Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோழ - பாண்டிய - ஐரோப்பிய நகரங்களுக்கிடையே ஒற்றுமை -சப்பானிய தமிழறிஞர் கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சோழ - பாண்டிய - ஐரோப்பிய நகரங்களுக்கிடையே ஒற்றுமை

சப்பானிய தமிழறிஞர் கண்டுபிடிப்பு

மொழிபெயர்ப்பு - விண்மணிவண்ணன்

தமிழர்கள் 12-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு நாகரிகமாக அமைந்திருந்தது என்பது பற்றி உலகளாவிய பார்வை ஒன்று கிடைத்திருக்கிறது. அண்மையில் 26-07-2007- ஆம் நாளிட்ட இந்து நாளேட்டில் இது பற்றிய செய்தி வெளி யிடப்பட்டிருக்கிறது. அதன் தமிழாக்கத்தை நமது வாசகர்கள் அறிந்து கொள்ள வெளியிடுகிறோம்.

பிற்காலச் சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் நகரங்கள் மற்றம் வணிகத்தின் மாறுதல்களும் தன்மைகளும் ஐரோப்பிய மற்றும் சப்பான் நாடுகளில் ஏற்பட்டவைக்கு இணையாகவே அமைந்தன என்று சப்பானின் தாய்ஷோ பல்கலைக் கழகப் பேராசிரியரும் டோக்கியோ பல்கலைக் கழகப் பேராசிரியருமான நொபோரு கராஷிமா அவர்கள் கூறுகிறார்கள்.

நொபோரு கராஷிமா அவர்கள் தென்னிந்தியாவிற்குத் தமது மூன்றுவாரச் சுற்றுப்பயணமாக வருகை தந்தபோது சென்ற புதன் கிழமையன்று (25-7-2007) இந்து நாளேட்டின் செய்தியாளர் சந்தித்தபோது மேற்கூறியவாறு தமது கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: கி,பி 850 ஆம் ஆண்டிற்கும் கி.பி.1200ஆம் ஆண்டிற்கும் இடையே நகரங்களுக்கும் சிற்றூர்களுக்கும் சற்றும் வேறுபாடே காணவில்லை. இரண்டிலுமே மக்கள் பெருமளவில் நிலங்களைப் பேணிக்காத்து வேளாண்மை செய்து வந்துள்ளனர். அவர்கள் சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் அரசுப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்கள்.

ஆனால் 12-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே வேளாண்மையிலிருந்து மக்கள் வாழ்க்கை முறை வணிக வளர்ச்சித் தன்மையில் பெருகி நகரங்கள் உருவாயின. இவை திடீரென உருவாகவில்லை. கி.பி. 10 - ஆம் நூற்றண்டிலேயே வணிக வளர்ச்சித் தன்மைக்கு வித்திடப்பட்டது எனலாம். அதற்கு ஒரு காரணம் ஐந்நூற்றுவர் என்கிற வணிகச் சாத்து அமைப்பு என்று கூறலாம். இந்த ஐந்நூற்றுவர் சாத்தமைப்பு ஊர் தோறும் அவ்வப்போது குழுக் குழுவாகப் பயணம் செய்து வணிக வளர்ச்சியைத் தோற்றுவிக்கப் புதிய நகரங்கள் கி.பி 10-ஆம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றலாயின. சாதி அமைப்புகள் உடன் உருவானதால் நகரங்களின் வளர்ச்சி இன்னும் வேகம் பெற்றது. இதனால் நகரங்களுக்கும். பேரூர்களுக்கும் தனித்துவமும், வலுவும், முக்கியத்துவமும் கூடலாயிற்று.

இவ்வாறு நகரங்களின் வளர்ச்சி தமிழகத்தில் பிற்காலச் சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் காலத்தில் குறிப்பாக கி.பி.850 முதல் கி.பி1200 வரை எப்படி அமைந்தது என்பதைப் பற்றி புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் திரு. ஒய். சுப்பராயலு என்பவருடனும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் திரு.பி.சண்முகம் என்பவருடனும் முற்கூறிய சப்பான் ஆய்வாளர் கராஷிமா கூட்டாக ஆய்வு செய்து அண்மையில் தான் ஆய்வை முடித்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

கி.பி.850-க்கு முன் மிக முற்பட்ட காலத்தில் அதன்பின் இடைப்பட்ட காலத்திலும் தமிழகத்தில் நகரத்திற்கும் கிராமத்திற்கும் சற்றும் வேறுபாடே இல்லாமல் இருந்தது என்பதைச் சான்றுகளுடன் ஆய்வுப் பேராசிரியர் கராஷிமா சுட்டிக்காட்டுகிறார். சிற்றூர்க்கும் அதன் தன்மைக்கு மாறாக வேகமாக வணிக வளர்ச்சியுடன் கூடிய நகரத்திற்கும் தெளிவாக வேறுபாடு தெரிந்த காலம் கி.பி.1201 முதல் கி.பி.1350 வரை உள்ள காலம் எனலாம் இதற்கு முக்கிய காரணம் மேற்கு - கிழக்கு நாடுகளிடையே சக்தி வாய்ந்த சோழ அரசர்கள் காலத்திலே நடந்த கடல் வாணிகம்தான் என்று சான்றுகளுடன் கூறுகிறார்.

அப்படியானால் ஐரோப்பிய மற்றும் சப்பான் நாடுகளிடையே தமிழகம் ஊடாடியதற்கு ஏதேனும் சான்றுகள் உளவா என்று கேட்டதற்கு அப்படியொன்றும் சான்றுகள் இலலை என்று கூறுகிறார். ஆனால் அந்தந்த நாடுகளில் சிற்றூர்களிலிருந்து தன்மை மாறி நகரங்கள் அமைந்த முறை ஒரே மாதிரி உள்ளன எனறு கூறுகிறார்.

இ,து ஒரு புதுக் கருத்தாக்கம் என்றும் அவர் விளக்குகிறார் ஐரோப்பிய ஆய்வுகளில் முந்தைய மரபுவழிப்பட்ட ஆய்வுக் கண்ணோட்டத்திற்கு மாறாக இப்போது ஒரு புதிய கருத்தாக்கம் உருவாகி உள்ளது என்றும் அது நகர மற்றும் கிராமங்களுக்கு இடையே ஒரு பொது இணைப்புத் தன்மையைக் காண்கிறது என்றும் கூறுகிறார்.

இந்த நகர கிராம உருவாக்கங்கள் தமிழகத்தைப் பொறுத்த வரை எப்போது பெரும் மாறுதலுக்கு உள்ளாயிற்று என்று ஒரு கேள்வியை எடுத்து வைத்து எழுபத்து நான்கு அகவை எய்திய கராஷிமா அவர்கள் விளக்கினார். அதாவது கி.பி.15-ஆம் நூற்றாண்டில் விஜய நகர சாம்ராஜ்ஜியத்தின் நாயக்க மன்னர்கள் காலத்தில் தான் நகரத்திற்கும் கிராமத்திற்கும் பெரும் வேறுபாடுகள் தோன்றலாயின. குறிப்பாக நகரங்கள் அதிக வளர்ச்சி பெற்று ஆளப்பட்டது நாயக்க மன்னர்களால் தான்.

மிக மும்முரமான வணிகத் தொடர்புகள் தமிழகத்திற்கும் அரபு நாடுகளுக்கும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், சீனாவிற்கும் தொடங்கியது ஆய்வில் குறிப்பிட்ட கால கட்டத்தின் இறுதிக்காலம் எனலாம். இந்தத் தொடர்புகளின் அடையாளமாக தாய்லாந்தின் தாக்குபா, மியான்மாவின் பகன், இந்தோனேசியாவின் சுமத்ரா போன்ற இடங்களில் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இந்தக் கல்வெட்டுகள் எல்லாம் வணிகத் தொடர்புகளைப் பற்றியே குறிப்பிடுகின்றன. வணிகச் சாத்துகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. இந்தக் கல்வெட்டுகளை ஆராய்ந்தால் அவை கி.பி.9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.12-ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று சப்பான் ஆய்வறிஞர் பேராசிரியர் கராஷிமா கூறுகிறார்.

இந்தக் கல்வெட்டுகளை ஆராய்ந்த போதில் சீனாவின் தென் பகுதியில் அமைந்த குவான்ஷோவ் என்ற இடத்தில் கிடைத்தவை கவனத்தை ஈர்ப்பவை, அவை தமிழ்ச் சமுதாயம் ஒன்று அந்த இடத்தில் சிவாலயம் ஒன்றைக் கட்டுவதற்கு எடுத்த முயற்சிகளைக் கூறுகின்றன. அதோடு அந்தக் கல்வெட்டுகள் எல்லாம் தமிழ்க் கல்வெட்டுகளாகப் படிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான எண்ணற்ற தமிழ்க் கல்வெட்டுகள் சீனாவில் குறிப்பிட்ட இடத்தில் கிடைப்பதாகவும் அவற்றை வெளியிட்டால் மறைந்த தமிழகத்தைப் பற்றிய பல வரலாற்று உண்மைகள் வெளிவரும் என்றும் திரு.கராஷிமா எடுத்துக் கூறி அது பற்றிய முயற்சிகளை உரியவர்கள் எடுத்துக் கூற வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார்.

அதோடு 1995 - ஆம் ஆண்டு தஞ்சையில் நடந்த உலகத் தமிழ் மாநாடு பற்றிய நடவடிக்கைக் குறிப்புகள் ஏற்கெனவே அச்சிடப்பெற்றுள்ளன என்றும் அதனை உலகறிய வெளியிட்டு அனைவரும் பயன்படச் செய்ய வேண்டியது அம்மாநாட்டுத் தொடர்புடைய அதிகாரிகளின் கடமை என்றும் அதனை அவர்கள் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அனைத்துலக தமிழாய்வுச் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் தாம் அவர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் கராஷிமா கூறினார்.

-தென் செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.