Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் கோட்டா நியமித்த ஜனாதிபதி செயலணியை கலைத்த ரணில் - என்ன நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கோட்டா நியமித்த ஜனாதிபதி செயலணியை கலைத்த ரணில் - என்ன நடந்தது?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,யூ.எல். மப்றூக்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கோட்டாபய ரணில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ரணில் விக்ரமசிங்க, இலங்கை ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலைத்துள்ளார். என்ன நடந்தது?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் றிப்தி அலி சமர்ப்பித்த விண்ணப்பத்துக்கு - ஜனாதிபதி செயலகம் வழங்கிய பதிலில் இவ்விடயம் தெரிய வந்துள்ளது.

குறித்த செயலணியை 2020ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியமித்தார். அப்போதே இந்த நடவடிக்கைக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.

தமிழர்களும், முஸ்லிம்களும் பெரும்பான்மையான வாழும் கிழக்கு மாகாணத்துக்கென அமைக்கப்பட்ட அந்தச் செயலணியில், சிங்களவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டமையே, அந்த எதிர்ப்புக்கு பிரதான காரணமாக அமைந்தது.

 

இதையடுத்து, அந்த செயலணியில் தமிழர் ஒருவரும், முஸ்லிம் ஒருவரும் உறுப்பினர்களாக பின்னர் சேர்க்கப்பட்டனர்.

'தொல்பொருள் உள்ள இடங்கள்' எனத் தெரிவித்து, சிறுபான்மை மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதாக தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றமையின் காரணமாக, கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை தேவையற்ற ஒன்றாகவே சிறுபான்மை மக்கள் கருதினர்.

இந்த நிலையிலேயே கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி, மேற்படி செயலணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவுறுத்தியுள்ளதாக, தனது விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள பதிலில் - ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளதாக, பிபிசி தமிழிடம் ஊடகவியலாளர் றிப்தி அலி கூறினார்.

ஜனாதிபதி செயலணி

இது தொடர்பில் அந்த செயலணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எஸ்.கே. ஹேனாதீர அந்தப் பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த விகாரைகளை அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபட்ட செயலணி

ஜனாதிபதி செயலணி

இந்த செயலணி செயற்பட்ட காலப் பகுதியில், தீகவாபி ரஜ மகா விகாரை மற்றும் லஹுகலயிலுள்ள நீலகிரி பௌத்த விகாரை ஆகியவற்றின் தூபிகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொத்துவில் முகுது மஹா பௌத்த விகாரைக்குரிய காணிகள் தொடர்பான சிக்கல்களை தீர்த்து வைக்கும் செயற்பாடுகளிலும், இந்த செயலணி ஈடுபட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை ரணில் விக்ரமசிங்க கலைத்துள்ள நிலையில், அதற்கென வழங்கப்பட்ட கடமைகள் அனைத்தும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட 2289/43ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், குறித்த கடமைகள் மேற்படி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலணி

இரண்டு வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் செயற்பட்டு வந்தபோதும், ஜனாதிபதிக்கு எதுவித அறிக்கைகளையும் இந்தச் செயலணி சமர்ப்பிக்கவில்லை.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையில் செயற்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் எவருக்கும் சம்பளமோ, கொடுப்பனவுகளோ தம்மால் வழங்கப்படவில்லை எனவும், ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

உறுப்பினர்கள் விபரம்

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களாக பின்வருவோர் நியமிக்கப்பட்டனர்.

1. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன - செயலாளர் பாதுகாப்பு அமைச்சு (செயலணியின் தலைவர்)

2. எல்லாவல மேதானந்த நாயக்க தேரர்

3. பனாமுரே திலகவங்ச நாயக்க தேரர்

4. வென்டறுவே தர்மகீர்த்தி ஸ்ரீ ரதனபால உபாலி அபிதான அனுநாயக்க தேரர் (அஸ்கிரிய பீடம்)

5. கலாநிதி பஹமுணே சுமங்கல நாயக்க தேரர் (பதிவாளர் - மல்வத்து பீடம்)

6. கலாநிதி மெதகம தம்மானந்த நாயக்க தேரர் (பதிவாளர் - அஸ்கிரிய பீடம்)

7. கலைமாணி அம்பன்வெல்லே ஸ்ரீ சுமங்கல தேரர் (நிருவாக உறுப்பினர் - மல்வத்து பீடம்)

8. பேராசிரியர் கபில குணவர்த்தன (செயலாளர் - புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு)

9. சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க (தொல்பொருள் பணிப்பாளர் நாயகம்)

10. கீர்த்தி கமகே (காணி ஆணையாளர் நாயகம்)

11. ஆரியரத்ன திசாநாயக்க தென்னகோன் (நில அளவையாளர் நாயகம்)

12. பேராசிரியர் ராஜ் குமார் சோமதேவ (சிரேஷ்ட விரிவுரையாளர் - களனி பல்கலைக்கழகம்)

13. தேசபந்து தென்னக்கோன் - சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

14. எச்.டி. அசிங்சலா செனவிரத்ன (காணி ஆணையாளர் - கிழக்கு மாகாணம்)

15. திலித் ஜயவீர – (தலைவர், தெரண ஊடக வலையமைப்பு)

16. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் என்.ஆர். லமாஹேவகே

17. பத்திநாதன் (ஓய்வுபெற்ற மாகாண பிரதம செயலாளர்)18. முபிசால் அபூபக்கர் (விரிவுரையாளர்)

இலங்கை ஜனாதிபதி செயலணி

செயலணியின் கடமைகள்

கிழக்கு மாகாணத்தினுள் அமைந்துள்ள தொல்பொருள் ரீதியிலான பெறுமதிவாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல், அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களிலுள்ள தொல்பொருள்களைப் பாதுகாத்தல், அவற்றினை மீள் நிர்மாணித்தல், அந்த தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்காக பொருத்தமான நடைமுறையொன்றை இனங்காணுதல் மற்றும் செயற்படுத்துதல் இந்த செயலணியின் கடமைகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

 

அவ்வாறான தொல்பொருள் இடங்களுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளின் அளவை அடையாளம் காணுதல் மற்றும் சட்ட ரீதியாக அவ்விடங்களை ஒதுக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தலும் செயலணியின் கடமையாக குறித்தொதுக்கப்பட்டது.

மேலும் தொல்பொருட்கள் உள்ள இடங்களின் கலாசாரப் பெறுமதிகளைப் பாதுகாத்து, இலங்கையின் தனித்துவத்தை தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக பிரசாரம் செய்தலும், அவ்வாறான மரபுரிமைகளை மேம்படுத்துவதற்கான சிபாரிசுகளைச் செய்தலும் மேற்படி ஜனாதிபதி செயலணிக்கான பணிகளாக கூறப்பட்டிருந்தது.

https://www.bbc.com/tamil/articles/c87e70mx3vmo

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி செயலணி கலைக்கப்பட்டதால் ரணில் ஒன்றும் கோட்டாவை விட சிறந்தவருமில்லை அதனால் தமிழினத்துக்கும் முஸ்லீம்களுக்கும் நன்மை ஏற்பட்டதாக கருதவும் முடியாது. . அவர் மேற்படி செயலணியை கலைத்த நடவடிக்கை இனவிரோத உள் நோக்கம் கொண்டதேயன்றி வேறொன்றாக பார்க்க முடியாது. ஏனெனில் இனவிரோத நடவடிக்கைகளை ரணில் தடை செய்யவில்லை அவை ஒரு அமைச்சின் மூலம் தொடர்ந்தவண்ணம் தான் இருக்கப்போகிறது.

செயலணியின் பொறுப்பில் இருந்த கடமைகள் யாவும் ரணிலின்  மறைமுக நிகழ்ச்சி நிரலின் திட்டங்களுக்கு அமையவே    புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வேறுவிதமாக சொல்வதாயின் ரணிலின் இந்த நடவடிக்கை கேள்விக்கிடமாகியிருந்த ஜனாதிபதி செயலணியின் மூலம் இதுவரை தமிழ் முஸ்லீம் பிரதேசங்களில்  நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் எதிர்காலத்தில் சட்டரீதியான சவால்களுக்கு உட்படுத்தப்படாமல் பாதுகாப்பது மட்டுமன்றி நாட்டின் இனப்பிரச்சினை தீர்ந்தால் கூட சிங்கள அரசின்  நில அபகரிப்பு உட்பட அனைத்து தமிழின விரோத கைங்கரியங்களையும் இனி ஒருபோதும் மாற்றியமைக்க முடியாதபடி சட்ட வலுவுடன் சிறப்பான முறையில் செயற்படுத்தப்படும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.