Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு அதிகாரமும் கிடையாது - தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு அதிகாரமும் கிடையாது - தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம்

By Vishnu

18 Jan, 2023 | 06:58 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டில் 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தினால் பிரிவினைவாத அரசியல்வாதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் நோக்கம் நிறைவேறுமே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்றும் 13 ஐ அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது என்றும் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் அமைப்பாளர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

18 ஆம் திகதி பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்துவதற்காக வடக்கு மக்களுக்கு வாக்குறுதியை வழங்கி இருக்கிறார்.

மேலும் வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாகவும் கூறி வருகிறார். இதனை கூறுவதற்கு ஜனாதிபதிக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது. அதனை நிறைவேற்ற வேண்டுமாயின் அவருக்கு மக்களாணை வேண்டும். அது அவரிடம் காணப்படுகின்றதா?

ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தது 13 ஐ நிறைவேற்றவோ அல்லது நாட்டில் புரட்சி ஏற்படுத்தி அதன் ஊடாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவோ அல்ல.

அதிகாரத்தை விட்டு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலப்பகுதியில் எஞ்சியிருக்கும்  காலப்பகுதியை முன்னெடுத்து செல்லவும், நாட்டு மக்களை வழிநடத்தவும் மற்றும் நாட்டை பாதுகாக்கவும் என்பதை ரணில் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் மக்களாணை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு முறையாக நாட்டை ஆள முடியாமல் தப்பியோடிய கோட்டாபயவிற்கு பதிலாக வெற்றிடமாக காணப்பட்ட  ஜனாதிபதி பதவியை நிரப்புவதற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்நிலையில் 13 ஐ அமுல்படுத்த எந்தவொரு அதிகாரமும் தற்பொழுது ரணிலுக்கு கிடையாது. மேலும்  கோட்டாபய ராஜபக்ஷவினால் நிறைவேற்ற முடியாமல் விட்டுச்சென்ற வேலைத் திட்டங்களை முன்னெடுத்து செல்வதே அவருடைய தற்பொழுதுள்ள பொறுப்பாகும்.

ஜனாதிபதி ரணில் அரசியலில் இருந்து மக்களால் ஒதுக்கப்பட்ட மற்றும் தேர்தலின் போது நிராகரிக்கப்பட்டதோடு பாராளுமன்றத்தில் கூட அங்கம் வகிக்க தகுதியில்லாத நபர். இவ்வாறான ஒருவருக்கு அரசியமைப்பை மாற்றுவதற்கு எப்படி அதிகாரம் இருக்கிறது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் 13 ஐ நடைமுறைப்படுத்துவதானால் யாருக்கு இலாபம்? அதன் பயனை யார் பெற்றுக்கொள்ள போவது? இந்நிலையில் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இனங்கவே 13 ஐ நடைமுறைப்படுத்த ரணில் ஆர்வம் காட்டுகிறார்.அவர்கள் இலங்கை மீது முழுமையாக அதிகாரத்தை பயன்படுத்தி 13 ஐ நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

மேலும் அமெரிக்காவிற்கும் அதில் ஒரு பங்கு இருக்கிறது. அன்று 13 ஐ நடைமுறைப்படுத்த ஜே.ஆர். ஜயவர்தன கைச்சாத்திட்ட போது  அமெரிக்கா உயர்தானிகரே முதலில் வாழ்த்து செய்தி அனுப்பினார். எம்மை பொறுத்தமட்டில் இந்தியா மற்றும் அமெரிக்காவே இதன் பின்னணியில் இருக்கிறது.

நாட்டில் 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தினால் பிரிவினைவாத அரசியல்வாதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் நோக்கம் நிறைவேறுமே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கபோவதில்லை என்றார்.

 

https://www.virakesari.lk/article/146121

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஜனாதிபதி ரணில் அரசியலில் இருந்து மக்களால் ஒதுக்கப்பட்ட மற்றும் தேர்தலின் போது நிராகரிக்கப்பட்டதோடு பாராளுமன்றத்தில் கூட அங்கம் வகிக்க தகுதியில்லாத நபர். இவ்வாறான ஒருவருக்கு அரசியமைப்பை மாற்றுவதற்கு எப்படி அதிகாரம் இருக்கிறது.

இதை ஒருக்கா நம்ம தமிழ் அரசியல்வாதிகளுக்கு விளங்குமாறு அடித்துச் சொல்லுங்கள். ஏதோ ரணில் சாதிக்கப்போகிறார் என ஆரவாரம் செய்கிறார்கள், இரகசியமாக சந்திக்கிறார்கள்.

1 hour ago, கிருபன் said:

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது

சரி தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கு என்று நீங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்கிறீர்கள், அதற்கான காரணம் என்ன? தீர்வு என்ன? என்பதையும் விளக்குங்களேன். அதை விட்டு நாடு பற்றியெரியும், பிரிவினை வரும் என்று எச்சரித்துக்கொண்டே இருக்கும் பிரிவினையையும் கொடுமைகளையும் மறைத்து அதில் சுகம் காணும் சுகத்தை மறைக்கிறீர்களா? இவருக்கு என்ன வயது? இருந்தும் குரூரபுத்தி மறையவில்லை. இவர் ஜே. வி. பியில் இருந்து வந்தவரா? இல்லை இவரைத்தான்முன்பொருமுறை  அரசாங்கம் கைது செய்ய தேடியபோது ஜி. ஜி. பொன்னம்பலம் பாதிரியார் உடையில் (மாறுவேடத்தில்) விமான நிலையத்திற்கு அழைத்துச்சென்று வெளிநாட்டுக்கு தப்பிப்போனார் என்றும் கெடுபிடிகள் மறைந்து நாட்டுக்கு திரும்பி வந்த உடனேயே தமிழருக்கெதிராக நஞ்சை கக்கத் தொடங்கிவிட்டார் என்றும் அறிந்தேன். சில நேரம் வேறு ஒருவராக இருக்கலாம், ஆனால் அமரசேகர என்கிற பெயர் நினைவிலிருக்கிறது. ரணில் முடிந்தால்; தன் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டில் வன்முறையை தூண்டுகிறார்கள், அமைதியை குலைக்கும் செய்திகளை பரப்புகிறார்கள் என்று இவர்களை பிடித்து உள்ளே போடட்டும், அல்லது இவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கட்டும் பாப்போம்!  அப்போ அடங்கும் இந்த கோஷம். சும்மா காலத்தை இழுத்தடித்து பதவியை தக்க வைக்கலாம் என்கிற கனவு கனநாளைக்கு நீடிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

மேலும் வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாகவும் கூறி வருகிறார். இதனை கூறுவதற்கு ஜனாதிபதிக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது.

அவரை ஜனாதிபதி என்கிறீர்கள் ஆனால் அதிகாரம் இல்லை என்கிறீர்கள், வேடிக்கையாக இருக்கிறது உங்கள் கருத்து! அறுபத்தொன்பது லட்ஷம் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவரை வீட்டுக்கு அனுப்பிய கலகக்காரரை சிறைக்குள் தள்ளியவரால் இதை நிறைவேற்ற முடியாதா? அப்போ எந்த அதிகாரத்தால் அவர் அதை செய்ய முடிந்தது? அவர் அப்படி செய்யும் போது ஏன் உங்களால் கேள்வி கேட்டு தடுத்து நிறுத்த முடியவில்லை. இப்படியானதுகளையெல்லாம் மரியாதை போட்டு அழைக்க வேண்டும் என்று வற்புறுத்தும் நம்ம தலைவிதி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.