Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சந்திரிகாவின் கொழும்பு விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"சந்திரிகாவின் கொழும்பு விஜயம்"

இவ்விஜயம் ஒரு பெரும் பரபரப்புக்குரியதாகக் கொழும்பு ஊடகங்களால் பெரிது படுத்தப்பட்டது. எரிபொருள் விலையேற்றம், உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், முழு இலங்கையுமே போர்மயப்படுத்தல் போன்ற சம்பவங்களினால் மக்கள் மகிந்த ராஜபக்ச அரசின் மீது வெறுப்புக் கொண்டிருக்கும் இவ்வேளையில், திருமதி சந்திரிக்காவின் விஜயம் சிறீலங்காவின் நாடாளுமன்ற அரசியலில் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற பிரச்சாரம் மிகவேகமாகக் மேற்கொள்ளப்படுகின்றது.

சிங்கள மக்கள் மத்தியில் ரணில் மங்கள கூட்டணிக்குப் பெருகி வரும் ஆதரவு இவர் அரசியலில் களமிறங்கும் போது மேலும் வலுவடையும் எனவும் கருதப்படுகிறது.

அதேவேளையில் தொண்டமானின் வெளியேற்றம், முஸ்லிம் கொங்கிரசின் ஊசலாட்டம் - மிரட்டல் என்பனவற்றினால் மகிந்த ராஜபக்சவின் அதிகார பீடமும் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

இன்னொருபுறம் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் காரணமாகவும், ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் மிரட்டல்கள் காரணமாகவும் சிறீலங்கா அரசின் மீது மனித உரிமை அமைப்புகளும், ஐக்கிய நாடுகள் நிறுவனங்களும் பகிரங்கமாகவே குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றன.

எவ்வளவு தான் சிறீலங்கா அமைச்சர்கள் திமிர்த்தனமாகவும், பொறுப்பற்ற முறையிலும் அறிக்கைகளை விட்டுக்கொண்டும், உரைகளை நிகழ்த்திக் கொண்டும் இருந்த போதிலும் தொடர்ந்து இந்த அரசு மீளமுடியாத அரசியலில் பொருளாதாரச் சிக்கல்களுக்குள் மாட்டுப்பட்டு விட்டது என்பது மறக்க முடியாத உண்மையாகி விட்டது.

இப்படியான ஒரு சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினரும் மங்கள சமரவீர அணியினரும் இணைந்து அரசுக்கு எதிராக நடத்தி வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இப்படியான நிலையில் அவர்கள் சந்திரிகாவைத் தம்முடன் இணைத்து அரசியலை முன்னெடுப்பதன் மூலம் பெரும் அரசியல் இலாபங்களை ஈட்ட முடியும் என நம்புகின்றனர்.

இப்படியான ஒரு பெரும் நெருக்கடி நிலையிலும் மகிந்த ராஜபக்சவுக்கு உள்ள ஒரே ஒரு பலம் சர்வ வல்லமையுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிப் பதவியாகும்.

அவர் அதை வைத்துக்கொண்டு தனக்கு எதிராக ஏவப்படும் சகல கணைகளையும் முறியடித்து விட முடியும் என நம்புகிறார். ஏற்கனவே திட்டமிட்ட வகையில் இவர் இராணுவ விவகாரங்களையும் ஏறக்குறைய 70 வீதமான நிதி வளங்களையும் தன்னிடமும், தனது சகோதரர்களிடமும் வைத்துள்ளார்.

இதேவேளையில் இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக சர்வதேசமும் இவரின் மேல் எழக்கூடிய எதிர்ப்புணர்ச்சிகளை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்குள்ளேயே வைத்திருக்கும் என்பதையும் இவர் நன்றாகவே அறிவார்.

இப்படியான ஒரு நிலையில் தான் சந்திரிக்காவின் விஜயம் இப்போது இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவரின் விஜயம் காரணமாகவும் இவர் மீண்டும் அரசியலில் இறங்குவதாலும், மங்கள - ரணில் அணிக்கு மக்கள் ஆதரவு பெருகக் கூடிய சாத்தியக்கூறு உண்டு.

சந்திரிகாவின் விசுவாசிகளான டி.என்.ஜெயரத்ன போன்ற சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறவும் கூடும். இதனால் இன்றைய அரசாங்கம் நாடாளுமன்ற பெரும்பான்மையை இழந்து வீழ்ச்சியடையும் ஒரு நிலை கூட ஏற்படலாம்.

இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுமாக இருந்தால் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் இடம்பெற்று ரணில் - மங்கள அணியினர் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களையும் கைப்பற்றவும் கூடும். இப்படியரு நிலைமை எற்பட்டால் அடுத்த கட்டம் என்ன என்பது தான் இப்போதுள்ள கேள்வியாகும்.

மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி என்ற வகையில் ஒரு அமைச்சரவையை அமைக்கும் அதிகாரம் அவரிடமே உண்டு. அவர்தான் விரும்புபவர்களையே அமைச்சர்களாக இருத்த முடியும்.

எனவே, அமைச்சர்களின் அதிகாரத்தை மகிந்த தனது கையிலேய தொடர்ந்து வைத்திருக்க முடியும். இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை இல்லாதபோதும் அரசியல் அதிகாரம் மகிந்தரின் கையில் இருக்கும்.

எதிர்க்கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் தனது பக்கம் இழுத்தெடுக்கும் வரை நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

இது அப்படியன்றும் புதிய விடயமல்ல. ஏற்கனவே இது சந்திரிகா அதிகாரத்தில் இருந்தபோது செய்து காட்டிய சூரத்தனம்தான். சந்திரிகா அம்மையார் சனாதிபதியாக இருந்தபோது ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்குமிடையே இடம்பெற்று தடைப்பட்டிருந்த சமாதானப் பேச்சுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த சந்தர்ப்பத்தில் மூன்று முக்கிய அமைச்சுப் பதவிகளை பறிமுதல் செய்ததன் மூலம் சகலவற்றையும் குழப்பியடித்தார்.

அதேபோன்ற நடவடிக்கைகளை இன்னும் மோசமான முறையில் மகிந்த மேற்கொள்வார் என்பது தொடர்பாகவும் சந்தேகிக்க வேண்டியதில்லை.

அதே சமயம் தற்சமயம் உள்ள தேர்தல் முறை மூலம் எந்த ஒரு கட்சியும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவது சாத்தியமில்லை. மூன்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவின்றி எக்காரணம் கொண்டும் சனாதிபதியை பதவியிலிருந்து இறக்கிவிட முடியாது.

ஆனால் மகிந்த சனாதிபதியாகப் பதவி

யிலிருக்கும் வரை நாடாளுமன்றத்தில் அவரால் ஏற்கப்படாத எந்த ஒரு விடயத்தையும் நிறைவேற்ற முடியாது.

இவையனைத்தையும் சந்திரிகா விஜயகுமாரதுங்க சொல்லிக் கொடுத்த, செய்து காட்டிய தந்திரோபாயங்கள் தான். அவையே இன்று அவரின் விஜயத்தாலோ அல்லது அவரின் பரப்புரைகளாலோ அவர் திரட்டக் கூடிய மக்கள் ஆதரவையும் அவற்றின் பலன்களையும் பயனற்றதாக்கிவிடும் நிலைக்குத் தள்ளியுள்ளன.

இன்று மகிந்த அரசு சிங்களப் பொது

மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை வெகுவேகமாக இழந்து கொண்டிருப்பது உண்மைதான். சர்வதேச அளவிலும் இது தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்

கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

இந்தியா பக்கமோ அல்லது சீனா பக்கமோ சாயப்போவதாக காட்டி மேற்குலகின் உதவிகளைப் பெறுவது, மேற்குலகின் பக்கம் சாயப்போவதாக காட்டி இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் உதவிகளைப் பெறுவது போன்ற தந்திரோபாயங்கள் வெகு வேகமாக செயலிழந்து வருகின்றன.

இது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பான தருணம் என்பதில் சந்தேகமில்லை. இதைச் சரியாகப் பயன்படுத்தவே சந்திரிகாவின் விஜயமும் துணையாக அமையும்.

ஆனால் இதன் அடுத்த கட்ட நகர்வு அரசுக்கெதிரான ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்குவது என்பதுடன் மட்டுப்படுத்தப்பட்டு விடுமா என்பது தான் இங்கு எழக்கூடிய கேள்வியாகும்.

நாடாளுமன்றத்தை எட்டிப் பிடித்தாலும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முடியாத நிலைமையே இங்குள்ளது. இப்படியான ஒரு சூழல் நிலவுவதற்கு சந்திரிகா - ரணில் ஆகிய இருவருமே பொறுப்பேற்க வேண்டியவர்களாயுள்ளனர்.

சிறீலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றிருந்த காலத்திலும் சரி, ஐக்கிய தேசியக்கட்சி பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருந்த காலத்திலும் சரி, சந்திரிகாவும் ரணிலும் இணைந்து செயற்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இன்றைய அரசியல் அமைப்புச்சட்டத்தை மாற்றியமைத்திருக்க முடியும்.

ஆனால் இருவரில் எவருமே அதற்கு தயாராக இல்லை. காரணம் இவர்கள் இருவருக்குமே நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி பதவி மீது கொண்டிருந்த மோகமாகும்.

இந்தப்பதவி தங்களிடம் இருந்தால் முழு அதிகாரத்தையும் தாங்கள் கையில் வைத்திருக்கலாம் என்பதற்காக அதை மாற்றாமல் இருந்தார்களோ, இன்று அதே பதவியில் அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற விடாது தடுக்கும் ஒரு சக்தி மிக்க ஆயுதமாக அது விளங்கி வருகிறது.

எனவே, இன்று கொழும்பு ஊடகங்கள் பெரிதாக பிரச்சாரம் செய்வது போன்று சந்திரிகாவின் விஜயம் பெரிதாக எதையும் சாதித்து விடப்போவதில்லை. சனாதிபதி

யின் பதவிக்காலம் முடியும் வரை ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும் நிலையே அதிகம் காணப்படுகிறது.

நா யோகேந்திரநாதன்

- "ஈழமுரசு"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.