Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடைக்கால பொதுச்செயலராக இபிஎஸ் – தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரம் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் விரைவாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று: அதிகாரிகளுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை கூட்டம்

இடைக்கால பொதுச்செயலராக இபிஎஸ் – தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரம் ?

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு கணக்கை இந்திய தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.

அதிமுகவில் இரட்டைத் தலைமை பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கட்சியின் உரிமை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை அடுத்து, பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தற்போது நடைபெற்று வருகின்றது.

மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்பிக்கப்பட்ட நிலையில், தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது என ஓபிஎஸ் தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஒக்டோபர் 3-ஆம் திகதி இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி முன்வைத்த அதிமுக வரவு செலவு கணக்கை இந்திய தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.

https://athavannews.com/2022/1316611

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி சின்னம், பெயர் விவகாரம்: ஓபிஎஸ்க்கு நோட்டீஸ்!

KalaiDec 22, 2022 10:38AM
Screenshot-2022-12-22-104237.jpg

கட்சியின் சின்னம், பெயரை பயன்படுத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமையகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமான பிறகு ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு நடத்தி, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார்.

அதிமுகவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்தார். மேலும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி செயல்பட்டு வருகிறார். 

கட்சிக்கு உரிமை கோருவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று(டிசம்பர் 20) அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார். இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து ஓபிஎஸ்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர். 

உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வருவது சட்டவிரோதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கட்சியின் லெட்டர் பேட் மற்றும் சீல் போன்றவற்றை முறைகேடாக பயன்படுத்தி அதிமுக தலைமையக அறிவிப்பு என்று கூறுவதற்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

கட்சியின் பொறுப்பு எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் இது போன்று செயல்படுவதற்கு உரிமையில்லை என்றும், இது குறித்து விளக்கம் அளிக்குமாறும் நோட்டீஸ்  (Legal notice) விடுக்கப்பட்டுள்ளது.
 

https://minnambalam.com/political-news/party-symbol-name-issue-notice-to-ops-admk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.