Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்புத் துறைமுகத்துக்குள் கப்பல்கள் நுழைய மற்றொரு வாயில் திறக்கப்படும் நீருக்கடியிலான பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புத் துறைமுகத்துக்குள் கப்பல்கள் நுழைய மற்றொரு வாயில் திறக்கப்படும் நீருக்கடியிலான பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

கொழும்புத் துறைமுகத்துக்குள் கப்பல் கள் நுழைவதற்கான வடக்கு வாசலையும் மீளத் திறந்து விடுவதற்கு பாதுகாப்பு வட் டாரங்கள் தீர்மானித்திருக்கின்றன. அதற் கேற்ப அப்பகுதியில் நீருக்கடியிலான பாது காப்பு முறைமை ஸ்தாபிக்கப்பட்டு, அது சோதனை செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது மூடப்பட்டிருக்கும் இரண்டா வது வாசலைத் திறந்து விடுவதன் மூலம் சரக்குக் கப்பல்கள் நீண்ட நேரம் காத்துக் கிடந்து, அதனால் கப்பல் சேவை நிறுவ னங்களுக்கும், இறங்குதுறைகளுக்கும் பெரும் தொகைப் பணம் வீண்விரயமாகிப் போவதைத் தவிர்க்க முடியும் என விடய மறிந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கொழும்புத் துறைமுக நுழைவாயில் களில் ஒன்று மூடப்பட்டதால் ஏற்படுத்தப் பட்ட நீண்டநேரக் கால தாமதம், தென் னாசியாவில் ஏனைய துறைமுகங்களுடன் இந்த வர்த்தகத்தில் போட்டியிடும் கொழும் புத் துறைமுகத்தைப் பெரும் பின்னடை வுக்குள் தள்ளி நிற்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புலிகளின் தாக்குதல் அச்சம் காரண மாக இந்த வடமுனை வாசல் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக மூடப்பட்டுக் கிடக்கின்றது.

இதனால் மற்றைய ஒரு வாசல் வழியாக மட்டுமே துறைமுகத்திற்கான உள்நுழைவு வெளியேற்றப் போக்குவரத்து இடம்பெறு கின் றது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, கப்பல்கள் துறைமுகத்துக்குள் நுழைய அல்லது வெளியேற பல மணிநேரம் காத்துக்கிடக்கும் அவலமும் நேர்ந்துள்ளது.

இப்படி நேரம் வீணாகி, பணி நிறைவு பெறாமல் இழுபடுவதால் கப்பல்களுக்கும், துறைமுகப்பணியாளர்களுக்கும் நிதிச்செலவு பெருமளவில் விரயமாவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தத் தாமதத்தைப் தவிர்ப்பது தொடர்பான ஏற்பாடுகள் குறித்தும் துறைமுகப் பாதுகாப்பு ஒழுங்குகள் குறித்தும் ஆராய்வதற்கு கடந்த வாரம் துறைமுக அதிகாரிகளுக்கும், துறைமுகப் பாதுகாப்புக்குப் பொறுப்பான கடற்படையின் உயரதிகாரிகளுக்கும் இடையே முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது.

இப்பகுதியில் நீருக்கடியிலான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அத்துமீறிய ஊடுருவலைக் கண்டுபிடிக்கவும் பல்வேறு தொழில் நுட்ப உத்திகளை அங்கு பரீட்சித்துப் பார்த்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டது.

கொழும்புத் துறைமுகத்தின் வர்த்தக நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவரவும், அதேசமயம் துறைமுகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று அதிகார பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையின் வர்த்தகத்தில் 90 வீதமானது கொழும்புத் துறைமுகம் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றது. அதில் ஏற்படக்கூடிய பாதிப்பு முழு இலங்கையின் பொருளாதாரத்திலுமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் கொழும்புத் துறைமுகத்துக்குள் தாக்குதலொன்றை மேற்கொள்ளும் பொருட்டு 1995 ஏப்ரல் மாதத்தில் முயற்சி எடுத்தனர். அவர்களது அதிவேகப் படகொன்றுடன் தற்கொலைச் சுழியோடி ஒருவர் கொழும்புத் துறைமுகத்துக்குள் அப்போது பிரவேசித்தார். அது கண்டறியப்பட்டு பின்னர் குறிப்பிட்ட சுழியோடியுடன் படகு தாக்கி அளிக்கப்பட்டது.

வடக்கு உட்புகு பாதை மூலம் விடுதலைப் புலிகள் துறைமுகத்திற்குள் சுலபமாக நுழைந்துவிடுவர் என்ற அச்சத்தால் கொழும்புத் துறைமுகத்திற்குள் கப்பல்கள் வந்து போகும் இரண்டு பாதைகளில் ஒன்றான வடக்கு உட்புகு வழி கப்பலோட்டத்துக்கு மூடி வைக்கப்பட்டுள்ளது.

அதனால் ஒரே வழியாகவே சரக்குக் கப்பல்கள் வரவும் போகவும் வேண்டி நேர்ந்துள்ளது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்கும் முகமாகவே, நீருக்கடியிலான பாதுகாப்பை மேம்படுத்தி, உறுதி செய்தபின் வடக்கு வாசலையும் கப்பல் போக்குவரத்துக்குத் திறந்து விட்டு, துறைமுக வர்த்தக நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவர தீவிர முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.