Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு குதிரை பந்தய திடலில் பெண்ணின் சடலம் மீட்பு – நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு குதிரை பந்தய திடலில் பெண்ணின் சடலம் மீட்பு – நடந்தது என்ன?

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கொழும்பிலுள்ள குதிரை பந்தய திடலில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு 07 பகுதியிலுள்ள குதிரை பந்தயத் திடலில் நேற்று பிற்பகல் சடலமொன்று காணப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, குதிரை பந்தயத் திடலுக்கு போலீஸ் குழுவொன்று சென்று விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

 

குதிரை பந்தயத் திடலிலுள்ள படிகளின் மீது, யுவதியொருவர், கழுத்து வெட்டப்பட்ட நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் சிசிடிவி காணொளிகளின் ஊடாக போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

சடலமாக கண்டெடுக்கப்பட்ட யுவதி, கொழும்பு புறநகர் பகுதியான ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 24 வயதானவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவி என்பதும் விசாரணை அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, சம்பவம் தொடர்பில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குதிரை பந்தயத் திடலுக்கு அண்மித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளியை அடிப்படையாகக் கொண்டு, இந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 24 வயதான கொழும்பு - வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தி ஒன்றும், பையொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் மிக நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

police

எனினும், தமது காதலை நிறுத்திக் கொள்வோம் என கொலை செய்யப்பட்ட யுவதி, குறித்த இளைஞரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே, இருவரும் கொழும்பு குதிரை பந்தயத் திடலுக்கு நேற்றையதினம் சென்றுள்ளனர்.

பல்கலைக்கழக விரிவுரைகள் முடிவடைந்ததை அடுத்தே, இருவரும் இவ்வாறு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர், கொலையை செய்ததை அடுத்து, அவரும் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறுகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cp36dv6lp1yo

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணை மூடச்சொல்லிவிட்டு கழுத்தை வெட்டினேன் - பல்கலைகழக மாணவி கொலை சந்தேகநபர்

ல்கலைகழக மாணவியின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் சம்பவம் இடம்பெற்ற விதம் குறித்த அதிர்ச்சி தகவல்களை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட மாணவியுடன்  கல்விகற்ற மாணவன் பசிது சதுரங்க என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார், அவர் பின்வரும் தகவல்களை தெரிவித்தார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆச்சரியமளிப்பதாக தெரிவித்துவிட்டு கண்ணை கட்டி கொலை குதிரைப்பந்தய திடலில் கொலை செய்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு முக்கிய விடயம் குறித்து  கதைக்கவேண்டும் என தெரிவித்து நான் அவரை குதிரைபந்தய திடலிற்கு அழைத்து வந்தேன் அதன் பின்னர் நான் அவருக்கு ஆச்சரியமளிக்க போவதாக தெரிவித்து விட்டு கண்ணை மூடிவிட்டு கழுத்தை வெட்டினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சூட்டி நான் மனநோயாளி என எப்போதும் என்னை ஏசுவார் இது என்னை வேதனையில் ஆழ்த்தியது சில அவசரமான விடயங்கள் கதைக்கவேண்டும் வா என தெரிவித்து அவரை கொழும்பு குதிரைபந்தய திடலிற்கு அழைத்து வந்தேன் ஒருமாதகாலமாக நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன் அவர் இன்னொருவரை காதலிப்பதை விரும்பாததால் இவ்வாறு செய்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2019 முதல் நான் உளநலபாதிப்பிற்காக  சிகிச்சை பெற்றுவந்துள்ளேன்,2020லேயே நான் அவரை  காதலிக்க ஆரம்பித்தேன்நான் கிசிச்சைபெறுவதை நான் அவருக்கு தெரிவிக்கவில்லை  நான்கைந்து மாதங்களிற்கு முன்னர் அவருக்கு அது தெரியவந்தது அவர் என்னுடனான உறவை நிறுத்த விரும்பினார் நிறுத்தினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் அவர் முற்றாக மாறிவிட்டார் என்னை பைத்தியம் என அழைத்தார் அவர் வேறு ஒரு உறவினால் அவ்வாறு மாறிவிட்டாரா என நான் ஆராய்ந்தேன் ஆனால் அவருக்கு அவ்வாறான உறவு இருக்கவில்லை,நான் அவரை சந்தேகித்தேன் அவர் என்னை பைத்தியம் என அழைத்ததால் எனக்கு கடும் வேதனையேற்பட்டது.

பின்னர் வேசறு ஒருவரையும் அவர் காதலிப்பதை விரும்பாததால் நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன் வெல்லம்பிட்டி சந்தியில் வைத்து கத்தியை வாங்கினேன் கத்தியை மறைத்து வைத்தவாறு நான் வீட்டிலிருந்து சென்றேன் முதலாவது விரிவுரைக்கு பின்னர் விசேடமாக ஒரு விடயத்தை தெரிவிக்க வேண்டும் என்பதால் நான் சூட்டியை குதிரைபந்தய திடலிற்கு அழைத்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் அவர் மறுத்தார் பின்பு நான் வற்புறுத்தியதால் அவர் இணங்கினார் நாங்கள் அங்கு சென்று அங்குள்ள தடாகத்திற்கு அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தோம்,நான் அவருடன் கடும் கோபத்திலிருந்தேன் உனக்கு ஒரு ஆச்சரியம் என தெரிவித்துவிட்டு குதிரை பந்தய திடல் ஸ்கோர்போர்ட்டிற்கு அருகில் அவரை கொண்டு சென்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் உனக்கு ஒரு ஆச்சரியம் என தெரிவித்துவிட்டு அவரது கண்மூடினேன் அவர் என்ன ஆச்சரியம் என கேட்டார் நான் பின்னர் அவரின் கழுத்தை வெட்டினேன், அவர் கதறினார் நான் தனது கழுத்தை மூடியிருந்த ஸ்கார்வை கழற்றிவிட்டு காப்பாற்றுமாறு கதறினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளர்ர்.

நான் அவரை மீண்டும் குத்தினேன் அங்கு சில யுவதிகள் காணப்பட்டார்கள் அவர்கள் அந்த இடத்திற்கு வரக்கூடும் என அஞ்சி நான் அங்கிருந்து தப்பியோடினேன் பின்னர் பேருந்தில் ஏறி வெல்லம்பிட்டிக்கு சென்றேன் - அங்கு புகையிரத்தின் முன்னால் பாய்வதற்கு திட்டமிட்டேன் ஆனால் புகையிரதம் வரவில்லை பின்னர் வீட்டிற்கு சென்று பொருட்களை வைத்துவிட்டு வந்து இரண்டு தடவைகள் களனி ஆற்றில் குதித்தேன் தற்கொலை செய்ய நினைத்தேன் ஆனால் அது நடக்கவில்லை இதன் பின்னரே நான் கைதுசெய்யப்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கண்ணை மூடச்சொல்லிவிட்டு கழுத்தை வெட்டினேன் - பல்கலைகழக மாணவி கொலை சந்தேகநபர் | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.