Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொம்மை நாயகி Review: ஓர் எளிய தந்தையின் போராட்டமும், திகட்டாத திரை அனுபவமும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
937773.jpg  
 

பாதிக்கப்பட்ட தன் மகளுக்காக ஆதிக்க சாதியை எதிர்த்து தந்தை ஒருவர் நடத்தும் நீதிக்கான போராட்டத்தில் தீர்ப்பும் நீதியும் வெவ்வேறாக இருந்தால் அதுதான் ‘பொம்மை நாயகி’.

நுனிநாக்கு ஆங்கிலத்தில் தன் மகள் பேசுவதைக் கண்டு, ‘ஏம்பொண்ணு’ என பெருமைகொள்ளும் வேலு (யோகிபாபு) சாதாரண டீ மாஸ்டர். அன்றைக்கான கூலியில் நாட்களைக் கடத்தும் வேலு, மனைவி கயல்விழி (சுபத்ரா), மகள் பொம்மை நாயகி (ஸ்ரீமதி)யுடன் மகிழ்ச்சிக்கு குறைவில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். டீக்கடை உரிமையாளர் அதனை விற்கும் நிலைக்கு வரும்போது, வேலுவுக்கு வேலை பறிபோகிறது. சொந்தமாக கடையை வாங்கலாம் என எண்ணி பணம் திரட்டிக்கொண்டிருக்கும்போது, அவரது மகள் பொம்மை நாயகி திருவிழா ஒன்றில் திடீரென காணாமல் போகிறார்.

தன் மகளைத் தேடிச் செல்லும் வேலு, மயக்கமடைந்த நிலையில் பொம்மை நாயகியை மீட்டெடுக்க, அவரை அந்த நிலைக்கு தள்ளியது யார்? என்ன நடந்தது? குற்றவாளிகளுக்கு தண்டனை கிட்டியதா? - இதையெல்லாம் சமூகத்தின் சாளரமாய் சொல்லியிருக்கும் படைப்புதான் ‘பொம்மை நாயகி’.

உருவகேலி, அசால்ட் கலாய், டைமிங் காமெடி, இப்படியான எந்த டெம்ப்ளேட்டிலும் சிக்காத ஒரு யோகிபாபுவை வார்த்தெடுத்திருக்கிறார் இயக்குநர் ஷான். ‘பொம்மை நாயகி’யின் யோகிபாபு அற்புதக் கலைஞனாக வடிக்கப்பட்டு செதுக்கப்பட்டுள்ளார். வறுமை நிழலாடும் முகம், கவலை தோய்ந்த உடல்மொழி, சிரிப்பில் வறட்சி என யதார்த்த நடிப்பில் அடித்தட்டு தந்தையை கண்முன் காட்டும் யோகிபாபு குலுங்கி அழும் இடத்தில் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார்.

அவரது மனைவியாக சுபத்ரா நடிப்பில் அழுத்தம் கூட்ட, குழந்தை நட்சத்திரமான ஸ்ரீமதி தேர்ந்த நடிப்பால் தனித்து தெரிகிறார். அவர் வசனம் பேசும் இடங்களும், அதுக்கான டைமிங்கும் பார்வையாளர்களுக்கு எமோஷனல் டச். குறிப்பாக ‘நான் எதும் தப்பு பண்ணிடேனாப்பா’ என அவர் பேசும் இடம் உருகவைக்கின்றன. காவல் துறையை எதிர்த்து நிற்கும் கம்பீரமான கம்யூனிஸ்ட்டாக ஈர்க்கிறார் ஹரி (மெட்ராஸ் ஜானி). தவிர, ஜி என் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி யதார்த்த நடிப்பால் கவனிக்க வைக்கின்றனர்.

வறுமையோடியைந்த வாழ்வை கடக்கும் ஒருவனின் பகற்பொழுதின் அத்தனை அம்சங்களையும் அடுக்கி அடுக்கி அவரின் உலகத்திற்குள் நம்மை நுழைக்கிறார் இயக்குநர் ஷான். தன்னை ‘பாரத மாதா’ என பாவித்துக்கொள்ளும் ‘பொம்மை நாயகி’ கயவர்களால் காவு வாங்க முற்படும்போது, ‘பாரத மாதா’ என பெண்கள் பெயரால் போற்றப்படும் நாட்டில் பெண்களின் நிலைமை என்னவாக இருக்கிறது என்பதை அப்பட்டமாக பேசுகிறது படம். அதனை வைத்து இறுதியில் சொல்லப்படும் வசனமும் கச்சிதமான முடிவுக்கு வழிவகுக்கிறது.

படத்தின் இடையிடையே வரும் பாட்டி கதாபாத்திரம் அதன் எம்ஜிஆர் பாடல்களும் மெட்ராஸ் ஜானி கதாபாத்திரத்தை நினைவூட்டுகின்றன. கதையோடு பயணிக்கும் முஸ்லிம் கதாபாத்திரம், வழக்கறிஞராகவும், காவல் துறை உயரதிகாரியாகவும் காட்சிப்படுத்தப்படும் பெண்கள் நீதியின் பக்கம் நிற்பது, கம்யூனிஸ்ட் கட்சியினரின் நீதிக்கான போராட்டங்கள், ஊர் -சேரி பிரிவினை என படம் அயற்சியில்லாமல் எங்கேஜிங் திரைக்கதையுடன் கடப்பது பலம்.

16753303863057.jpg

‘ஒரு சமூகத்துல ஒரு பொண்ணு படிச்சா அந்த சமூகமே படிச்ச மாதிரி’, ‘சட்டமும் நீதிமன்றமும் நல்லதும் பண்ணுது கெட்டதும் பண்ணுது’, ‘அவன் உன்ன அடிமைன்னு நெனைக்கும்போது நீ அவனை எதிர்க்கிற ஆயுதமா மாறணும்’, ‘தீர்ப்பு கொடுத்ததுக்கு அப்றம் நீதியும் தரவேண்டியிருக்கு’, ‘போற உசுறு போராடியே போகட்டும்’ போன்ற வசனங்கள் ஈர்ப்பு.

குறிப்பாக நீதிபதியிடம் ஸ்ரீமதி பேசும் இடம் கைதட்டலை பெறுகிறது. மானம், கௌரவம் என்ற பெயரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படுபவர்கள் மிரட்டப்படுவதையும், அதிலிருந்து மீள வேண்டிய தேவையையும், பெண் கல்வியின் அவசியத்தையும் பதிய வைக்கும் இடங்களுக்காக பாராட்டுகள்.

16753303993057.jpg

சுந்தரமூர்த்தி இசையில் ‘அடியே ராசாத்தி’ பாடலில் ‘எல்லோரும் 10 மாசம் தாண்டா இதுல சாதி சண்ட ஏன்டா’ போன்ற வரிகளும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. அதிசயராஜின் சிறு லென்ஸின் வழியே விரியும் பெருங்கடலும், யோகிபாபு - ஸ்ரீமதியின் ஈரத்தடங்களும் காட்சிப்படிமங்களாக தேங்குகின்றன.

ஒருகட்டத்தில் படம் முடிந்துவிட்டது என நினைக்கும்போது, அது தொடர்ந்து மற்றொரு க்ளைமாக்ஸுக்காக நீளும்போது அயற்சியும் நீள்கிறது. கூடவே பிரசார நெடியும். இறுதியில் யோகிபாபு செய்யும் செயல்கள் செயற்கை. எதிர்மறை கதாபாத்திரம் ஒன்று திடீரென திருந்துவதற்கான அழுத்தமான பின்புலமில்லை. எனினும், ஒட்டுமொத்தமாக கவனிக்கும்போது, ‘பொம்மை நாயகி’ பார்த்து அனுபவிக்கும் எங்கேஜிங்கான திரையனுபவம்!

பொம்மை நாயகி Review: ஓர் எளிய தந்தையின் போராட்டமும், திகட்டாத திரை அனுபவமும்! | Bommai Nayagi movie review - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

பொம்மைநாயகி பகிர்வுக்கு நன்றி......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

பொம்மை நாயகி சினிமா விமர்சனம் - ஹீரோவாக யோகி பாபு வெற்றி பெற உதவுமா?

பொம்மை நாயகி

பட மூலாதாரம்,TWITTER/OFFICIALNEELAM

3 பிப்ரவரி 2023, 10:36 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சாதிய தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அப்பா - மகள் பாசம் எனப் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக வெளி வந்திருக்கும் பொம்மை நாயகி படம் எப்படி இருக்கிறது?

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் தியேட்டரில் வெளியாகியுள்ளது பொம்மை நாயகி திரைப்படம். இந்தப் படத்தில் யோகி பாபு நாயகனாகவும், சுபத்ரா நாயகியாகவும், குழந்தை கதாபாத்திரத்தில் ஸ்ரீமதியும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்கியுள்ளார்.

 

படத்தின் கதை என்ன?

பொம்மை நாயகி

பட மூலாதாரம்,TWITTER/OFFICIALNEELAM

கடலூர் அருகேயுள்ள கிராமத்தில் மனைவி, மகளுடன் வாழ்ந்து வருகிறார் வேலு(யோகி பாபு). யோகி பாபுவின் தாய் இரண்டாம் தாரம் என்பதாலும், அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், சொந்த அண்ணனாலும், சொந்த ஊரிலும் யோகிபாபு பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார்.

இந்நிலையில் ஊர் திருவிழாவின்போது தனது அண்ணனின் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் யோகி பாபுவின் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். இதை ஊரில் யாரும் தட்டிக் கேட்காத நிலையில், காவல்துறை மற்றும் நீதித்துறையின் உதவிக்காக யோகி பாபு நாடிச் செல்கிறார். இறுதியில் அவருக்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் மீதிக் கதை.

படம் வெளியீட்டுக்கு முன்பே திரைப் பிரபலங்களுக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இவர்கள் அனைவரும் தெரிவித்த கருத்துகளால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பொம்மை நாயகி இருக்கிறதா என ஊடகங்களின் விமர்சனங்களை அறிந்து கொள்வோம்.

Twitter பதிவை கடந்து செல்ல
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

என்ன சொல்கின்றன ஊடகங்கள்

"பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்து படம் விரிவாகப் பேசி இருக்கிறது. பா. இரஞ்சித் தயாரிப்பு என்றாலும் வழக்கமான அம்பேத்கர் புரட்சி வசனங்கள் பெரிதாக இடம் பெறாமல் இடதுசாரிய சிந்தனையை கருத்தியலாகக் கொண்டு இயக்குநர் திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.

நீதிமன்றக் காட்சிகளில் இயக்குநர் இன்னும் கவனம் செலுத்தி வசனங்களை எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். யோகி பாபுவின் நேர்த்தியான நடிப்பு படத்தில் நிறைவாக இருக்கிறது," என்று தினமணி நாளிதழ் விமர்சனம் எழுதியுள்ளது.

சமூகத் தீண்டாமைக்கு எதிரான கேள்வி

பொம்மை நாயகி

பட மூலாதாரம்,TWITTER/OFFICIALNEELAM

"தன்னை எப்போதுமே ஒரு காமெடியன் என்று சொல்லிக் கொண்டாலும், அவரால் கனமான கதாபாத்திரங்களையும் நேர்த்தியாகக் கையாள முடியும் என்பதை இந்தப் படத்தின் மூலம் யோகி பாபு நிரூபித்து இருக்கிறார். படத்தில் அவர் எங்குமே சிரிக்கவில்லை."

"சமூகத்தில் இன்னும் நிலவும் தீண்டாமை குறித்து படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் கேள்வி எழுப்பும் விதத்தில் அமைந்துள்ளது," என்று இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் விமர்சனம் வழங்கியுள்ளது.

யோகி பாபு ஏமாற்றவில்லை

"சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட அப்பாவி அப்பாவாக வரும் யோகி பாபுவின் நடிப்பு ஏமாற்றவில்லை. அவரது மனைவி கதாபாத்திரமும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

உணர்வுப்பூர்வமான கதையை படமாக்கும்போது அந்த கதாபாத்திரத்தின் மீது வர வேண்டிய அனுதாபம் ஏற்படாமல் போனது படத்தின் ஜீவனைக் குறைக்கிறது.

படத்திற்கு ஒளிப்பதிவும், இசையும் காட்சிகளின் உணர்வை அதிகரிக்க உதவி இருக்கிறது," என்று தினமலர் நாளிதழ் விமர்சனம் வழங்கியுள்ளது.

நீதிக்காக போராடும் அப்பா

பொம்மை நாயகி

பட மூலாதாரம்,TWITTER/OFFICIALNEELAM

அப்பாவியாக அதே நேரத்தில் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து போராடும் கதாபாத்திரத்தில் யோகி பாபு மிளிர்கிறார். ஆனால் அவரது நடிப்பைத் தவிர படத்தில் வரும் பெரும்பாலானோரின் நடிப்பு கதையுடன் ஒன்றவில்லை என்று தி நியூஸ் மினிட் விமர்சனம் எழுதியுள்ளது.

படத்தின் பேசப்படும் கதையும், அரசியலும் சிறப்பாக இருந்தாலும், திரைக்கதை அமைப்பு சில நேரங்களில் குழப்பத்துடன் நகர்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

பாரத மாதா யார்?

"ஒடுக்கப்படும் சமூகத்தினருக்கு நீதி கிடைக்க நடத்தப்படும் போராட்டத்தை பொம்மை நாயகி காட்சிப்படுத்த முயற்சி செய்துள்ளது.

நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீர்ப்பு நீதிமன்றத்துக்கு வெளியே எப்படி மதிக்கப்படுகிறது என்பதை இயக்குநர் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார். படத்தில் வரும் சீன்கள் தனித்தனியாக நன்றாக இருக்கிறது.

ஆனால் திரைக்கதையாகப் பார்க்கும் போது கதையை வேகமாகச் சொல்ல வேண்டும் என்ற இயக்குநரின் முனைப்பு தெரிகிறது," என தி இந்து ஆங்கில நாளிதழ் விமர்சனம் எழுதியுள்ளது.

படத்தின் இறுதியில் ‘பாரத மாதா யார்’ என்று இயக்குநர் ஷான் விவரிக்கும் காட்சிகள் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது என தி இந்து எழுதியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cw409xdye3vo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.