Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுதந்திரத்தின் குறியீடு மயிர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரத்தின் குறியீடு மயிர்

பெருமாள்முருகன்

spacer.png

ல்வித் துறை சார்ந்து நான் எழுதிய இருபத்தைந்து கட்டுரைகளைத் தொகுத்து ‘மயிர்தான் பிரச்சினையா?’ என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளேன். புத்தகம் நேற்று கைக்கு வந்து சேர்ந்தது. ரோஹிணி மணியின் கலையமைதி கூடிய பிரமாதமான அட்டை வடிவமைப்பு. பெண் மயிலின் தோற்றம் போன்ற தலைமயிருடன் கம்பீரமாக நிற்கும் இளைய தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கிலான அட்டை. 

இந்நூலின் தலைப்புக் கட்டுரை ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்றது. சமூக ஊடகங்களில் பரவி விவாதிக்கப்பட்டது. அதையொட்டி வெளியான கருத்துக்களால் மீண்டும் ஒரு கட்டுரையும் எழுத நேர்ந்தது. இரு கட்டுரைகளும் நூலில் உள்ளன. இன்றைய தலைமுறையினர் முடி வைத்துக்கொள்ளும் பாணி ‘அடங்காமை’ என்று அர்த்தப்படுத்தும் வகையிலானது. ஆசிரியரின் அதிகார மனநிலையைச் சீண்டுவதாக அது இருக்கிறது என்னும் கருத்தை மையப்படுத்திப் பலவற்றை இக்கட்டுரைகளில் பேசியுள்ளேன்.  

பழந்தமிழ் முதல் நவீன இலக்கியம் வரை

‘மனதில் நிற்கும் மாணவர்கள்’ நூலில் இந்த மயிர்ப் பிரச்சினையை வைத்துச் ‘சிலுப்பி சிலம்பரசன்’ என்றொரு கட்டுரை எழுதியுள்ளேன். ஒரு மாணவர் தம் தலை மயிரை மேலும் கீழுமாக அசைப்பதைக்கூடத் தாங்க முடியாதவர்களாக ஆசிரியர்கள் இருப்பதைப் பேசும் கட்டுரை அது. அந்நூலுக்கான முன்னுரையின் தலைப்பு ‘ஆசிரியருக்கு உகந்த கருவி கத்திரிக்கோல்.’ 

ஒரு மாணவரைப் பார்த்ததும் அவர் தலை மயிர் மீதுதான் ஆசிரியரின் கண் முதலில் பதிகிறது. கையில் கத்திரிக்கோலைக் கொடுத்துவிட்டால் வெட்டுவதற்கு ஆசிரியர்கள் தயங்க மாட்டார்கள். சில பள்ளிகளில் அப்படி நடந்த செய்திகளும் வந்திருக்கின்றன. அடக்கம், அடங்காமை ஆகியவற்றின் குறியீடாக ஆசிரியருக்கு மயிர் தோன்றுகிறது. மாணவர்களை அடக்கி மேய்த்தல்தானே கல்வி நிறுவனங்களின் வேலை?

 

6245f0f1b6036.jpeg

மாணவர்களை அணுகுவதில் நேரும் மயிர் தொடர்பான பிரச்சினை பற்றித் தொடர்ந்து கவனம் கொண்டிருக்கிறேன் என்பது புரிகிறது. சமீப காலத்தில் இந்தப் பார்வை என்னிடம் கூடியிருப்பதாகவும் தோன்றுகிறது. பழந்தமிழ் இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை தலை மயிர் எப்படியெல்லாம் பேசப்பட்டிருக்கிறது என்று பார்க்க ஆசையுள்ளது. திரைப்படங்களில் காட்சி ரூபமாகப் பதிவாகியிருப்பவற்றையும் காண வேண்டும். இவையெல்லாம் மிகவும் முக்கிய ஆவணம். புத்தகம் கைக்கு வந்துசேர்வதற்கு முந்தைய நாள் இரவு பார்த்த படம் ‘கட்டா குஸ்தி.’ அப்படத்திலும் மயிர் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது.

பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வையில் மாற்றத்தைக் கோரும் காலம் இது. பெண்கள் பரவலாகக் கல்வி கற்கிறார்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்கள். உயர்கல்விக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. கற்ற பிறகு கணிசமாக ஊதியம் கிடைக்கும் வேலைகளுக்குச் செல்கிறார்கள். அவர்களின் உடை, தோற்றம், உணவு ஆகியவை பெருமளவு மாறிவிட்டன. திருமணம், குடும்பம், வாழ்முறை பற்றிய பார்வைகளிலும் மாற்றங்கள். ஆனால், அந்த அளவுக்கு ஆண்களிடம் மாற்றம் வரவில்லை. புற வாழ்முறையை மாற்றிக்கொண்டாலும் பெண்கள் தம் தாயைப் போன்றவர்களாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். 

தம் வாழ்க்கையில் பெண்ணைப் பற்றி யோசிக்கும்போது அவர்களுக்குத் தாய்தான் நினைவுக்கு வருகிறார். சேலையும் தலைமயிரும் தாயின் தோற்ற அடையாளம். அவற்றுக்கும் அன்புக்கும் அல்லது தாய்மைக்கும் ஏதோ தொடர்பிருக்கிறது என்று நம்புகிறார்கள். வாழ்வியல் விழுமியங்களில் இன்று உருவாகியுள்ள மாற்றங்கள் ஆண்களின் மனதை அவ்வளவாகத் தீண்டவில்லை. மாற்றங்களை உணர்ந்து தம்மையும் மாற்றிக்கொள்ளும் ஆண்கள் சுலபமாக இன்றைய பெண்களையும் திருமண வாழ்வையும் எதிர்கொள்கிறார்கள். மாற மறுப்பவர்கள் மிகுந்த கஷ்டங்களுக்கு உள்ளாகிறார்கள்.

பொய் மயிர் எனும் ரகசியம்

‘கட்டா குஸ்தி’ திரைப்படம் பெண்களைப் பற்றிய பழைய விழுமியங்களுக்கும் இன்றைய மாற்றங்களுக்கும் இடையே உள்ள பிரச்சினையைப் பேசுகிறது. பெண்களைப் பற்றிப் பேசும் ஆண்களின் பழமைப் பார்வைகள் கேலிக்குரியனவாகப் படத்தில் வெளிப்படுகின்றன. பெண்கள் பேசுபவனவும் அப்பார்வைகளும் நவீனமாகவும் தர்க்கத்திற்கு ஏற்றவையாகவும் உள்ளன. வெகுஜனப் படம் ஒன்றில் இப்படிப் பழைய விழுமியங்களை எள்ளி நகையாடி அவற்றுக்கு எதிராகக் காட்சிகள் அமைவது அபூர்வம். நம் சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் பெண்களின் உடை, மயிர் பற்றியெல்லாம் அளந்து அறிவுரை பிதற்றிக்கொண்டிருக்கும் நிலையில் இந்தப் படம் முக்கியமானதாகவே படுகிறது. இனி வெகுஜன கருத்தியலும் மாற்றம் பெறும் என்பதற்கான அறிகுறி இப்படம். 

 

624f213d5f1b2.jpg

பெண்களைப் பற்றிச் சுயபார்வை அற்ற கதாநாயகன் தன் மாமன் சொல்பவற்றை அப்படியே ஏற்றுக்கொள்பவனாக இருக்கிறான். பெண்ணை அடக்கி ஆள்பவன்தான் ஆண். அதற்குப் பெண் படித்திருக்கக் கூடாது; ஆண் என்ன செய்தாலும் கேட்கக் கூடாது; சமையல் செய்துகொண்டு ஆணின் வரவை எதிர்பார்த்து வீட்டிலிருக்க வேண்டும் என்று நினைக்கிறான். கூடுதலாகப் பெண் என்றால் நீள மயிர் வேண்டும் என்கிறான். இடுப்புக்குக் கீழ் தொங்கும்படி மயிர் கொண்ட பெண்ணையே திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறான். கதாநாயகி ‘கட்டா குஸ்தி’ கற்று அப்போட்டிகளில் திறம்படச் செயல்படுபவள். தந்தையின் கட்டாயத்திற்காகக் குஸ்தி கற்றதையும் பட்டப்படிப்பு முடித்ததையும் மறைத்து பொய் மயிரை நீளமாகப் பொருத்திக்கொண்டு திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள். 

ரகசியத்தின் வாசனை

திருமணத்திற்குப் பிறகான வாழ்வில் குஸ்தி, படிப்பு ஆகியவற்றை மறைத்திருப்பதில் அவளுக்குப் பிரச்சினை ஏதுமில்லை. பொய் மயிரைக் காப்பாற்றிக்கொள்வதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பெண் பார்க்கும் படலத்தின்போதே அவன் ‘முடியப் பாத்தியா? பாம்பு மாதிரி எவ்வோ நீளம்’ என்று வியக்கிறான். ‘பின்னிய கூந்தல் கருநிற நாகம்’ என்று வருணிக்கும் மரபில் வருபவன் என்பதை அவன் சொல்லும் உவமையே உணர்த்துகிறது.

திருமணத்திற்கு நாயகன் ஒத்துக்கொள்ள முக்கியமான காரணம் முழங்காலைத் தொடும் நீள மயிர். அந்தப் பொய் மயிர் ரகசியத்தைப் பாதுகாக்க அவள் பெரும்பாடு படுகிறாள். முதலிரவு முடிந்து காலையில் எழுகிறாள். பொய் மயிர் கழன்று படுக்கையில் கிடக்கிறது. அதன் மீது கணவன் படுத்திருக்கிறான். அவன் தூக்கத்தைக் கலைக்காமல் பெரும்பாடு பட்டு மயிரை உருவி எடுக்கிறாள். குளிக்கையில் அதைக் கழற்றித் தொங்கவிடுகிறாள். கழுத்து வரை இருக்கும் தன் சொந்த மயிரை நீரில் நனைத்து ஆனந்தமாகக் குளிக்கிறாள்.  பொய் மயிரை அணிந்துகொண்டு வெளியே வருகிறாள். 

பொய் மயிர் நனையாமல் இருப்பதைக் கண்ட கணவன் ‘போய்த் தலைக்குக் குளிச்சிட்டு வா’ என்று மீண்டும் அவளைக் குளியலறைக்கு அனுப்புகிறான். அதற்கு ஷாம்பு போட்டுக் கழுவி அணிந்துகொண்டு வெளியே வருகிறாள். கணவனுக்குத் திருப்தி. பொய் மயிரை உண்மையென நம்பும் கணவன் அதற்குச் சாம்பிராணிப் புகை போட்டுவிடுகிறான். ‘இதெல்லாம் உங்கம்மா உனக்குச் சொல்லித் தர்லியா?’ என்று கேட்கும் அவன் ‘முடி வளக்கறது பெரிசில்ல, அத மெயின்டெயின் பண்ணனும். அதுதான் முக்கியம்’ என்று அவளுக்கு அறிவுரையும் ஆலோசனையும் சொல்கிறான்.

 

6252fc83694f8.jpg

அவள் மயிரை அப்படி ரசிக்கிறான். சடையை முன்னால் எடுத்துவிட்டுக்கொள்ளச் சொல்லி அழகு பார்க்கிறான். மயிரை மோந்து பார்த்து அதன் மணத்தில் மெய் மறக்கிறான். மயிர் அவன் முகத்தில் மோதுவதில் கிளர்ச்சி அடைகிறான். மனம் நம்பும்போது பொய் மயிரும் இவ்வாறு மயக்கம் தரும் போல. இக்காட்சிகள் எல்லாம் பார்வையாளர்களுக்கு நகைப்பையே தருகின்றன. இப்படியெல்லாம் அவன் ரசனைக்கு உரியதாக இருப்பது பொய் மயிர்தான் என்பதைக் கண்டுபிடித்துவிடுவானோ என்னும் பதற்றத்திலேயே எப்போதும் நாயகி இருக்கிறாள். அது தொடர்பான காட்சிகள் நகைச்சுவையாக அமைக்கப்பட்டிருந்தாலும் பல கோணங்களில் பார்க்கத் தூண்டுகின்றன. 

குளியலறையில் எரிச்சலுடனும் சினத்துடனும் பொய் மயிரைப் போட்டுத் துவைத்து எடுக்கிறாள். அது மயிரைத் துவைப்பது அல்ல, மயிர் பற்றி இன்னும் நீடிக்கும் விழுமியப் பார்வையைப் போட்டு அடித்துத் துவம்சம் செய்வதுதான். நீள மயிரைப் பராமரிப்பது சாதாரணம் அல்ல. கொஞ்சமாக இருக்கும் மயிரைப் பராமரிப்பதே இன்றைய காலத்தில் மிகக் கஷ்டமாக இருக்கிறது. கல்வி, வேலை உள்ளிடப் பல பொதுவெளிகளுக்குச் செல்லும் பெண்களுக்கு மயிர் குறைவாக இருப்பதுதான் வசதி. ஆண்களிலிருந்து தம்மை வேறுபடுத்திக்கொள்ளக் கழுத்தில் உரசும் அளவுக்கு மட்டும் வளர்த்துக்கொள்வது போதுமானதாக இருக்கிறது. அதையும் அலையவிடும் பாணியில் சீவிக்கொள்வதை விரும்புகிறார்கள். 

துறத்தலும் சுதந்திரமும்

முந்தைய காலத்தில் சடை போட்டுக்கொள்ளப் போதுமான மயிர் இல்லை என்றால் சவுரி முடி வைத்துக்கொள்வார்கள். கொண்டை போட்டுக்கொள்பவர்களும் பெரிதாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சவுரி சேர்ப்பார்கள். கிராமத்துச் சந்தைகளில் சவுரிக் கடைகள் தனி வரிசை கட்டி இருக்கும். இன்று அப்படி இல்லை. சாதாரண நாட்களில் சவுரி வைத்து நீளச் சடை போடுதல் வழக்கொழிந்து போயிற்று. திருமணம் போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே மரபான அலங்காரம் செய்கிறார்கள். அப்போது சவுரி முடி வைத்து இடுப்புக் கீழ் வரை விட்டுப் பின்னுகிறார்கள். நீள மயிர் என்பது இன்று சடங்குகளில் ஒன்றாகிவிட்டது.

 

6259802f6265d.jpg

இள வயதில் வழுக்கை விழும் ஆண்களுக்காகத்தான் நவீனமான பல கடைகள் செயல்படுகின்றன. பெண்களும் தம் மயிரைப் பராமரிக்க நவீன முடிதிருத்தகங்கள் பல உள்ளன என்றபோதும் அவை மரபிலிருந்து மாறுபட்டவை. பெண் என்றால் நீள மயிர் இருக்க வேண்டும் என்பது காலாவதியான மிகப் பழைய பார்வை. அதை இப்போது பெண்கள் விரும்புவதில்லை. அப்படி எதிர்பார்க்கும் ஆண்கள் ஏமாந்துதான் போக வேண்டும். அவர்களுக்குத் திருமண வாழ்க்கை பிரச்சினைதான்.

இப்படியெல்லாம் பேச வாகாக இப்படத்தில் சில காட்சிகள் இருக்கின்றன. எல்லாவற்றிலும் உச்சமான ஒரு காட்சி. எதிரிகளிடம் மாட்டிக்கொள்ளும் கணவன் அடிவாங்கிக் கிடக்கிறான். அவனைக் கொல்ல ஒருவன் முயல்கிறான். அப்போது வெகுண்டெழும் கட்டா குஸ்தி சாம்பியனான கதாநாயகி எதிரிகளை அடித்து நொறுக்கிக் கணவனைக் காப்பாற்றுகிறாள். சண்டையின்போது ஒருகட்டத்தில் அவளது பொய்மயிரை ஒருவன் பிடித்து இழுக்கிறான். அந்த நெருக்கடியிலும் பொய்மயிரைக் காப்பாற்றிக்கொள்ள முயன்று ‘விடுரா’ என்று அவனை எச்சரிக்கிறாள். அவன் ‘என்ன, வலிக்குதா?’ ஏளனமாகக் கேட்கிறான். முடியைப் பிடித்து இழுத்தால் பெண்கள் அடங்கிவிடுவார்கள் என்று எண்ணம். மனைவியை அடிக்கும் கணவன் பற்றிக்கொள்ளத் தலை மயிர் பிடியாகப் பயன்பட்டதுண்டு. அதைப் பற்றிய உரையாடல் ஒன்றும் படத்தில் உள்ளது.

மயிரைப் பற்றிக்கொண்டு ஏளனமாகப் பேசுபவனைத் திரும்பி அடிக்கிறாள் நாயகி. அவனை அடிக்கும்போதும் விடாமல் இழுப்பதால் அவன் கையோடு வந்துவிடும் பொய்மயிர் கணவனின் முகத்தில் மோதிக் கீழே விழுகிறது. அதிர்ச்சியோடு அதைக் கணவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். பொய்மயிர் கழன்றதும் பெரிய பாரம் தன் தலையிலிருந்து இறங்கிவிட்ட நிம்மதியுடன் அவன் தலையை அசைக்கிறாள். இயல்பான கழுத்தளவு மயிரைச் சிலிர்த்துக்கொண்டு இருபுறமும் அசைத்துப் பின் தலையை மேலுயர்த்துகிறாள். கண்களை மூடிக் கையால் நடுத்தலையைத் தடவுகிறாள். காற்றில் அலைந்து எல்லாப்புறமும் பறக்கிறது மயிர்க்கற்றை. இது ஒருகணக் காட்சி. 
 

spacer.png

பொய் மயிரைத் துறந்ததும் அவள் அனுபவிக்கும் சுதந்திரம் அக்கணத்தில் அற்புதமாகக் காட்சியாகிறது. இக்காட்சியை மட்டும் கிட்டத்தட்டப் பத்து முறை பார்த்திருப்பேன். மயிர் அலைதலும் அப்பெண்ணின் முகம் கொள்ளும் ஆனந்தமும் ஆசுவாசமும் பார்க்கப் பார்க்கச் சிலிர்ப்பை ஏற்படுத்தின. அது வெறும் மயிர் அல்ல; குறியீடு. ஆம், மயிர் என்பது இன்றைய தலைமுறை பெற்றிருக்கும் சுதந்திரம், சமகால வாழ்வியல் ஆகியவற்றை உணர்த்தும் காத்திரமான குறியீடு.

 

https://www.arunchol.com/perumal-murugan-on-hair-style-and-gatta-kusthi

 

 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

சுதந்திரத்தின் குறியீடு மயிர்

பெருமாள்முருகன்

spacer.png

ல்வித் துறை சார்ந்து நான் எழுதிய இருபத்தைந்து கட்டுரைகளைத் தொகுத்து ‘மயிர்தான் பிரச்சினையா?’ என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளேன். புத்தகம் நேற்று கைக்கு வந்து சேர்ந்தது. ரோஹிணி மணியின் கலையமைதி கூடிய பிரமாதமான அட்டை வடிவமைப்பு. பெண் மயிலின் தோற்றம் போன்ற தலைமயிருடன் கம்பீரமாக நிற்கும் இளைய தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கிலான அட்டை. 

இந்நூலின் தலைப்புக் கட்டுரை ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்றது. சமூக ஊடகங்களில் பரவி விவாதிக்கப்பட்டது. அதையொட்டி வெளியான கருத்துக்களால் மீண்டும் ஒரு கட்டுரையும் எழுத நேர்ந்தது. இரு கட்டுரைகளும் நூலில் உள்ளன. இன்றைய தலைமுறையினர் முடி வைத்துக்கொள்ளும் பாணி ‘அடங்காமை’ என்று அர்த்தப்படுத்தும் வகையிலானது. ஆசிரியரின் அதிகார மனநிலையைச் சீண்டுவதாக அது இருக்கிறது என்னும் கருத்தை மையப்படுத்திப் பலவற்றை இக்கட்டுரைகளில் பேசியுள்ளேன்.  

பழந்தமிழ் முதல் நவீன இலக்கியம் வரை

‘மனதில் நிற்கும் மாணவர்கள்’ நூலில் இந்த மயிர்ப் பிரச்சினையை வைத்துச் ‘சிலுப்பி சிலம்பரசன்’ என்றொரு கட்டுரை எழுதியுள்ளேன். ஒரு மாணவர் தம் தலை மயிரை மேலும் கீழுமாக அசைப்பதைக்கூடத் தாங்க முடியாதவர்களாக ஆசிரியர்கள் இருப்பதைப் பேசும் கட்டுரை அது. அந்நூலுக்கான முன்னுரையின் தலைப்பு ‘ஆசிரியருக்கு உகந்த கருவி கத்திரிக்கோல்.’ 

 

ஒரு மாணவரைப் பார்த்ததும் அவர் தலை மயிர் மீதுதான் ஆசிரியரின் கண் முதலில் பதிகிறது. கையில் கத்திரிக்கோலைக் கொடுத்துவிட்டால் வெட்டுவதற்கு ஆசிரியர்கள் தயங்க மாட்டார்கள். சில பள்ளிகளில் அப்படி நடந்த செய்திகளும் வந்திருக்கின்றன. அடக்கம், அடங்காமை ஆகியவற்றின் குறியீடாக ஆசிரியருக்கு மயிர் தோன்றுகிறது. மாணவர்களை அடக்கி மேய்த்தல்தானே கல்வி நிறுவனங்களின் வேலை?

 

6245f0f1b6036.jpeg

மாணவர்களை அணுகுவதில் நேரும் மயிர் தொடர்பான பிரச்சினை பற்றித் தொடர்ந்து கவனம் கொண்டிருக்கிறேன் என்பது புரிகிறது. சமீப காலத்தில் இந்தப் பார்வை என்னிடம் கூடியிருப்பதாகவும் தோன்றுகிறது. பழந்தமிழ் இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை தலை மயிர் எப்படியெல்லாம் பேசப்பட்டிருக்கிறது என்று பார்க்க ஆசையுள்ளது. திரைப்படங்களில் காட்சி ரூபமாகப் பதிவாகியிருப்பவற்றையும் காண வேண்டும். இவையெல்லாம் மிகவும் முக்கிய ஆவணம். புத்தகம் கைக்கு வந்துசேர்வதற்கு முந்தைய நாள் இரவு பார்த்த படம் ‘கட்டா குஸ்தி.’ அப்படத்திலும் மயிர் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது.

பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வையில் மாற்றத்தைக் கோரும் காலம் இது. பெண்கள் பரவலாகக் கல்வி கற்கிறார்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்கள். உயர்கல்விக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. கற்ற பிறகு கணிசமாக ஊதியம் கிடைக்கும் வேலைகளுக்குச் செல்கிறார்கள். அவர்களின் உடை, தோற்றம், உணவு ஆகியவை பெருமளவு மாறிவிட்டன. திருமணம், குடும்பம், வாழ்முறை பற்றிய பார்வைகளிலும் மாற்றங்கள். ஆனால், அந்த அளவுக்கு ஆண்களிடம் மாற்றம் வரவில்லை. புற வாழ்முறையை மாற்றிக்கொண்டாலும் பெண்கள் தம் தாயைப் போன்றவர்களாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். 

தம் வாழ்க்கையில் பெண்ணைப் பற்றி யோசிக்கும்போது அவர்களுக்குத் தாய்தான் நினைவுக்கு வருகிறார். சேலையும் தலைமயிரும் தாயின் தோற்ற அடையாளம். அவற்றுக்கும் அன்புக்கும் அல்லது தாய்மைக்கும் ஏதோ தொடர்பிருக்கிறது என்று நம்புகிறார்கள். வாழ்வியல் விழுமியங்களில் இன்று உருவாகியுள்ள மாற்றங்கள் ஆண்களின் மனதை அவ்வளவாகத் தீண்டவில்லை. மாற்றங்களை உணர்ந்து தம்மையும் மாற்றிக்கொள்ளும் ஆண்கள் சுலபமாக இன்றைய பெண்களையும் திருமண வாழ்வையும் எதிர்கொள்கிறார்கள். மாற மறுப்பவர்கள் மிகுந்த கஷ்டங்களுக்கு உள்ளாகிறார்கள்.

பொய் மயிர் எனும் ரகசியம்

‘கட்டா குஸ்தி’ திரைப்படம் பெண்களைப் பற்றிய பழைய விழுமியங்களுக்கும் இன்றைய மாற்றங்களுக்கும் இடையே உள்ள பிரச்சினையைப் பேசுகிறது. பெண்களைப் பற்றிப் பேசும் ஆண்களின் பழமைப் பார்வைகள் கேலிக்குரியனவாகப் படத்தில் வெளிப்படுகின்றன. பெண்கள் பேசுபவனவும் அப்பார்வைகளும் நவீனமாகவும் தர்க்கத்திற்கு ஏற்றவையாகவும் உள்ளன. வெகுஜனப் படம் ஒன்றில் இப்படிப் பழைய விழுமியங்களை எள்ளி நகையாடி அவற்றுக்கு எதிராகக் காட்சிகள் அமைவது அபூர்வம். நம் சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் பெண்களின் உடை, மயிர் பற்றியெல்லாம் அளந்து அறிவுரை பிதற்றிக்கொண்டிருக்கும் நிலையில் இந்தப் படம் முக்கியமானதாகவே படுகிறது. இனி வெகுஜன கருத்தியலும் மாற்றம் பெறும் என்பதற்கான அறிகுறி இப்படம். 

 

624f213d5f1b2.jpg

பெண்களைப் பற்றிச் சுயபார்வை அற்ற கதாநாயகன் தன் மாமன் சொல்பவற்றை அப்படியே ஏற்றுக்கொள்பவனாக இருக்கிறான். பெண்ணை அடக்கி ஆள்பவன்தான் ஆண். அதற்குப் பெண் படித்திருக்கக் கூடாது; ஆண் என்ன செய்தாலும் கேட்கக் கூடாது; சமையல் செய்துகொண்டு ஆணின் வரவை எதிர்பார்த்து வீட்டிலிருக்க வேண்டும் என்று நினைக்கிறான். கூடுதலாகப் பெண் என்றால் நீள மயிர் வேண்டும் என்கிறான். இடுப்புக்குக் கீழ் தொங்கும்படி மயிர் கொண்ட பெண்ணையே திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறான். கதாநாயகி ‘கட்டா குஸ்தி’ கற்று அப்போட்டிகளில் திறம்படச் செயல்படுபவள். தந்தையின் கட்டாயத்திற்காகக் குஸ்தி கற்றதையும் பட்டப்படிப்பு முடித்ததையும் மறைத்து பொய் மயிரை நீளமாகப் பொருத்திக்கொண்டு திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள். 

ரகசியத்தின் வாசனை

திருமணத்திற்குப் பிறகான வாழ்வில் குஸ்தி, படிப்பு ஆகியவற்றை மறைத்திருப்பதில் அவளுக்குப் பிரச்சினை ஏதுமில்லை. பொய் மயிரைக் காப்பாற்றிக்கொள்வதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பெண் பார்க்கும் படலத்தின்போதே அவன் ‘முடியப் பாத்தியா? பாம்பு மாதிரி எவ்வோ நீளம்’ என்று வியக்கிறான். ‘பின்னிய கூந்தல் கருநிற நாகம்’ என்று வருணிக்கும் மரபில் வருபவன் என்பதை அவன் சொல்லும் உவமையே உணர்த்துகிறது.

திருமணத்திற்கு நாயகன் ஒத்துக்கொள்ள முக்கியமான காரணம் முழங்காலைத் தொடும் நீள மயிர். அந்தப் பொய் மயிர் ரகசியத்தைப் பாதுகாக்க அவள் பெரும்பாடு படுகிறாள். முதலிரவு முடிந்து காலையில் எழுகிறாள். பொய் மயிர் கழன்று படுக்கையில் கிடக்கிறது. அதன் மீது கணவன் படுத்திருக்கிறான். அவன் தூக்கத்தைக் கலைக்காமல் பெரும்பாடு பட்டு மயிரை உருவி எடுக்கிறாள். குளிக்கையில் அதைக் கழற்றித் தொங்கவிடுகிறாள். கழுத்து வரை இருக்கும் தன் சொந்த மயிரை நீரில் நனைத்து ஆனந்தமாகக் குளிக்கிறாள்.  பொய் மயிரை அணிந்துகொண்டு வெளியே வருகிறாள். 

பொய் மயிர் நனையாமல் இருப்பதைக் கண்ட கணவன் ‘போய்த் தலைக்குக் குளிச்சிட்டு வா’ என்று மீண்டும் அவளைக் குளியலறைக்கு அனுப்புகிறான். அதற்கு ஷாம்பு போட்டுக் கழுவி அணிந்துகொண்டு வெளியே வருகிறாள். கணவனுக்குத் திருப்தி. பொய் மயிரை உண்மையென நம்பும் கணவன் அதற்குச் சாம்பிராணிப் புகை போட்டுவிடுகிறான். ‘இதெல்லாம் உங்கம்மா உனக்குச் சொல்லித் தர்லியா?’ என்று கேட்கும் அவன் ‘முடி வளக்கறது பெரிசில்ல, அத மெயின்டெயின் பண்ணனும். அதுதான் முக்கியம்’ என்று அவளுக்கு அறிவுரையும் ஆலோசனையும் சொல்கிறான்.

 

6252fc83694f8.jpg

அவள் மயிரை அப்படி ரசிக்கிறான். சடையை முன்னால் எடுத்துவிட்டுக்கொள்ளச் சொல்லி அழகு பார்க்கிறான். மயிரை மோந்து பார்த்து அதன் மணத்தில் மெய் மறக்கிறான். மயிர் அவன் முகத்தில் மோதுவதில் கிளர்ச்சி அடைகிறான். மனம் நம்பும்போது பொய் மயிரும் இவ்வாறு மயக்கம் தரும் போல. இக்காட்சிகள் எல்லாம் பார்வையாளர்களுக்கு நகைப்பையே தருகின்றன. இப்படியெல்லாம் அவன் ரசனைக்கு உரியதாக இருப்பது பொய் மயிர்தான் என்பதைக் கண்டுபிடித்துவிடுவானோ என்னும் பதற்றத்திலேயே எப்போதும் நாயகி இருக்கிறாள். அது தொடர்பான காட்சிகள் நகைச்சுவையாக அமைக்கப்பட்டிருந்தாலும் பல கோணங்களில் பார்க்கத் தூண்டுகின்றன. 

குளியலறையில் எரிச்சலுடனும் சினத்துடனும் பொய் மயிரைப் போட்டுத் துவைத்து எடுக்கிறாள். அது மயிரைத் துவைப்பது அல்ல, மயிர் பற்றி இன்னும் நீடிக்கும் விழுமியப் பார்வையைப் போட்டு அடித்துத் துவம்சம் செய்வதுதான். நீள மயிரைப் பராமரிப்பது சாதாரணம் அல்ல. கொஞ்சமாக இருக்கும் மயிரைப் பராமரிப்பதே இன்றைய காலத்தில் மிகக் கஷ்டமாக இருக்கிறது. கல்வி, வேலை உள்ளிடப் பல பொதுவெளிகளுக்குச் செல்லும் பெண்களுக்கு மயிர் குறைவாக இருப்பதுதான் வசதி. ஆண்களிலிருந்து தம்மை வேறுபடுத்திக்கொள்ளக் கழுத்தில் உரசும் அளவுக்கு மட்டும் வளர்த்துக்கொள்வது போதுமானதாக இருக்கிறது. அதையும் அலையவிடும் பாணியில் சீவிக்கொள்வதை விரும்புகிறார்கள். 

துறத்தலும் சுதந்திரமும்

முந்தைய காலத்தில் சடை போட்டுக்கொள்ளப் போதுமான மயிர் இல்லை என்றால் சவுரி முடி வைத்துக்கொள்வார்கள். கொண்டை போட்டுக்கொள்பவர்களும் பெரிதாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சவுரி சேர்ப்பார்கள். கிராமத்துச் சந்தைகளில் சவுரிக் கடைகள் தனி வரிசை கட்டி இருக்கும். இன்று அப்படி இல்லை. சாதாரண நாட்களில் சவுரி வைத்து நீளச் சடை போடுதல் வழக்கொழிந்து போயிற்று. திருமணம் போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே மரபான அலங்காரம் செய்கிறார்கள். அப்போது சவுரி முடி வைத்து இடுப்புக் கீழ் வரை விட்டுப் பின்னுகிறார்கள். நீள மயிர் என்பது இன்று சடங்குகளில் ஒன்றாகிவிட்டது.

 

6259802f6265d.jpg

இள வயதில் வழுக்கை விழும் ஆண்களுக்காகத்தான் நவீனமான பல கடைகள் செயல்படுகின்றன. பெண்களும் தம் மயிரைப் பராமரிக்க நவீன முடிதிருத்தகங்கள் பல உள்ளன என்றபோதும் அவை மரபிலிருந்து மாறுபட்டவை. பெண் என்றால் நீள மயிர் இருக்க வேண்டும் என்பது காலாவதியான மிகப் பழைய பார்வை. அதை இப்போது பெண்கள் விரும்புவதில்லை. அப்படி எதிர்பார்க்கும் ஆண்கள் ஏமாந்துதான் போக வேண்டும். அவர்களுக்குத் திருமண வாழ்க்கை பிரச்சினைதான்.

இப்படியெல்லாம் பேச வாகாக இப்படத்தில் சில காட்சிகள் இருக்கின்றன. எல்லாவற்றிலும் உச்சமான ஒரு காட்சி. எதிரிகளிடம் மாட்டிக்கொள்ளும் கணவன் அடிவாங்கிக் கிடக்கிறான். அவனைக் கொல்ல ஒருவன் முயல்கிறான். அப்போது வெகுண்டெழும் கட்டா குஸ்தி சாம்பியனான கதாநாயகி எதிரிகளை அடித்து நொறுக்கிக் கணவனைக் காப்பாற்றுகிறாள். சண்டையின்போது ஒருகட்டத்தில் அவளது பொய்மயிரை ஒருவன் பிடித்து இழுக்கிறான். அந்த நெருக்கடியிலும் பொய்மயிரைக் காப்பாற்றிக்கொள்ள முயன்று ‘விடுரா’ என்று அவனை எச்சரிக்கிறாள். அவன் ‘என்ன, வலிக்குதா?’ ஏளனமாகக் கேட்கிறான். முடியைப் பிடித்து இழுத்தால் பெண்கள் அடங்கிவிடுவார்கள் என்று எண்ணம். மனைவியை அடிக்கும் கணவன் பற்றிக்கொள்ளத் தலை மயிர் பிடியாகப் பயன்பட்டதுண்டு. அதைப் பற்றிய உரையாடல் ஒன்றும் படத்தில் உள்ளது.

மயிரைப் பற்றிக்கொண்டு ஏளனமாகப் பேசுபவனைத் திரும்பி அடிக்கிறாள் நாயகி. அவனை அடிக்கும்போதும் விடாமல் இழுப்பதால் அவன் கையோடு வந்துவிடும் பொய்மயிர் கணவனின் முகத்தில் மோதிக் கீழே விழுகிறது. அதிர்ச்சியோடு அதைக் கணவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். பொய்மயிர் கழன்றதும் பெரிய பாரம் தன் தலையிலிருந்து இறங்கிவிட்ட நிம்மதியுடன் அவன் தலையை அசைக்கிறாள். இயல்பான கழுத்தளவு மயிரைச் சிலிர்த்துக்கொண்டு இருபுறமும் அசைத்துப் பின் தலையை மேலுயர்த்துகிறாள். கண்களை மூடிக் கையால் நடுத்தலையைத் தடவுகிறாள். காற்றில் அலைந்து எல்லாப்புறமும் பறக்கிறது மயிர்க்கற்றை. இது ஒருகணக் காட்சி. 
 

spacer.png

பொய் மயிரைத் துறந்ததும் அவள் அனுபவிக்கும் சுதந்திரம் அக்கணத்தில் அற்புதமாகக் காட்சியாகிறது. இக்காட்சியை மட்டும் கிட்டத்தட்டப் பத்து முறை பார்த்திருப்பேன். மயிர் அலைதலும் அப்பெண்ணின் முகம் கொள்ளும் ஆனந்தமும் ஆசுவாசமும் பார்க்கப் பார்க்கச் சிலிர்ப்பை ஏற்படுத்தின. அது வெறும் மயிர் அல்ல; குறியீடு. ஆம், மயிர் என்பது இன்றைய தலைமுறை பெற்றிருக்கும் சுதந்திரம், சமகால வாழ்வியல் ஆகியவற்றை உணர்த்தும் காத்திரமான குறியீடு.

 

https://www.arunchol.com/perumal-murugan-on-hair-style-and-gatta-kusthi

 

 

இலங்கையில்... "மயிர்" நல்ல சொல். 👍 😁
தமிழ்நாட்டில் மயிர் என்ற சொல் கெட்ட சொல் அல்லவா?  😂
அங்கு... "முடி" , கூந்தல், அல்லது  "ஹேயார்" (Hair)   என்று தானே... சொல்வார்கள்.  🤣

ஆனால்.... இலங்கையில், "கூந்தல்" என்ற சொல் கெட்ட சொல் என நினைக்கின்றேன். 🙃
ப்ளீஸ்... யாராவது, எனது சந்தேகத்தை போக்குவீர்களா.... 🙏

Edited by தமிழ் சிறி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 7/1/2023 at 09:44, தமிழ் சிறி said:

இலங்கையில்... "மயிர்" நல்ல சொல். 👍 😁
தமிழ்நாட்டில் மயிர் என்ற சொல் கெட்ட சொல் அல்லவா?  😂
அங்கு... "முடி" , கூந்தல், அல்லது  "ஹேயார்" (Hair)   என்று தானே... சொல்வார்கள்.  🤣

ஆனால்.... இலங்கையில், "கூந்தல்" என்ற சொல் கெட்ட சொல் என நினைக்கின்றேன். 🙃
ப்ளீஸ்... யாராவது, எனது சந்தேகத்தை போக்குவீர்களா.... 🙏

இலங்கையிலும் 'மயிர்' என்ற சொல்லையே தவிர்பார்கள். என்ன*** க் கதைகதைக்கிறாய்! என்று பேச்சுவழக்கில் கோபத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்துவதைக் கேட்டுள்ளேன். முடி, கூந்தல் என்பனவே நற்சொற்பதங்களாக வழங்கி வருகின்றன. ஆனால், 'மயிர்' என்பதும் ஒரு பெயர்ச்சொல் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

கட்டா குஸ்தி திரைப்படம் பார்ததேன். மக்களுக்கான சிறந்த செய்தியை நகைச்சுவையுடன் சிறப்பாக சொல்லியுள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/1/2023 at 09:37, கிருபன் said:

பெண் என்றால் நீள மயிர் இருக்க வேண்டும் என்பது காலாவதியான மிகப் பழைய பார்வை. அதை இப்போது பெண்கள் விரும்புவதில்லை. அப்படி எதிர்பார்க்கும் ஆண்கள் ஏமாந்துதான் போக வேண்டும். அவர்களுக்குத் திருமண வாழ்க்கை பிரச்சினைதான்.

அப்போ தலைமயிரில் பூக்களையும் வேறு வைத்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு சந்தர்பமே இல்லை.

முடி கூந்தல் என்று தமிழர்கள் பேசி நான் கேட்டதே இல்லை.
மயிர் வளர்ந்து விட்டது
மயிர் வெட்ட போகிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.