத், 

உங்களுடன் மோசமாக முரண்படுவேனே தவிர உங்கள் மீது கோபம் இல்லை. சோ டோண்ட் வோறி, பி கப்பி. 😀

(மற்றவர்கள் வசைபாடும்போது காணாதிருப்பீர்களோ 😉)

உங்களிடம் இருந்து அதிக வசை பெற்ற நபர் என்றால் அது நானாகத்தானிருக்கும். எனக்கு வலிப்பதுபோலவே மற்றவர்களுக்கும் வலிக்கும் என்பது எனது அனுபவம்!

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, satan said:

உங்களிடம் இருந்து அதிக வசை பெற்ற நபர் என்றால் அது நானாகத்தானிருக்கும். எனக்கு வலிப்பதுபோலவே மற்றவர்களுக்கும் வலிக்கும் என்பது எனது அனுபவம்!

நிச்சயம் நான் உங்களை வசைபாடவில்ல. கடுமையாக நையாண்டி செய்துகொண்டுள்ளோமே  தவிர வலிக்கச் செய்யும் நோக்கம் எனக்கு நிச்சயமாக  இல்லை .

வலித்திருந்தால் மன்னித்துக்கொள்ளுங்க்ள். யாழ்களத்தில் நேர்மையாக துணிவுடன் ஒளிவுமறைவின்றி  கருத்துரைக்கும் மிகச் சிலரில் ஒருவர் என்கிற மரியாதை உங்களிடத்தில் எனக்கிருக்கிறது. 

ஆனால் யாழ் களத்தில் எவருடைய கருத்தும் என்னை நோகச் செய்தது கிடையாது. ஓரிரு நாட்களுக்கு முன்னர் ஒருவரின் நிறைதவறிய ஒப்பீடு கோபத்தை உண்டுபண்ணியது. ஆதலினால் அவருக்கு கொஞ்சம்  கடி அவ்வளவுதான்.  மற்றும்படி எவரிடமும் எனக்குக் கோபம் இல்லை. 

🙏

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் டக்ளஸின் செயற்பட்டால் தமிழக மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான உறவு பாதிக்கப்படும்- சாணக்கியன்

சுயநல அரசியலை விடுத்து தமிழ் சமூகத்திற்காக அரசியல் செய்ய பழகவேண்டும் – சாணக்கியன்

அண்மையில் ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிக மோசமான முறையில் தமிழ்தேசிய கூட்டமைப்பினை விமர்சித்திருந்தார்.இவை மிகவும் கவலையான விடயங்கள். இவர்கள் சுயநல அரசியலை விடுத்து தமிழ் சமூகத்திற்காக அரசியல் செய்ய பழகவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திராய்மடு மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மின்னொளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டு மின்னொளி உபகரணங்களை பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் வழங்கிவைத்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டம் சமஸ்டியை தீர்வாக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டமாகவே நடைபெற்றது.இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.நான் இன்னும் கட்சி தலைவராக வரவில்லை.

அந்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களும்,நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் சமபந்தர் ஐயா ஆகியோர் மட்டுமே அந்த கூட்டத்தில் சமுகமளித்திருந்தனர்.பலர் அந்த சந்திப்புக்குவருவதாக சொல்லியிருந்தாலும் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.அவர்கள் சமஸ்டி முறையினை ஏற்றுக்கொள்ளாத கட்சிகளா என்பது எனக்கு தெரியாது.அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் என்றால் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரின் கருத்தினை மதித்து அவர்கள் வந்திருக்கவேண்டும்.

அண்மையில் ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிக மோசமான முறையில் தமிழ்தேசிய கூட்டமைப்பினை விமர்சித்திருந்தார்.இவை மிகவும் கவலையான விடயங்கள். இவர்கள் சுயநல அரசியலை விடுத்து தமிழ் சமூகத்திற்காக அரசியல் செய்ய பழகவேண்டும்.
வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவா எதிர்ப்பா என்பது தொடர்பில் எங்களது நாடாளுமன்ற குழு கூடி தீர்மானத்தினை எடுக்கும்.

இந்த வரவு செலவு திட்டம் மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது.அரசாங்கமானது விசேட தேவையுடையவர்களின் கொடுப்பனவினை குறைத்துள்ளனர்.

விசேட தேவையுடையவர்களிடம் வழிப்பறி செய்யும் அரசாங்கமாகவே நாங்கள் இந்த அரசாங்கத்தினை பார்க்கமுடிகின்றது.

ஒரு பக்கம் விசேட தேவையுடையவர்களின் கொடுப்பனவினை குறைக்கும் அதேநேரம் அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள்,மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர்களுக்கு அதிகளவு சலுகையினை கொடுத்து அவர்களை ஒரு பக்கத்தில் பணக்காரர்களா மாற்றும்போது இந்த விசேட தேவையுடையவர்களின் கொடுப்பனவினை குறைத்தது மிகவும் கவலையான விடயம்.

இந்த அரசாங்கம் பொருளாதார நெருக்கடியான காலப்பகுதியில் இவ்வாறனவர்களை இன்னும் பலப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும்.அதனைவிடுத்து அவர்களிடம் வழிப்பறி செய்வது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.என தெரிவித்தார்.

DSC02453-600x338.jpg

https://athavannews.com/2022/1310881

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பலர் அந்த சந்திப்புக்குவருவதாக சொல்லியிருந்தாலும் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.அவர்கள் சமஸ்டி முறையினை ஏற்றுக்கொள்ளாத கட்சிகளா என்பது எனக்கு தெரியாது.அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் என்றால் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரின் கருத்தினை மதித்து அவர்கள் வந்திருக்கவேண்டும்.

"சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்தொருபாற் 
கோடாமை சான்றோர்கணி." இதன் பொருள் என்னவென்று தலைவர் விளக்கினால் நலமாயிருக்கும்!

1 hour ago, தமிழ் சிறி said:

அண்மையில் ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிக மோசமான முறையில் தமிழ்தேசிய கூட்டமைப்பினை விமர்சித்திருந்தார்.இவை மிகவும் கவலையான விடயங்கள்.

முன்பொருதடவை போர்குற்றமிழைத்த இலங்கை பிரச்சனையை சர்வதேச நீதிச்  சபையிடம் பாரப்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கருத்து தெரிவித்த போது. இவர் அவரைப்பற்றி கூறிய கருத்துக்கள் மட்டும் வரவேற்கக்கூடியதா என்பதை திரும்பிப் பார்த்த பின் மற்றவர்களைப்பற்றி கருத்துரைப்பதே பொருத்தமானது.

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of standing

animiertes-lachen-bild-0014.gif வாற... தீபாவளிக்கு, வருவார்கள்.   animiertes-lachen-bild-0072.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.