Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடத்தப்பட்ட நியூ ஸிலாந்து விமானியின் படங்களை பப்புவா கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தப்பட்ட நியூ ஸிலாந்து விமானியின் படங்களை பப்புவா கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டனர்

Published By: SETHU

15 FEB, 2023 | 01:04 PM
image

இந்தோனேஷியாவின் பப்புவா பிராந்திய கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டு, பணயக் கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நியூ ஸிலாந்து விமானி காணப்படும் படங்களை மேற்படி கிளர்ச்சியாளர்கள்  வெளியிட்டுள்ளனர்.

பிலிப் மெஹ்ர்டென்ஸ் எனும் இந்த விமானி, இந்தோனேஷியாவின் சுசி எயார் நிறுவனத்துக்காக பணியாற்றிவந்தவர். 

கடந்த 7 ஆம் திகதி, பப்புவா பிராந்தியத்திலுள்ள தூரப்பிரதேசமொன்றிலுள்ள பரோ விமான நிலையத்தில் தனது விமானத்தை அவர் தரையிறக்கிய பின்னர் அவ்விமானியும் விமானத்திலிருந்த பயணிகளும் திரும்பிவரவில்லை.

Pilot-Philip-Mehrtens---Papua--3.jpg

 

மேற்கு பப்புவா தேசிய விடுதலை இராணுவம் எனும்  கிளர்ச்சி அமைப்பானது அவரை சிறைபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், அவரின் விமானத்தையும் எரித்ததாக தெரிவித்துள்ளது.

அத்துடன், விமானி மெஹ்ர்டென்ஸ் காணப்படும் வீடியோ படங்களையும்  மேற்கு பப்புவா தேசிய விடுதலை இராணுவம் வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிக்கள், அம்புகள் முதலான ஆயுதங்களை ஏந்திய கிளர்ச்சியாளர்களுடன் விமானி மெஹ்ர்டென்ஸ் அப்படங்களில் காணப்படுகிறார்.

Pilot-Philip-Mehrtens---Papua--2.jpg

பரோ விமான நிலையத்துக்கு விமானங்கள் வருவது நிறுத்தப்பட வேண்டும் என மேற்படி கிளர்ச்சியாளர்கள் முன்னர் கூறியதுடன், பப்புவாவின் சுதந்திரத்தை இந்தோனேஷியா உறுதிப்படுத்தும் வரை விமானி மெஹ்ர்டென்ஸ் விடுவிக்கப்பட மாட்டார் எனவும் மேற்படி கிளர்ச்சியாளர்கள் முன்னர் கூறியிருந்தனர். 

பப்புவா தீவின் கிழக்குப் பகுதியில் பப்புவா நியூகினி நாடு அமைந்துள்ளது. அத்தீன் மேற்குப்; பகுதி இந்தோனேஷியாவின் ஒரு பகுதியாக உள்ளது. அப்பகுதியை தனி நாடாக்குவதற்காக மேற்கு பப்புவா தேசிய விடுதலை இராணுவம் எனும் கிளர்ச்சி அமைப்பு போராடி வருகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய பேராசிரியர் உட்பட பலர் பப்புவா நியூகினியில் ஆயுதமுனையில் கடத்தப்பட்டனர்

Published By: SETHU

20 FEB, 2023 | 05:00 PM
image

 

பப்புவா நியூகினியில் அவுஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட ஆராய்ச்சியாளர்கள் குழுவினர், ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து. பப்புவா நியூகினி ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களும் வழிகாட்டிகளும் இக்குழுவில் அடங்கியுள்ளனர் என பொலிஸாரும் ஏனைய அரச அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

எத்தனை பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் 4 அல்லது 5 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஞாயிறு காலை இவர்கள் ஆயுதமுனையில் மலைப்பகுதியொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனவும் இவர்களை விடுவிப்பதற்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் கப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கப்பப்பணம் கோரப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என  ஜேம்ஸ் மராப்பே தெரிவித்துள்ளார். 

இவ்விடயத்தை பப்புவா நியூகினி அரசாங்கம் மிக கவனமுடன் கையாள்கிறது எனவும் கடத்தப்பட்ட குழுவை விடுவிப்பதற்கு சாத்தியமான அனைத்து நடடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன  எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இக்குற்றச்செயல்களை அரசாங்கம் பொறுத்துக்கொள்ள மாட்டாது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் எங்கும் ஓட முடியாது. எமது நாட்டில் அவர்கள் எங்கும் ஒளிந்துகொள்ள இடமில்லை' எனவும் பிரதமர் மராப்பே கூறியுள்ளார். 

https://www.virakesari.lk/article/148691

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.