Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கிள் ஊழியர்களுக்கு காதலர் தினத்தில் 3 மடங்கு ஊதியம் வழங்கும் பிலிப்பைன்ஸ் மேயர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கிள் ஊழியர்களுக்கு காதலர் தினத்தில் 3 மடங்கு ஊதியம் வழங்கும் பிலிப்பைன்ஸ் மேயர்

Published By: SETHU

14 FEB, 2023 | 12:20 PM
image

வாழ்க்கைத் துணையின்றி தனியாக வாழும் 'சிங்கிள்' ஊழியர்களுக்கு, காதலர் தினத்தில் மேலதிக கொடுப்பனவு வழங்குவதாக பிலிப்பைன்ஸிலுள்ள நகரமொன்றின் மேயர் அறிவித்துள்ளார்.

ஜெனரல் லூனா நகரின் மேயரான மெத் புளோரிடோ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.  42 வயதான மெட் புளோரிடோவும் இன்னும் திருணம் செய்யவில்லை. தான் 'பிறந்தது முதல் சிங்கிளாக' இருப்பதாக அவர் கூறுகிறார்.

தன்னுடன் பணியாற்றும் ஊழியர்கள் 5 வருடங்களாக சிங்கிளாக இருந்தால், அவர்களுக்கு இன்றைய காதலர் தினத்தில் வழக்கமான ஊதியத்தைப் போன்று 3 மடங்கு ஊதியம் வழங்கப்படும் என மேயர் புளோரிடோ அறிவித்தள்ளார.

இன்றைய தினம் அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன். காதலர் தினத்தில் அவர்களுக்கு எவரும் சொக்லேற், மலர்கள் வழங்க மாட்டார்கள். எனவே அவர்களுக்கு இத்தகைய  ஊக்குவிப்புகளை வழங்க நாம் தீர்மானித்தோம். அவர்களை சிலர் நேசிக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அவர்கள் உணரலாம்' என புளோரிடோ கூறியுள்ளார். 

3 ஆவது வருடமாக இத்திடத்தை புளோரிடோ அமுல்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி மாநகர சபையில் 289 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களில் இந்த விசேட கொடுப்பனவை பெறுவதற்கு பல கட்ட தேர்வுகளின் பின்னர் 37 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

தெரிவுசெய்யப்பட்டவர்களில் மிக வயதானவர் 64 வயதான ஒருவராவார்.

தெரிவுசெய்யப்பட்ட ஊழியர்களிடம், அவர்கள் இறுதியாக துணையொன்றைக் கொண்டிருந்த காலம், பிரிவுக்கான காரணம் குறித்தும் விசாரிக்கப்பட்டது.

'இச்சிறிய நகரில் அனைவரும் ஒருவரையொருவர் அறிவார்கள். எனவே யாரும் எதையும் மறைக்க முடியாது' என மேயர் மெட் புளோரிடோ கூறியுள்ளார். 

இத்திட்டத்துக்காக 28,000 பெசோவை (சுமார் 185,000 இலங்கை ரூபா, 43,000 இந்திய ரூபா) தனது சொந்த நிதியிலிருந்து மெட் புளோரிடோ வழங்குகிறார். 

இன்று செவ்வாய்க்கிழமை மாலை இக்கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இரவில் 'டேட்டிங் கேம்' உட்பட கேளிக்கைகளும் நடத்தப்படவுள்ளன. 

சிலவேளை, இதில் அவர்கள் ஜோடியாகவும் கூடும் என்கிறார் புளோரிடோ.

https://www.virakesari.lk/article/148168

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.