Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசா நடைமுறைகளில் மாற்றம் - படகுகள் வருகை அதிகரிக்கலாம் என அச்சம் - கண்காணிப்பை அதிகரிக்கின்றது அவுஸ்திரேலியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசா நடைமுறைகளில் மாற்றம் - படகுகள் வருகை அதிகரிக்கலாம் என அச்சம் - கண்காணிப்பை அதிகரிக்கின்றது அவுஸ்திரேலியா

Published By: RAJEEBAN

16 FEB, 2023 | 11:13 AM
image

புகலிடக்கோரிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ள நிலையில் படகுகளை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பான தற்காலிக பாதுகாப்பு  விசா விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதால் ஆள்கடத்தல்காரர்கள் அதனை பயன்படுத்தி புகலிடக்கோரிக்கையாளர்களை படகுகள் மூலம் அழைத்து வர முயலாம் என எதிர்கட்சி எச்சரித்துள்ள நிலையில்  அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் தமது கண்காணிப்பை அதிகரித்துள்ளதுடன் படகுகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு விமானங்கள் மற்றும்  கப்பல்களை பயன்படுத்துகின்றனர்.

இறைமை எல்லை நடவடிக்கையின் கட்டளை தளபதி விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சு வளங்களை அதிகரித்துள்ளது.

திங்கட்கிழமை அன்டனி அல்பெனிஸ் அரசாங்கம் 2013 இல் இறைமையுள்ள எல்லை நடவடிக்கை ஆரம்பமாவதற்கு முன்னர் படகுகள் மூலம் வந்தவர்களிற்கு 19,000 temporary protection and safe haven enterprise visa holders வழங்கப்பட்ட  இல் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது

இதன் மூலம் அவர்கள் நிரந்தர அந்தஸ்த்தினை பெறமுடியும்.

இந்த நடவடிக்கைகள் மூலம் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை - பாதிப்புகள் உண்மையானவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை என அடையாளம் காணப்பட்டவர்களிற்கு மாத்திரம் இந்த மாற்றங்களை செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

புதிதாக படகுகள் மூலம் வருபவர்களை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை எனவும்  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் இதன் காரணமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் குடியேற்றவாசிகள் நுழைய முடியும் என உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/148331

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மாதம் நான் யாழ்ப்பாணத்தில் நின்றிருந்த சமயம் சக்தி வானெலி என நினைக்கிறேன், அவுஸ்ரேலியவிற்கு சட்டவிரோதமாக படகுகளில் வருபவர்களை  தடுத்து நிறுத்துவதுடன் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் இந்த சட்டவிரோத பயணமுகவர்களை நம்பி ஏமாறவேண்டாம் என்ற கருத்தில் அறிவித்தல் ஒன்று நிகழ்ச்சிகளுக்கிடையில் வந்து கொண்டிருந்ததைக் கேட்கமுடிந்தது. அப்படி ஒரு அவுஸ் அரசின் அனுசரனையுடனான அறிவித்தலைக் கேட்பது இதுதான் முதல் தடவை 

574-A40-F0-4609-47-AC-921-E-52-CAE4-C309

அதே போல இந்த அறிவித்தல் பலகை, திருகோணமலையில் ஒரு சந்தியிலும் (உப்புவெளி வீதிக்கு அருகில் என நினைக்கிறேன்) அதேபோல கண்டி வீதியில்( யாழ்ப்பாணம் அல்லது கிளிநொச்சி தாண்டியவுடன்) நடப்பட்டிருந்தது.. அந்தளவிற்கு அவுஸ்ரேலியா அரசின் நடவடிக்கைகள் உள்ளது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.