Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகள் பிரித்தானியாவில் காவல்துறை பயிற்சி பெற்றதாகக்கூறி அரசு விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 29-08-2007 16:35 மணி தமிழீழம் [தாயகன்]

விடுதலைப் புலிகள் பிரித்தானியாவில் காவல்துறை பயிற்சி பெற்றதாகக்கூறி அரசு விசாரணை

சிறீலங்கா அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளின் 12 உறுப்பினர்கள் வட அயர்லாந்துக்குச் சென்று காவல்துறைப் பயிற்சி பெற்றிருப்பதாக, கொழும்பில் அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவும், நோர்வே அரசின் அனுசரணையும் இருந்ததாகவும் அரசாங்கத்தின் ஆங்கில ஊடகம் மேலும் குற்றம் சாட்டுகின்றது.

திருகோணமலையில் அண்மையில் கைது செய்யப்பட்ட 29 அகவையுடைய காளிமுத்து வினோத்குமார் என்பவரும் வட அயர்லாந்தில் பயிற்சி பெற்ற 12 பேரில் ஒருவர் எனவும், இது பற்றிய விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரச தரப்பை ஆதாரம்காட்டி அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள வினோத்குமார் என்பவர் சம்பூரில் காவல்துறையில் கடமையாற்றியதாகக் அரச தரப்பில் கூறப்பட்டுள்ள போதிலும், இதனது உண்மைத் தன்மை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பபட்டுள்ளன.

பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகிலேயே சிறந்த காவல்துறை தமிழர்களிடம் இருக்கும்போது, வெள்ளைகாரனிட்டை நாங்கள் ஏன் போகபோறோம்?

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்தில் புலிகளுக்கு ஆயுதப் பயிற்சி

[30 - August - 2007] [Font Size - A - A - A]

புலிகள் இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாகக் கருதி அதன் செயற்பாடுகளை பிரிட்டனில் அந்நாட்டு அரசு சட்டப்படி தடை செய்திருக்கும் நிலையில் பன்னிரண்டு பேர் அடங்கிய புலிகள் இயக்கக் குழுவினருக்கு அயர்லாந்தில் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் திருகோணமலை பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் பிரிவினரின் வீதித் தடை சோதனை நிலையம் ஒன்றில் வைத்து புலிகள் இயக்கத்தின் பொலிஸ் பிரிவுத் தலைவர் எனக்கருதப்பட்ட காளிமுத்து விநோக்குமார் என்னும் பயங்கரவாதி ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர். தொடர்ந்து இவரைத் தடுத்து வைத்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் இவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போது இவர் 2003 ஆம் ஆண்டு வட அயர்லாந்தில் விசேட பொலிஸ் பயிற்சி பெற்றவர் எனவும் இவருடன் சேர்ந்து மேலும் பதினொரு பயங்கரவாதிகள் இவ்வாறு குறித்த வட அயர்லாந்து ஆயுதப் பயிற்சி முகாமில் பயிற்சியைப் பெற்றார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் வட அயர்லாந்தில் ஆயுதப்பயிற்சி பெற்ற 2003 ஆண்டு காலகட்டப் பகுதியில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஐக்கிய தேசிய முன்னணி அரசும் நோர்வே நாட்டின் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட ஏற்பாடுகளின் கீழும் அவர்களின் ஆதரவுடனுமே மேற்படி விநோத்குமார் உட்பட பன்னிரண்டு பேரும் வட அயர்லாந்து சென்று பொலிஸ் ஆயுதப் பயிற்சியைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 வயதுடையவரான மேற்படி காளிமுத்து விநோக்குமாரும் ஏனைய பதினொரு பயங்கரவாதிகளும் வடஅயர்லாந்தில் பயிற்சியை முடித்துக் கொண்டு மீண்டும் நாட்டுக்குத் திரும்பி பின்னர் புலிகள் இயக்கத்தின் பிரதான பொலிஸ் படையின் உயர் பதவிகளில் சேர்ந்து கொண்டதாகவும் தொடர்ந்து புலிகள் இயக்கப் பொலிஸ் உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தலைமைப் பதவியை பிரபாகரன் மேற்படி விநோத்குமாருக்கு வழங்கியதாகவும் மேலும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் சம்பூர் பிரதேசத்தில் புலிகளின் பொலிஸ் பிரிவுத் தலைவராகவும் காளிமுத்து விநோத்குமார் செயற்பட்டு வந்துள்ளார்.

-திவயின: 27.08.2007

http://www.thinakkural.com/news/2007/8/30/...s_page35047.htm

யாரப்பா இந்த செய்தி ஆசிரியர் பேசாம என்னை இதில ஆசிரியரா போட்டாலும் அரட்டையவது அடிபேன்....... :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.