Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் செயல்படக் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு ஊர்வலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் செயல்படக் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு ஊர்வலம்

By DIGITAL DESK 5

10 JAN, 2023 | 03:33 PM
image

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 'ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த  வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு  மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு' அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரண்டு செயல்படக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை  ஒன்றிணைத்து முன்னெடுத்து வரும்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று (ஜன 10) செவ்வாய்க்கிழமை மன்னாரில் 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2023-01-10_at_11.49.39_AM

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வடமாகாண இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை  6 ஆவது நாளாகவும்  காலை 10 மணியளவில்  மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்றது.

WhatsApp_Image_2023-01-10_at_11.49.37_AM

இதன் போது சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்ட மக்கள்,கல்விமான்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தனர்.

DSC_0056.JPG

இதன் போது கலந்து கொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DSC_0053.JPG

குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகள் இடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள் ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு ஒரு தனி மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்,அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க  உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DSC_0047.JPG

இதனைத் தொடர்ந்து தமது கோரிக்கை அடங்கிய மகஜர் வாசித்தனர்.

DSC_0016.JPG

20230110_110610.jpg

DSC_0010.JPG

DSC_0033.JPG

DSC_0037.JPG

https://www.virakesari.lk/article/145431

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ! சுதந்திர தினத்துக்கு தீர்வோட வருவினம், ஆரத்தி எடுக்க தயாராகுங்கோ! நான் சொன்னேனோ என்னோ? ஒண்டு கிழக்கால இழுத்தா மற்றது மேற்காலை இழுக்கும் பயணம் முடியுமா? நேற்று வந்தது கட்சியை இழுத்து மூடுது, மூத்ததுகள் பின்னால போகுதுகள். இப்ப விளங்குதே ஏன் நம்ம இனப்பிரச்சனை இவ்வளவுகாலம் இழுபட்டது என்று? வந்தவர் வந்தவழியே போய்விடுவார், தல நிம்மதியா உறங்கிவிடுவார், நம்பிய மக்கள் நடுத்தெருவிலையும் நிக்க முடியாது. அவர்கள் மக்களை நினைத்தாற்தானே மக்களின் குரல் கேட்கும்? அவர்களுக்கு தேவையானநேரம் வருவார்கள், தேவை முடிந்ததும் மக்கள் குரலும், தேவையும் தெரியாத, கேக்காத இடத்திற்கு போய் உல்லாசம். வெட்கமில்லை..... இவ்வளவு காலமாய் இந்த பிரச்சனையை தீர்க்க முடியாமல் இழுத்தடித்து  வீராப்பு பேச, நம் மக்கள்,  அவர்களின் ஏக பிரதிநிதிகள் நாங்கள் என்று சொல்ல? கடமை செய்யாதவனுக்கு உரிமை இல்லை என்று சொல்லுங்கள். தமிழரசுக்கட்சியே! வீட்டை மூடி வழிவிடு என்று கோசமெழுப்புங்கள். தோத்துப்போன தலைவர், சொல்வார் புத்தி கேட்டு பின்தொடரும் கேணை..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.