Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன நெருக்கடித் தீர்வு முயற்சிக்கு வெளிநாட்டு உதவி தேவையில்லை -பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன நெருக்கடித் தீர்வு முயற்சிக்கு வெளிநாட்டு உதவி தேவையில்லை

* சர்வ கட்சியூடாகவே யாவும்; பிரதமர் அறிவிப்பு

எம்.ஏ.எம்.நிலாம்

இலங்கை இன நெருக்கடித் தீர்வு விடயத்தில் இனிமேல் வெளிநாட்டு உதவியை பெற்றுக் கொள்வதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக்கா, பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அரசியல் கட்சிகளைக் கொண்ட சர்வகட்சி மாநாட்டின் மூலமே தீர்வை எட்டுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி பூண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேசமயம், முழு உலகுக்கும் சவால் விடுத்துக் கொண்டிருக்கும் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட அனைத்து நாடுகளும் ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குவதற்கு ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் மியன்மார் நாட்டின் பதில் பிரதமர் லெப்டினன் ஜெனரல் தெயின் ஷெயினுடனான உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையில் பாதுகாப்பு, கல்வி, கலாசார விவகாரம் தொடர்பில் இரண்டு முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா கூறியதாவது;

" இலங்கையில் தொடரும் யுத்தத்துக்கும் இனநெருக்கடிக்கும் யுத்தத்தின் மூலம் மட்டும் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை. பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் தீர்வொன்றைக் காண்பதிலேயே அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அதன் பொருட்டு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி மாநாட்டிடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றார்.

சகல கட்சிகளும் ஒன்றுபட்டு நிரந்தரமானதொரு சமாதானத் தீர்வை எட்ட முடியுமென்ற நம்பிக்கை இன்னமும் வீண் போகவில்லை. முரண்பாடுகளுக்கு மத்தியில் உடன்பாடு காணும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

எமது நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இனிமேலும் வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக் கொள்வதில்லையென்ற உறுதியான முடிவுக்கு அரசு வந்துள்ளது.

இதேவேளை, முழு உலகையும் ஆட்டிப் படைக்கின்ற பயங்கரவாதச் சவாலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விடயத்தில் உலக நாடுகள் ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படக்கூடிய விதத்தில் ஒன்றுபட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. முக்கியமாக இதுவிடயத்தில் பௌத்த நாடுகள் ஒன்றாக கைகோர்த்துச் செயற்பட முன்வர வேண்டும்.

பயங்கரவாதிகள் தங்களின் செயற் பாடுகளுக்காக நிதியைத் தேடிக்கொள்ளும் பொருட்டு ஆயுதம் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்திலீடுபட்டு வருகின்றனர்.

இவற்றை முறியடிப்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் சகல நாடுகளும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் விக்கிரமநாயக்கா குறிப்பிட்டார்.

மியன்மாருக்கும் இலங்கைக்குமிடையில் பௌத்த தர்மம் காரணமாக நீண்டகால நட்புறவு இருப்பதாகத் தெரிவித்த பிரதமர், இதனால் இரு நாடுகளதும் பழக்க வழக்கங்களும் கோட்பாடுகளும் சமாந்தரமாகவே காணப்படுவதாகவும் இதனைத் தொடர்ந்து வளர்த்தெடுப்பதில் இரு நாடுகளும் மேலும் நெருக்கமாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த மியன்மார் பதில் பிரதமர்;

"பௌத்த கோட்பாட்டின்படி செயற்படும் இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு, அபிவிருத்தி, சமய விழிப்புணர்வுகளுக்காக மியன்மார் அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

பயங்கரவாதிகள் ஆசியப் பிராந்தியத்தை ஆயுத, போதைவஸ்து பரிமாற்றத்துக்கான தளமாக பயன்படுத்துவது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது.

இந்தப் பிராந்தியத்தை இப்பேராபத்திலிருந்து மீட்டெடுப்பது எம்மெல்லோரதும் கடப்பாடாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்திக் கூறினார். இதன் பொருட்டு மியன்மார் அரசு நீண்டகால திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இச்சந்திப்பில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, சமல் ராஜபக்ஷ, ரோஹித போகொல்லாகம, மகிந்த யாப்பா அபேவர்தன, பந்துல குணவர்தன, டலஸ் அழகப் பெரும, பண்டு பண்டாரநாயக்கா ஆகியோரும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, பிரதமரின் செயலாளர் மகிந்த பந்துசேன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

-தினக்குரல்

அப்போ மகிந்த இந்த தலைப்பில் புலம்புவது எந்தக்கணக்கு நல்லா அழுத்தங்களை சந்திகீனம் என நினைகின்றேன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27698

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு உதவி வேண்டாமென சர்வதேச அரங்கில் கூறுவார்களா?

* கேள்வி எழுப்புகிறது ஐ.தே.க.

-எம்.ஏ.எம்.நிலாம்-

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காணும் முயற்சியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்குலகின் ஒத்துழைப்பைக் கோரிவரும் நிலையில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா வெளிநாட்டு உதவி தேவையில்லையென உள்நாட்டில் தெரிவித்து வருகிறார். இது அரசாங்கத்தின் இரட்டை வேடத்தையே காட்டுகின்றது எனத் தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பிரச்சினை தீர்வு முயற்சிக்கு வெளிநாட்டு உதவி தேவையில்லையென்பதை ஐ.நா. சபைக்கோ அமெரிக்க காங்கிரஸிடமோ போய்ச் சொல்வார்களா எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். சமாதான முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு ஒத்துழைப்பு வழங்க வந்தவர்கள் மீது அரசு தரப்பிலுள்ளவர்கள் குற்றச்சாட்டு சுமத்துவதையே வழமையாகக் கொண்டுள்ளனர். அன்று அலன்ரொக் மீது சாடினர். பின்னர் பகவதியையும் குற்றவாளியாக சித்திரித்தனர். இறுதியாக ஹோம்ஸை பயங்கரவாதி என்றனர். இவ்வாறு சர்வதேசத்தை விமர்சித்துக் கொண்டே ஒத்துழைப்பையும் கோருகின்றனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரிட்டிஷ் போய் நேரடியாகவே உதவி கேட்டார். தற்போது இலங்கை நிலைமைகள் மிக மோசமானதாக அமைந்திருப்பதாக பிரிட்டஷ் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்று வருகிறது.

மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அங்கு விவாதம் நிறைவேறுமானால் 2008 ஆம் ஆண்டில் போருக்கான சர்வதேச உதவிகளும் தடைப்படுவதை தடுத்து நிறுத்த முடியாது போகும்.

வடக்கு, கிழக்கு யுத்தம் காரணமாக மூன்றரை இலட்சம் பேர் அகதிகளாகக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கும் நாடுகளுக்கு சர்வதேசம் ஒருபோதும் உதவப் போவதில்லை.

ஜனாதிபதி சமாதான முயற்சிகளுக்கு சர்வதேசத்தின் உதவியை கோரி வருகின்றார். பிரதமரும், சில அமைச்சர்களும் சர்வதேச உதவி தேவையில்லையென உள்ளூரில் பிரசாரம் செய்கின்றனர். இது நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும்.

அரசு இரட்டை வேடம் பூண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. வெளிநாட்டு ஒத்துழைப்பு தேவையில்லையென்றால் அதனை ஐ.நா. சபையிலோ, அமெரிக்க காங்கிரஸ் சபைக்கோ சென்று கூறுவார்களா எனக் கேட்க விரும்புகின்றோம்.

சர்வதேசத்தை புறந்தள்ளி எதனையும் எம்மால் சாதித்துவிட முடியாது. எமது நாடு சர்வதேச சட்ட விதிகளை ஏற்றுக் கொண்ட நாடாகும். இதனைப் புறக்கணித்துச் செயற்பட முடியாது. பங்கரவாதத்தை நாம் ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம். ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை காட்டிக் கொடுக்கவும் மாட்டாது. சர்வதேசம் மக்களை பாதிக்கும் போரை நிறுத்துமாறுதான் கேட்கிறது. பயங்கரவாதத்தை முறியடிப்பதை தடுக்கவில்லை.

சர்வதேசம் கூறுவதுபோன்று சமாதான முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்குமாறுதான் நாமும் கேட்கின்றோம். சர்வதேசத்தை புறந்தள்ளி எம்மால் சாதிக்க முடியும் என்பது தவறான அணுகு முறையாகும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.