Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் மீண்டும் கொரோனா மரணங்கள் பதிவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மீண்டும் கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் மீண்டும் கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நேற்று (திங்கட்கிழமை) இந்த கொரோனா மரணங்கள் நிகழ்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இலங்கையும் கொரோனா பரவல் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் எனவும் துறைசார் நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.

https://athavannews.com/2022/1317601

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கொவிட் அச்சுறுத்தல் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அவசர வேண்டுகோள் !

By DIGITAL DESK 2

29 DEC, 2022 | 01:07 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்று அதிகரித்துள்ள நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை ஒரு பொறிமுறையின் கீழ் நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுக் கொண்டவர்களும் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றி அவதானமாக செயற்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (டிச. 29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது நாட்டில் டெங்கு, இன்புளுவன்சா உள்ளிட்ட நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் ஒற்றை எண்களில் காணப்படுகின்ற போதிலும் மரணங்களும் பதிவாகி வருகின்றன. தடுப்பூசிகள் வழங்கப்பட்டு கொவிட் தொற்று பரவலானது சுகாதார தரப்பினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகிறது.

எனினும் அண்மையில் சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்வான், ஹொங்கொங் போன்ற நாடுகளில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அசாதாரணமாக அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை சுமார் 525,000 தொற்றாளர்கள் இந்த நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மீண்டுமொரு கொவிட் அலையை எதிர்கொள்ள நேரிடுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

எனவே தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களாக இருந்தாலும் கூட, சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறு வலியுறுத்துகின்றோம்.

குறிப்பாக தொற்றா நோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைமையிலுள்ளோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். பொருளாதார நெருக்கடிகளால் சுகாதாரத்துறையானது பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.

எனவே சுகாதார அமைச்சும் விரைவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

குறிப்பாக தற்போது கொவிட் தொற்று அதிகரித்துள்ள நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பிரயாணிகளை ஒரு பொறிமுறையின் கீழ் நாட்டுக்குள் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளன.

ஏனைய நாடுகளில் ஏற்பட்டுள்ள கொவிட் பரவலால் மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்ற போதிலும் , வருமுன் காப்பதற்கு தயாராக வேண்டும்.

மழையுடனான காலநிலையால் டெங்கு நோய் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையால் , இது தொடர்பிலும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்துகின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/144434

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றது - உபுல் ரோகண

By RAJEEBAN

30 DEC, 2022 | 04:16 PM
image

நாட்டில்  கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்குள் நுழைபவர்களை சோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/144567

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.