Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னாரில் முஸ்லீம் கிராமத்தவர்களை மனிதகேடயமாக பயன்படுத்தும் சிறீலங்கா படையினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 02-09-2007 03:07 மணி தமிழீழம் [செந்தமிழ்]

மன்னாரில் முஸ்லீம் கிராமத்தவர்களை மனிதகேடயமாக பயன்படுத்தும் சிறீலங்கா படையினர்

முசலி பிரிவுக்குட்பட்ட மன்னார் மாவட்டத்தில் சுமார் 50 முஸ்லீம் குடும்பத்தவர்களை மனிதகேடயங்களாக பயன்படுத்தி சிறீலங்கா படையினர் முன்னேற்ற நடவடிக்கையினை சனிக்கிழமை காலை மேற்கொண்டதாக தெரியவருகிறது.

இதேவேளை முள்ளிக்குளம் பகுதியில் உள்ள கிராமத்தவர்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள நானாட்டான் பிரிவுக்குட்பட்ட அச்சங்குளம் பகுதிநோக்கி இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

இப்பிரதேம் விடுதலைப்புலிகளும் சிறீலங்காபடையினரும் பிரசன்னமாகியிருக்கும் பிரதேசமாக இருந்ததாகவும் இப்பிரதேசத்தினுள் சிறீலங்கா படையினர் முன்னகர்ந்தபோது விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை எனவும் தெரியவருகிறது.

பண்டாரவெளி, முசலி, பிச்சைவாணிபக்குளம், கூழாங்குளம், பொற்குளம் ஆகியபகுதியில் 2002 ம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபின் மீளகுடியமர்த்தப்பட்ட முஸ்லீம் மக்களே இவ்வாறு மனிதகேடயங்களாக பயன்படுத்தப்பட்டுவந்ததாக இவ்இராணுவ நடவடிக்கையடுத்து தப்பிவந்த முஸ்லீம் இடம்பெயர்ந்த மக்கள் தெரிவித்தள்ளனர்.

நன்றி - பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

கேவலம்.மக்களை கேடயங்களாக பயன்படுத்தும் பயந்த பீச்சாண்டிகள்.இராணுவ விதிகளை மீறும் கோழைகள்.இவர்களாவது போரை வெல்லுறதாவது.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவரீதியாக சம்பூர், வாகரை, மன்னார் கரை ஓரங்களும் பொருளாதார ரீதியாக சம்பூர், மன்னார் கடற் கரைகளும் அதி முக்கியமானவை. இலங்கை அரசசின் பேரபம் பேசும் வல்லமையை மன்னார் கரையில் அதிகரிக்கும் பலமும் மன்னார் கடலில் பெறோலிய அகழ்வுகள் ஆரம்பிபதும் உதவும். வன்னியில் பெறோலிய அதிகார சபையும் திருமலை துறைமுக அதிகார சபையும் அமைக்கப் பட்டடுத் தீவிர எதிர் நடவடிக்கையோடு இயங்குவதும் அவசியம்.

இலங்கை அரசு புதிய போர் முனைகளையும் போர் முனைப்புகளையும் தொடர்ந்தும் வெற்றிகரமாகத் தொடர 1. கொழும்புக்கும் வடகிழக்கு எல்லைக்கும் இடைப்பட்ட சிங்களப் பகுதிகளில் இருந்தும் கிழக்கில் இருந்தும் முப்படை வளங்களையும் நகர்த்தியுள்ளது. 2. தான் குவிய அவசியமான வட கிழக்கிற்க்கு யொஉத்தத்தை முழுமையாக நகர்த்த முடியுமானால் 3.தான் குவியும் வட கிழக்கிற்க்கும் கொழும்புக்குள்ளும் யுத்தத்தை மட்டுப் படுத்த முடியுமானால் 3. எதிர் வரும் மழைகாலத்தில் பெரும் தோல்விகளைத் தவிர்க்க முடியும்னானால் அடுத்த கோடைகாலத்தில் யுத்தத்தை வெண்றுவிட முடியும் என்று கருதுகிறது.

இத்தகைய நிபந்தனைகள், நகர்வுகள் தடைப்படுமானால் மட்டுமே மழைகாலத்தில் இலங்கை இராணுவம் பெரும் தோல்விகளை எதிர் நோக்க நேரிடும். வடக்கில் இருந்து கொழும்புக்கும் வடகிழக்கிற்கும் இடைப் பட்ட சிங்களப் பகுதிகளுக்கு யுத்தத்தை நகர்த்தாமல் பெருந்தாக்குதல்களால் இலங்கை இராணுவத்தின் மனவலியை தகர்த்து யுத்தத்தை வென்றுவிடுகிற வாய்ப்புகள் பயங்கரச மனித வளச் செலவான முறை. கொழும்புக்கு வெலியில் உள்ள சிங்கள நாட்டுக்கு யுத்தத்தை நகர்த்த செறிவான கெரிலா நடவடிக்கைகளால் மட்டுமே முடியும். இதன் பின்னணியில்தான் போராளிகள் கெரிலா நடவடிக்கைகளை தமது மூல உபாயத்தின் பிரதான பகுதியாக்கியதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வட வியட்னாமில் நேரடி யுத்த படை பலத்தையும் அரசையும் கட்டி எழுப்ப தென் வியட்னாமில் கொரிலா நடவடிக்கைகள் பெரிதும் உதவின. அந்த வகையில் அல்லாமல் வேறு எந்த வகையிலும் வியட்னாம் வெற்றி பெற்றிருக்க முடியாது.

தமிழரின் தற்போதைய நிலை முஸ்லிம் மக்களுக்கும் வரும். அது வரும்வரை அவர்கள் காத்திருக்கப்போகின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.